ஒரு வழியாக தை பிறந்து,பொங்கல் விழாக்களும்
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.
முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.
மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தினங்கள் கழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக நடந்தேறின.பெண்ணையாற்றின் கரையில் வெளியூர், உள்ளூர் சாமிகளின் தீர்த்தவாரியும் நடைபெற்றன.
கடைசி வெறி:
இப்போதெல்லாம் புதிய தமிழ் திரைபடங்களின் இடைவேளை ஆங்கிலத்தில் தான் INTERMISSION செய்யப்படுகின்றன.தமிழர்களூக்கு இடைவேளை புடிக்காதோ எனத் தெரியவில்லை?.
கழிந்து விட்டன.
தை முதல் நாள் அன்று காலையிலேயே கடலூரை வலம் வந்தேன்.நிறைய கோலங்களை காண முடிந்தது...அழகழகாய்...."Happy Pongal"என்ற வாழ்த்துகளுடன்.தமிழனின் திருநாளைக் கூட ஆங்கில வாசனையுடன் கொண்டடுவது வேதனையாக இருந்தது.நம் பெயருக்குமுன்னால் தொங்கிக்கொண்டு இருக்கும் ஆங்கில தலை எழுத்தைப் போல.
முன்பு போல் பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் சுத்தமாக குறைந்து போய்விட்டது.தபால் துறையினருக்கு பெரும் வருமானம் குறைந்திருக்கும்.ஏனென்றால் அனைவரும் குறுஞ்செய்தி (SMS) மூலம் வாழ்த்தை முடித்துக் கொண்டுவிட்டனர்.
மாட்டுப் பொங்கல் அன்று கடலூர் பகுதியில் நிறைய இடங்களில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இரு தினங்கள் கழித்து "ஆற்றுதிருவிழா"வும் இனிமையாக நடந்தேறின.பெண்ணையாற்றின் கரையில் வெளியூர், உள்ளூர் சாமிகளின் தீர்த்தவாரியும் நடைபெற்றன.
கடைசி வெறி:
இப்போதெல்லாம் புதிய தமிழ் திரைபடங்களின் இடைவேளை ஆங்கிலத்தில் தான் INTERMISSION செய்யப்படுகின்றன.தமிழர்களூக்கு இடைவேளை புடிக்காதோ எனத் தெரியவில்லை?.