கிரி (அ)வலம் ! -பாகம்- 1

Category :

போன மாதம் என் நண்பர் வற்புறுத்தலினால் ஒரு நாள் பயணமாக திருவண்ணாமலைசென்றோம்.கூட நான்கு நண்பர்கள்...வாடகை காரில் பயணம்....
அதிகாலை 4மணிக்கு கடலூரிலிருந்து புறப்பட்டோம்.வழி பாண்டி,திண்டிவனம்,செஞ்சி,என........

நண்பர் பகுத்தறிவாளர்.....இருந்த போதிலும் கார் வலத்தின் மூலம்....என்ன நடக்கிறது எனதெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்.சிற்றுண்டியை திருவண்ணாமலையில் முடித்தோம்.

பின்பு அப்படியே படியேறினோம்.வழியெங்கும் சித்தர்கள்,சித்தர்கள்...கையில் சுருட்டு அல்லது சிகரெட்டு ....உற்சாகமாய் ஊதித் தள்ளினர்...அரை கிலோமீட்டர் தூரம் சென்றோம்...வழியெங்கும் ஏராளமான அறக்கட்டளைகள்.....சில சித்தர்களின் வாயையும் நாங்கள் கிளறத்தவறவில்லை.ஒன்று மட்டும் தெரிந்தது....வாழ்க்கையை எதிர் கொள்ள முடியாமல்...குடும்பத்தைக் கூடகாப்பாற்ற முடியாமல் ஓடி வந்த மகா மட்டமானவர்கள்....(இங்கே சித்தர்கள்...ஞானிகள்....என்ற போர்வையை மாட்டிக் கொண்டு)

சுமார் இரண்டு மணிநேரம் மலையில் இருந்து விட்டு,இறங்கி ....முதலாவதாக ரமணர் ஆசிரமம்சென்றோம்.இந்தியர்களை விட வெளிநாட்டினர் அதிகம் தென்பட்டார்கள்.செருப்பை ஒரு மூலையில்வைத்து விட்டு உள்ளே சென்று அனைத்தையும் கண்டோம்.நிறைய மக்கள் தியானத்தில் இருந்தனர்.எல்லோரும் மேல் தட்டு மக்களாக இருந்தனர்.....கீழ் தட்டு மக்களை கண்டது,அவர்கள் போட்ட 12 மணி அன்ன தானத்தின் போது தான்.....

இளைஞர்கள் கூட வரிசையில்.....அசிங்கமில்லாமல்.....உழைத்து உணவு உண்ணும் வயதில் பிச்சைக்காரனாய்.....இதுதான் சுகமான வாழ்க்கை என வழி தவறி விட்டார்களோ?.....பாவம்...அவர்களை பெற்றவர்கள்...
அங்கே ஒரு அழகான வெள்ளை மயில்....திரிந்து கொண்டிருந்தது...பூங்காவும் இனிமையாகவைத்திருந்தனர்.

அடுத்த இடம்...விசிறி சாமியார் என அழைக்கபடும்....ராம் சுரத்குமார் ஆசிரமம்....மண்டபம் ஆடம்பரமாக இருந்தது.இங்கேயும் தியானம்.....தியானம்....எதையோ இழந்து இங்கு வந்துதேடிக் கொண்டிருந்தனர்.தியான மண்டபம் மிக சுத்தமாக இருந்தது...அனைத்தையும் பார்த்துவிட்டுபிரதான சாலைக்கு வந்தோம்,அங்கிருந்த டீ-க்கடையில் தேநீர் பருகினோம்,பெண்மனி தான் கடையின் நிர்வாகியாம்.பெருமையாக இருந்தது...பிச்சைகாரர்களின் ...படையெடுப்பு அதிகமாககாண முடிந்தது,பின்பு தான் புரிந்தது...டீ-தானம் திருவண்ணாமலை-யில் செய்யப்படுவதில்லை என.

பின்பு நண்பர், பேக்கரி-கடைக்கு சென்று வறிக்கி பிஸ்கட்டும்,ஒரு பை நிறைய வாழை பழமும்வாங்கி வந்தார்.நண்பரிடம் எதற்கு இவ்வளவு எனக் கேட்ட போது....அப்புறம் சொல்கிறேன் என்றார்.

மீதி அடுத்த பதிவில்....கை வலிக்கிறது....

காதலர் தினமா,கண்றாவி தினமா?

Category :

வியாபார விசயமாக 14-02- 2007 அன்று கடலூர்-லிருந்து சென்னைக்கு
கிழக்கு கடற்கரை சாலை ( ECR )வழியாக சென்றதன் தாக்கம் தான் கீழே.,


பேருந்து மாமல்லபுரத்தை தாண்டியபோது ......,இரு பக்கமும் ,இரு சக்கர வாகனங்கள்,கார்கள்,என பலப்பல .

பின்பு தான் என் மண்டைக்கு உறைத்தது,இன்று காதலர் தினம் என்று.,வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வியாபார திருவிழா.
அன்றைய தினம் அனைத்து பண்பலை வானொலி-யும் காதலை சொல்லியே வதைத்தனர்.சும்மா சொல்லக்கூடாது.....முட்டுக்காடு முதல் திருவான்மியூர் வரை சவுக்கு தோப்பெல்லாம் அவன்,அவள் தலைகள்....அவன் மேல் அவள்., அவள் மேல் அவன்.,,,கண்றாவிக் கோலங்கள்.

நாகரீக மாற்றத்தின் அவலங்கள்.,ஒழுக்கம் கூட கேலிப் பொருளானது தான் வேடிக்கை.மாறிவரும் சமுதாய அமைப்பு எதிர்காலத்தில் என்ன ஆகப் போகிறதோ என கவலைப் படாமல் இருக்க முடியவில்லை....

"சவுக்கு தோப்பு
பக்கத்தில் கார்
ஒன்றான செருப்பூ
அவன்...அவள்
கட்டிலில் காதல்?...

முன்கதை:
சரியாக 7.00மணி,கடலூர் பேருந்து நிலையம்....சென்னை பேருந்துக்கு நின்றபோது 70வயது மதிக்கத்தக்க பாட்டி.....தம்பீ...என கூப்பிட்டு திரும்பினேன்.டீ-குடிக்க எதாவது குடுப்பா என்றார்.நல்ல உடை அணிந்திருந்தார்.....ஒன்னரை ரூபா கொடுத்து விட்டு.,
பாட்டியின் கதை கேட்டேன்.(உண்மைக் கதை)

பெயர்: மீனாட்சி அம்மாள்
ஊர்:தேவனாம்பட்டினம்(கடலூர்)
இழந்தது:வீடு,வாசல்,மகன்கள்,உறவு...
பணி:பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டுவது
இருப்பிடம்:சுப்புராயலு நகரை தாண்டி,ஒதுக்குப்புறத்தில்..ரூ300-ல் வாடகை வீடு
உடன் பிறந்தோர்: தங்கை ,,,,,,மற்றும் உறவினர் நல்ல நிலையில் உள்ளனர்
பாடம்:இளைஞர்,இளைஞி களே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து தாய்,தந்தையரை இப்படி ஒரு நாள் பார்க்க வைக்காதீர்.
பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்....

கடைசி வரி:

கார் நிறுத்தக் கூட விசால இடம்.,
கட்டிப் போட பெரிய நாய்
மாளிகை மார்பிள்ஸ் வீடு
இருட்டறையில் பெற்றோரின்
விசும்பல்கள்.குரைத்தது,,,
நாய்.....