கொலைகாரிகளாவது ஏன்?

Category :


மன்னிக்கவும்,இந்த சொல்லை பயன்படுத்தியமைக்கு,நம்முடைய சில சகோதரிகளின் செயல் தான் இப்படி எழுதத் தூண்டியது.

"கொலையும் செய்வாள் பத்தினி"- பழமொழி; இப்பொது,காதலனுக்காக
(அப்பாவி) கணவனையே கொல்கிறார்கள்.

கள்ள காதலனுக்காக,கல்யாணம் செய்த சில நாட்களிலேயே அப்பாவி கணவனைக் கொன்றது.கள்ள காதலனுக்காக,பெற்ற தாயையே கொன்றது;
கள்ள காதலனுக்காக,மாமியாரையே கொன்றது.இந்த கேவலங்கள் எல்லாம்,தமிழ் நாட்டில் தான்(ஜுன் மற்றும் ஜுலை 2006-யில்) அரங்கேறி உள்ளன.

இதற்கெல்லாம் ஒரு வரியில் பதில் சொல்லலாம்.,நடுத்தர மக்களின் பொருளாதார,சமூக மாற்றங்கள் தான்.இன்றைய குழந்தைகள் தகவல்,தொழில்நுட்ப, அறிவியல் புரட்சி-யினால் புத்திசாலிகளாகவே பிறக்கிறார்கள்.தொலைக்காட்சி ஊடகங்கள் தான் மக்களை சிந்திக்கவும்,சிதைக்கவும் செய்ய துணைபுரிகின்றன.

இன்றைய காலகட்டத்தில் வயதுக்கு வந்த இளைஞர்,இளைஞிகளை நெறிப்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மிக அதிகம்.கல்லூரி செல்லும் பருவம் வந்தவுடன் பிள்ளைகளிடம் மனம் திறந்து பேசவென்டும்.காதல்,காமம் பற்றிய தகவல்களைக் கூட பறிமாறிக்கொள்ளலாம்,குறை நிறைகளை பேசலாம்.

கல்யாணம் ஆன பிறகு,கணவனும் மனைவின் மனதைப் புரிந்து கொண்டு,இல்லறத்தில் சமபங்கு கொடுக்க வேண்டும்.காமம் என்பது பொதுவானது,அதை இரு பாலரும் உணர்ந்து,வாழ்க்கையை இனிமையாக்க வேண்டும்.நிறைய பெண்கள் தடம் மாறுவது,கணவன்,
மனைவியின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாததே காரணம்.
அதனால் தான் தற்போதைய ஒழுக்க சீர்கேடுகள்.

பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
பெற்றோர் தவறு செய்து கொண்டு,பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக
வளர்க்க முயல்வது கேலிக்குறிய செயல் தான்.

அதேமாதிரிதான் ஊரெல்லாம்,மேய்ந்து கொண்டு வீட்டில் உள்ளவள்
மட்டும்,உத்தமியாய் வாழ உதைத்து கொடுமைப்படுத்துவதும்,தடையை
மீறத்தான் வழி வகுக்கும்.

ஆண்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்,பெண்கள் இப்பொது பொருளாதாரத்தில் முன்னேறியும்,தற்சார்பும் பெற்று விட்டார்கள்.அதனால் ஏமாற்றவோ,ஏதேச்சிகாரம் செய்யவோ முடியாது.

புரிந்து கொண்டு வாழ்வோம்.(அடுத்தவர் மனைவியுடனோ அல்லது அடுத்தவர் கணவனுடனோ அல்ல!)

கடைசி வரி:

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்'பூ''
அதை அன்பால் மட்டுமே நுகரமுடியும்!