மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப

Category :


உண்மையான மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப


நீண்ட வருடங்களுக்குப் பின் கடலூர் , உண்மையான மக்கள் பணியாளனை
திரு.ககன் தீப்சிங்பேடி மூலமாக பெற்றுள்ளது.

ஒரு மாவட்ட ஆட்சியர் எவ்வாறெல்லாம் மக்களுடன் பினைந்து பணியாற்றி அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவமுடியும் என்பதற்கு திரு.பேடி அவர்களே முன்மாதிரி;

கடலூர் மாவட்ட ஆட்சியரின் (கலெக்டர்) சாதனைகளில் சில,

  • சுனாமி பேரலை தாக்கியபொது,மனிதன் செய்த பணி இன்னும் பாதித்கப்பட்ட மக்கசொல்ல கேட்கலாம்.வெள்ளம் வந்து சாலைகள்(ரோடு) அறுத்துகொண்ட போது,ஜெ.சி.பி வாகனம் மூலம் சென்று மக்களை சந்தித்து குறையை சரி செய்தது.
  • கம்மியம்பேட்டை பாலம் அமைத்து ,புறவழிச் சாலை ஏற்படுத்திக் கொடுத்தது.
  • கடலூரின் பாழடைந்த பூங்காவை ,நந்தவனமாக்கி அதில் சிறுவர் பூங்காவை அமைத்து குழந்தைகளின் பாராட்டு மழையில் இப்போதும் நனைபவர்.
  • தேவணாம்பட்டினம் கடற்கரை (சில்வர் பீச்)-யை அழகு படுத்தி,அங்கே சுய உதவி குழுவினருக்கு சுயதொழிலையும் ஏற்படுத்தி கொடுத்தவர்.இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் மக்கள் கடலையும் பார்க்க வழி தந்தவர்.
  • முந்தைய ஆட்சியில் சிறந்த ஆட்சியர் என பரிசையும் பெற்றவர்,ஆட்சி மாறிய போது கூட இவரை மாற்றாமல் இருந்ததே,இவரின் சாதனைக்கு சான்று எனலாம்.
  • கடலூர் மாவட்டத்திற்கு இவர் வந்து மூன்றறை ஆண்டுகள் கழிந்தும் மக்களே கடன் என உழைப்பவர்.
  • 2006 நாட்காட்டி-யில் (காலண்டரில்) குடியரசு தலைவர் திரு.கலாமுக்கு போட்டியாக இடம் பெற்றவர்.நிறைய வணிக நிறுவனங்கள் திரு.பேடி- யின் புகைப்படத்தை தங்கள் நிறுவன நாட்காட்டியில் இட்டு பெருமை சேர்த்தனர்.
இவரின் சொந்த தகவல்கள்;

1.ஒரு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள்
2.அடிப்படையில் ஒரு இன்சினியர்-பாட்டியாலா தாபர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்
3.தமிழிலே பேச முயல்பவர்
4.இங்கு வருவதற்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆட்சியராக இருந்து பெரும் பரபரப்பாய் பேசப்பட்டவர்.மக்களின் பேரன்பையும்,பேராதரவையும் பெற்றவர்.

கடைசி வரி:(அட ....இலவசந்தாங்க!)

இவரிடம் இருந்து அரசாங்க ஊழியர்கள் நிறைய பாடம் படிக்கலாம்.(மனமிருந்தால்)






0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: