பட்டய கிளப்பிய பட்டறை!

Category :

ஆமாம்!சென்னை பதிவர் பட்டறை-2007 மிகச் சிறப்பான முறையில்
நடந்தேறியுள்ளது.

இதன் அடுத்த சிறப்பு என்னவென்றால் பங்கேற்பாளர்களும்,
தன்னார்வலர்களும் ஆக்க பூர்வமான முறையில் விவாதித்தது மற்றும்
செயல்முறை மூலம் சந்தேகங்களை களைந்தது....இந்த நிகழ்வு ஒரு
இனிய "வரப்பிரசாதம்" என்றே கூறலாம்.

என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் கல்லூரி முதல்வர்,
ஒரு மாணவன் மாதிரி தமிழ் வலைப்பதிவு பற்றி கற்க ஆர்வமாய்
இருந்தார்.செயல்முறை பயிற்சியின் குறிப்புக‌ளை தன் சொந்த குறிப்பேட்டில்
உடனுக்குடன் பதிந்தது ஆச்சரியமாக இருந்தது.அவர் காரைக்கால்‍-லிருந்து
வ‌ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே மாதிரி புது வ‌லைப்ப‌திவ‌ர்க‌ள் செய்முறை ப‌யிற்சியில் மிக‌
ஆர்வ‌த்துட‌ன் ப‌ங்கேற்ற‌தை காண‌ முடிந்த‌து.

முக்கிய‌மாக எந் நிக‌ழ்விலும் தொய்வே இட‌ம் பெறாம‌ல் மாலை 5.30 ம‌ணி வ‌ரை அனைவ‌‌ரும் ப‌ங்கேற்ற‌து ஒரு விய‌ப்பான‌ நிக‌ழ்வே.
ப‌திவ‌ர்க‌ளின் ஆர்வ‌ம்,உறுதி போன்ற கூறுகள் தமிழ் எப்போதும் த‌லை நிமிர்ந்தே வாழும் என‌ க‌ர்வ‌த்துட‌ன் கூறிக் கொள்ள‌லாம்.

க‌டைசியாக‌ இந்த‌ ப‌ட்ட‌றை‍-யை சிற‌ப்பாக‌ ந‌ட‌த்தி முடித்த‌ மா.சிவ‌குமார்,
விக்கி,பால‌பார‌தி போறோர்க்கும் ஏனைய‌ தோழ‌ர்,தோழிய‌ருக்கும்
ந‌ன்றிக‌ள் ப‌ல‌....

ப‌ட்ட‌றைக்கு பேருத‌வி செய்த‌ சென்னை ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ த‌மிழ்த் துறைக்கும்,ஆத‌ர‌வு அளித்த‌ ஹெட்வே ப்ரொபெர்டீஸ்(Headway Properties),லின‌ஸ் அகாட‌மி(Lynus Academy),சிஃபி(sify),த‌மிழ்ம‌ண‌ம்,கிழ‌க்கு ப‌திப்ப‌க‌ம் ம‌ற்றும் ச‌ற்றுமுன் குழும‌த்திற்கும் நெஞ்சார்ந்த‌ நன்றி.

6 comments:

Srini said...

thalaiva

kalakuringa ponga !!

naan innum pattarai pugaipadangalai ennudia bloggil (coolsrini.blogspot) pathivu seiaa villai.

innum irandu naatkalil ethiparungal

i shall post a video interview made at the event

srini

வவ்வால் said...

சுருக்கமாகவும் , தெளிவாகவும் பட்டறைகுறித்து அளித்துள்ளீர்கள்! nice one!

Mugundan | முகுந்தன் said...

கருத்துக்கு நன்றி வவ்வால்.

அன்புடன்
முகு

அத said...

பட்டறையில் கடுமையாக உழைத்த என்னையும், நண்பர் உண்மைத்தமிழன் என்கிற சரவணன் சவடமுத்துவையும் எங்கள் பெருமதிப்பிற்குரிய டோண்டு சாரையும் நீங்கள் எழுத மறந்தது கண்டிக்கத் தகுந்தது!

Mugundan | முகுந்தன் said...

Eatru kolkirean Sakothararea!

Kanda kaatchiyin padi ezhutha nernthathu.

Unkalaiyum ,unmaithamizan avarkalaiyum patraraiyil
kandean.Ungalin thirai maraivu patri ippothu thaan theriya vanthullathu.

vaazhthukkal sakothararkalea....

Anbudan,
Cuddalore MUGU

K.R.அதியமான் said...

that comment is from that poli crazy moorthy and my comment id is as above with my IP number.

K.R.Athiyaman

Post a Comment

கருத்தைப் பகிர: