கடலூரின் அழுக்கு சில்வர் பீச்!

Category :

சில்வர் ( வெள்ளி)கடற்கரையில்!

விடுமுறையில் தங்கைகளின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு,தேவனாம்பட்டினம்
கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றோம்.நிறைய கூட்டம்.,அலை மோதியது.

இப்போதெல்லாம் சில்வர் (தமிழில் வெள்ளி)கடற்கரையில் நிறைய கடைகள்,அதிகமாக தின்பண்ட கடைகள்.மகளிர் சுய உதவி குழுக்களும்,மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்பினால் நிறைய கடைகள் வைத்துள்ளனர்.

கடலை கண்டவுடன் அனைத்து சிறுவர்களும் ஒடி காலை நனைத்தனர்,ஓட்டம்,ஆட்டம்
என பெரியவர்களுக்கு''டிமிக்கி''கொடுத்தனர்.மணலில் புரண்டனர்,நான் மிகவும் ரசித்தேன்,எவ்வளவு அழுக்காக்க முடியுமோ,அவ்வளவு ஆக்கினர் ஆடைகளை.

பின்னர் ஐஸ் க்ரிம் (தமிழாக்கினால் துப்புவார்கள்)சாப்பிட்டோம்.,திரும்பவும் விளையாட்டு.,சிறிது நேரம் கழிந்தது,அடம் பிடித்தனர்,சுண்டல் வேண்டுமென்று.,
பட்டானி சுண்டலை தேர்வுசெய்தனர்.இப்போது தான் தலைப்பை நினைவுக்கு
கொண்டுவரவேண்டும்.

சுண்டலை காலி செய்துவிட்டு காகிதத்தை தூக்கி எறிந்தனர்.,அம்மா,மனைவி,தங்கைகள் மற்றும் குழந்தைகள்...யாருமே சில அடி தொலைவில் குப்பை தொட்டிகளுடன் பிறந்த
குரங்கையோ,முயலையோ கண்டு கொள்ளவில்லை.நான், அவர்கள் போட்ட குப்பைகளை குரங்கிடம் போட்டேன்.,பின்னர் கடிந்தும் கொண்டேன்,நம்மூர் பீச்-ஐ நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால்,அசிங்கம் நமக்குத்தானே என்றேன்.,யாரும் காதில் கேட்டதாக தெரியவில்லை.

இப்படித்தான் அழகிய கடற்கரை அசிங்கமாக ஆகிறது.அடுத்த முறை தான் பார்க்கவேண்டும் என் குடும்பத்தினரை.,

ஆகவே என் இனிய கடலூர் உறவினர்களே,நாமும் கடலூரை ,கடற்கரை-யை சுத்தமாக்கி பாண்டிச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை கவரலாமே!இதனால் நம்
பொருளாதாரம்,சிறிதேனும் உயருமல்லவா!

வீட்டில்கூட இப்படிதான்,குப்பைகளை போட்டுவிட்டு பெறுக்குவது., எங்கள் வீட்டு பிளாஸ்டிக் குப்பைதொட்டி காத்து கொண்டிருக்கிறது என்று என் மேல் குப்பை விழுமென.?.

கடைசி வரி:(அட இலவசந்தாங்க)

  • சுத்தம் சோறு போடும்,
  • அசுத்தம் சேறு போடும்!

நான் என் கணினி-யில் கூட குப்பையை போடுவது இல்லை.அதுபோல் நீங்களும்
தமிழ்மணத்தில் குப்பையை போடாதீர்கள்.(மன்னியுங்கள் இந்த குப்பையை போட்டதற்கு)

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: