கடலூர் குலுங்கியது....நேற்று!

Category :

ஆமாம்.பாட்டாளி இளைஞர் சங்க மது எதிர்ப்பு மாவட்ட பேரணி,
மற்றும் மாநாட்டினால் கடலூர் நகரம் கல கலகலத்துப் போனது.

உண்மையிலேயே மருத்துவர் ராமதாசு அவர்களை பாராட்டியே தீர வேண்டும்,இந்த விடுதலைப் போராட்ட அழைப்பிற்கு.....அதாவது தமிழக இளைஞர்களை மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது....பேரணியை வெற்றியாக்கிய பெருமை ச.ம.உ வேல்முருகனை சேரும்.
மாநாட்டில் கலந்து கொண்டோர்....மருத்துவர் ராமதாசு,மத்திய அமைச்சர்அன்புமணி,மத்திய தொடர் வண்டி(ரயில்) இணையமைச்சர் வேலு,பா.ம.க தலைவர் மணி ஆகியோர்.

மாநாட்டில் நிச்சயமாக கலந்து கொண்டோர் 35,000-யை தாண்டும்.இது சுமார் இரவு ஒன்பது மணி நிலவரம்.மஞ்சை நகர் மைதானம் முழுவதிமே நிரம்பி இருந்தது.எங்கும் இளைஞர்கள்,இளைஞர்கள்...முக்கியமாக அந்த மைதானத்தில் ஒரு இடத்தில் கூட புகையை (சிகரெட்டு)காண இயலவில்லை.தண்ணீர் பாக்கட்டுகளை மட்டுமே காண முடிந்தது.இளைஞர்கள் ஒரு நாள் விரதம் இருந்தார்களா...இல்லை.....உண்மையான மாற்றமா எனத் தெரியவில்லை.

நேற்று மதியத்திற்கு மேல் போக்குவரத்து முற்றிலும்....தடை பட்டது...வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.போலிசார் இவ்வளவு கூட்டத்தை எதிர் பார்க்காததின் விளைவு.....

முக்கியமாக பாராட்டியே ஆக வேண்டிய மற்றுமொரு செயல்.....கடலூர் நகர டிஜிடல் பேனர்கள் சுமார் 2500 சிறிது,பெரிது என இருந்தவை இன்று காலையிலேயே அகற்றப் பட்டு இருந்தது.

கடைசி வரி:

பா.ம.க-வின் அரசியல் நிலையை விமரிசிக்கலாம்.....ஏனெனில் அவர்கள் கடந்த கால நிகழ்வுகள் அப்படி.பா.ம.க-வின் சில செயல்கள், கொள்கைகள் கேலிக் கூத்தாக கூட இருந்துள்ளன முன்பு....

ஆனால் இன்றய சமுதாய சீர்கேட்டை துடைக்க,வருங்கால தலைமுறையினரை, குறிப்பாக இளைஞர்களை மது மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீட்க.....ஒரு விடுதலை போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ள.....மருத்துவர் ராமதாசை பாராட்டியே ஆக வேண்டும்.

4 comments:

Anonymous said...

I too noticed Dr. Ramadhas stands many times very correct. He and Thiruma should keep continue such things.

Dear fellow south based caste leaders if you relly wish to do good for your people first learn from Dr. Ramdhas.

Thanks for your posting Mugu

மா சிவகுமார் said...

நானும் பாராட்டுகிறேன். இந்த மது அரக்கனை விரட்டி அடிக்க பாமகவின் காலைக் கூடப் பிடிக்கலாம் :-)

வெட்கமில்லாமல் ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி அரசு நடத்திய ஜெயலலிதாவுக்கும், நடத்தும் கருணாநிதிக்கும் கண்டனங்கள்.

இந்த வருமானத்தில் அரசு நடத்துவதை விட முச்சந்தியில் பிச்சைப் பாத்திரம் வைத்து காசு திரட்டுவது மேலானது.

அன்புடன்,

மா சிவகுமார்

Anonymous said...

கல்லூரியில் படித்த காலத்தில் நானும் பாட்டாளி இளைஞர் பேரவை செயலாளராக இருந்துள்ளேன்...

:)

மஞ்சக்குப்பம் பற்றிய செய்தி தேடலில் உங்க பதிவு கண்ணில் மாட்டியது...!!!

நிறைய எழுதுங்க...!!!

Mugundan | முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி...சிவகுமார்,செந்தழல் ரவி,ஜஸ்டின்....

சில சமுதாய புரட்சிகள்....உலக அளவில் 10 அல்லது
20 ஆண்டுகள் கழிந்தே மக்களை உணர வைக்கின்றன.

இதில் நம் பெரியார் முன்னனியில் உள்ளார்....அவர் அன்று செய்த
அயராத போராட்டம் தான்....இப்போது நம் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள்
உயரே வர காரணம் என்பதை உவகையுடன் கூறலாம்....

அன்புடன்,
முகு

Post a Comment

கருத்தைப் பகிர: