நிமிட்ஸ்‍‍‍‍‍ வருகையும்,நம் குய்யோ,முய்யோ‍-வும்!

Category :

ஆமாம்.ஜெ முதல் துறைமுக தொழிலாளர் சங்கம் வரை எதிர்க்கும் ஒரு செய்தியை பார்க்கிறோம்.

ஏன் இந்த ஊடகங்களும்,அரசியல்வாதிகளும் இந்த பலூனை ஊதி விளையாட்டு காட்டுகின்றனரோ தெரியவில்லை.ஒரு வேளை
வியாபாரமாக‌ இருக்கலாம்.அரசியல்வாதிகளுக்கு ஒரு இலவச விளம்பரத்திற்கான‌ வாய்ப்பாகவும் இருக்கலாம்.

இது ஒன்றும் புது நிகழ்வு அல்ல.ஏற்கனவே பிரஞ்சு அணுசக்தி கப்பல்கள் இந்தியா‍வுக்கு வந்து சென்றுள்ளன.அப்போது இந்த குரல்கள் எங்கு போயின‌ என்று புரியவில்லை?.

பொது மக்கள் கதிர் வீச்சினால் பாதிக்கப்படுவார்களாம்...என்ன கரிசனம்?இதுவே ரஷ்ய அணுசக்தி கப்பல் என்றால்,இந்திய காம்ரேடுகள்(தோழர் சீத்தாராம் யெச்சுரி உட்பட) வாயை சிவப்பு திரவத்தினால் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

இங்கே நம்ம கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையம்(2000MW) அமைக்கும் பணி வெகு வேகமாக‌ நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விசயமே.

இதனால் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ மின்சாரம் கிடைக்கும்.பேச்சிபாறை அணையிலிருந்து ஒரு நாளைக்கு 30,891 M3/day அதாவது 3கோடி லிட்டர் தண்ணீரை அணுசக்தி உலைக்கு ப‌யன்படுத்தப் போகிறார்கள்.

இதன் மூலம் நம் உயிருக்கும் உலை வைக்கலாம்.அணுவினால் அல்ல...குடி நீரினால்.

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: