தேவலோகத்தில் சிம்புதேவன்!

Category :

ஆமாங்க....நம்ம இயக்குநர் சிம்புதேவனை தேவலோக
கடவுள்கள் அழைத்து பாராட்டு விழா நடத்தினார்களாம்.
ஒவர் பாராட்டு மழையில் குடையே புடிக்க வேண்டியதாப்
போச்சாம்.அவர்கள் எடுக்கும் படத்துக்கு "கால்சீட்'' கேட்டு நச்
அரிப்பு வேறாம்.

இதுல ஒரு தமாசு பாருங்க, எமலோகத்து கடவுள்கள் நம்ம
சிம்பு தேவனுக்கு ''டின்னு'' கட்டிட்டாங்களாம்.ஏன் திருட்டு 'விசிடி' ய எங்களுக்கு அனுப்பலன்னு....கடவுள்களின் தொல்ல தாங்காம ஒடினவர், திடுக்கிட்டு (?) அங்க இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார்.அவ்ளோதான் சர,சரன்னு பறந்தவர்....கூவத்துல வந்து தொப்புன்னு....நல்ல வேலை சிம்புதேவனுக்கு ஒன்னும் ஆகலை,விழுந்தது குளிச்சிட்டிருந்த ரெண்டு
பன்றி-யின் மேல என்பதால் அந்த பன்னிகள் எமலோகம் போவ வேண்டியதாப் போச்சு.

இப்ப நம்ம உலகத்துக்கு வருவோம்...."அறை எண் 305-ல் கடவுள்" என்ற நகைச்சுவை படத்துக்கு சிம்பு தேவனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.இரண்டரை மணி நேரம் நம்மை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த பிரகாஷ்ராஜ்,சந்தானம்,என அனைத்து நடிகர்களுமே அசத்தியிருக்கின்றனர்.

படத்தின் சின்ன செய்தி:
''உழைத்தால் உயரலாம்"

முக்கிய செய்தி:
IT மக்களா....படம் பாக்கப் போகும் போது கைய பாக்கட்டுல வச்சுகோங்க(உங்க பாக்கட்டுல மட்டும்)....நெறய பேருக்கு விரல் காணாம போயிடிச்சாம்.

சிம்புதேவன் திடுக்கிட்டு விழக் காரணம்:
தேவலோகத்துலயும் நம்ம மலயாளிகள் ''சாயாக் கடை''யும்''சாராயக்கடை''யும் வைத்திருந்ததைப் பார்த்து.?

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: