நண்பனா? மனைவியா??..ஏன் இந்த முடிவு???

Category :

ஒரு வருத்தம் தரும் கடந்த வார நிகழ்வு,.

இரு இனைபிரியா கேரள நண்பர்கள்,ஜாபர் அலி மற்றும் சந்தோஷ்(27).கடந்த ஒன்பது வருடங்களாக ஒரே செருப்பு கடையில் பணி,இதன் மூலம் நட்பு இறுக்கமானது.பொருளாதார உயர்வுக்கு என போனவாரம் சந்தோஷ்
ஷார்ஜா(Sharjah)சென்றார்,வேலை கிடைத்து அல்ல.வேலை தேட.
பொதுவாகவே மலையாளிகள் வேலை தேட துபாய் போவது என்பது சாதாரணம்.இப்பொது விமான டிக்கட்டும் மலிவான விலையில்
கிடைப்பதால் "விசிட் விசா"வில் வேலை தேடும் படலம் .

சந்தோஷ் ஷார்ஜா வந்த இரு தினங்களில் ,ஜாபர் அலி நண்பன் சந்தோஷ்-இன் பிரிவினால் துயரப்பட்டு ,மன இறுக்கத்தினால் மாரடைப்பினால் மரணம் அடைகிறார்.இத்துயரச் செய்தியை மற்ற நண்பர்கள் சந்தோஷ்-க்கு தெரிவிக்க அதிர்ச்சியடைகிறார்.உடனே நாடு போகவேண்டும் என ஷார்ஜா-வில்
ரூமில் உடன் தங்கியோரிடம் தெரிவிக்கிறார்.அவர்கள் சமாதானப்படுத்தி,
இப்போது தான் நிறைய செலவு செய்து வந்துள்ளாய்.,இன்னும் வேலை கூட கிடைக்கவில்லை என்று கூறி உண்மையை புரிய வைக்கின்றனர்.

ஆனால் மனம் கேட்காமல்,இரவைக் கூட தள்ள இயலாமல் ,தூக்கில் தொங்கிவிடுகிறார்.
ஒரு நண்பனின் நட்பு மரணத்திலும் தொடர்கிறது. கொஞ்சம் யோசனை செய்திருந்தால் சந்தோஷ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இதில் கொடுமையான துயரம் என்னவெனில் தன் மனைவியையும்,ஒன்பது மாத குழந்தையையும் அநியாயமாய் கடைசி நேரத்தில் கூட மறந்தது.பாவம் ஜெயஷ்ரி(சந்தோஷ் மனைவி),தற்போது ஒன்பது மாத குழந்தையுடன்...(கணவனின் உயிரற்ற உடலுக்காக.,காத்துக் கொண்டு)



கடைசி வரி:
  • இந்த மாதிரி அனாவசிய தற்கொலைகள் இப்போது துபாயில் அதிமாகிவருகிறது.சிறு ஏமாற்றத்தை கூட தாங்க இயலாத ஒரு அவல வாழ்க்கை முறையை இப்பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திவிட்டதோ எனக் கவலை கொள்ளவேண்டி உள்ளது.
  • குறைந்தது மாதத்தில் 20 தற்கொலைகள் நிகழ்கின்றன,அதிகமானோர் மலையாளிகளே!
நன்றி:காமுதிஆன்லைன்,கேரளா மற்றும் கலீஜ் டைம்ஸ்

7 comments:

Anonymous said...

தற்கொலை மட்டுமல்ல, கொலை கொள்ளைகளும் கொஞ்சம் அதிகமானதுபோல தோன்றுகிறது!

கதிர் said...

தற்கொலை மட்டுமல்ல, கொலை கொள்ளைகளும் கொஞ்சம் அதிகமானதுபோல தோன்றுகிறது!

Mugundan | முகுந்தன் said...

ஆமாம் தம்பி,

என்ன சொல்ல!.,

Gnaniyar @ நிலவு நண்பன் said...

உறவுகளை பிரிந்து இருக்கின்ற தனிமையும் கொடுமையும்தான் அவர்களின் மனதை எந்த சோகததையும் எளிதில் எடுத்துக்கொள்ள முடியாத பலவீனத்தை தந்து விடுகின்றது...

rnatesan said...

நண்பரே,
நானும் கடலூர்தான்,இங்கேதான் குப்பைக் கொட்டிகொண்டுள்ளேன்!!நீங்க எங்கே இருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!!!

ஆப்பு said...

ஆப்பு இந்த வாரம்...

படித்து விட்டீர்களா?

வலைப்பதிவில் முதன்முறையாக...

யார் அந்த முகமூடி!!!!

முற்றிலும் புதிய தகவல்களுடன்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

http://nilavunanban.blogspot.com/2007/03/blog-post.html

எனது புத்தகத்திற்காக நான் இந்த தகவலை உபயோகித்துக் கொள்ளலாமா? வேறு ஏதேனும் தகவல் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்

நன்றி

Post a Comment

கருத்தைப் பகிர: