6ம்,8ம் குப்பையை பொறுக்கி.....?

Category :

போன வாரம் மதியம் சாப்பிட்டு கொண்டிருந்த போது அம்மா...மா......என
குரல் கேட்டபோது,பிச்சை கேட்கிறார்களோ என என் மனைவி
வெளியில் சென்று பார்த்தார்.பின்பு தண்ணீர் கேட்கிறார்கள் ,பேப்பர்
பொறுக்கற சின்ன பசங்க என எங்களிடம் சொல்லி விட்டு ஒரு பாட்டிலில்
கொண்டு சென்றார்.

திரும்பிய போது ரொம்ப சின்ன பசங்கங்க.. என சொன்னார்.,அப்படியே
அவசரமாக வாசலில் சென்று பார்த்து அதிர்ந்தேன்.
பெரியவனுக்கு 8வயது,சின்னவனுக்கு 6வயதும் இருக்கும்.புத்தகம் படிக்கும்
வயசில்,அதனுள் இருக்கும் காகிதத்தை பொறுக்கும் அவலம்.,

இருவரையும் அருகே அழைத்தேன்.,அச்சத்துடன் நெறுங்கி வந்தனர்.பள்ளிக்கூடம்
போவலையா என்றேன்.,இல்ல என்று சிறியவன் தான் பதில் சொன்னான்.ஏன்? என்றேன்.,அப்பா,
அம்மா நிறுத்திட்டாங்க......

உன் பெயர் என்ன என்று பெரியவனிடம் கேட்டேன்.,சங்கீதா என பெண் குரல் கேட்டு மீண்டும்
அதிர்ந்தேன்.ஆமாம்,கிராப் வெட்டிய தலை,கால் சட்டை,மேல் சட்டை என.....உன் பெயர் என்ன
என்று சின்ன பையனிடம் கேட்டேன்.,அரவிந் என அழகாக சொன்னான்., என்ன பாவம் செய்தனர்
இந்த இளம் தளிர்கள்.,

பெற்றவர்களே இந்த கொடுமையை செய்யும் போது,சட்டமெல்லாம் என்ன செய்யும்.அப்பா,என்ன வேலை செய்யறார் என்றேன்.?,கூலி வேலை என்றனர்.,அம்மா-வும் கூலி வேலை செய்யறாங்க என்றனர்.

எத்தனையாவது வரைக்கும் படிச்சீங்க என்றேன்.,ரெண்டாவது என்றனர்.,யார் பேப்பர் பொறுக்க
சொன்னது என்றேன்.,அப்பா தான் என்றனர்.,வீடு எங்கே என்றபோது கேப்பர் மலைக்கு பக்கத்தில்
என கூறினர்.சிறுவன் போலான்கா....என அக்காவை அழைத்தான்., நான் சாப்பிடறீங்களா எனக்
கேட்டும் மறுத்துவிட்டனர்.

கடைசியாக ஒரு நாளைக்கு எவ்ளோ சம்பாதிக்கறீங்க என்றேன்.,இருவது முதல் அம்பது ரூபா
என்றனர்,

அதற்கு மேலும் அவர்களுக்கு பொறுமை இல்லாமல்,அவரவர் சாக்குகளை தூக்கிக்கொண்டு
நடந்தனர்.

நான் அவர்களை பார்த்துக்கொண்டே இருந்தேன்,எங்கள் தெருவை கடக்கும் வரை. அன்றைய தினம்
என் மனதின் பாரம் குறைய வெகு நேரம் ஆகியது.அடுத்த முறை அவர்களைக் கண்டு ஏதாவது
செய்ய ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

கடைசி வரி:
அந்த இளந் தளிர்கள் இன்னும் என் கண்ணில் அகப்படவில்லை.,,,,,,அடுத்த நாள்
குழந்தைகள் தினம்.,
பள்ளிகளில் கொண்டாட்டம்.,,இந்த தளிர்கள் எந்த ஊரில் பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்தார்களோ?....