கைப்புள்ள கருணாநிதி!

Category :

வர, வர கலைஞருக்கு பதவி வெறியில்,காங்கிரசையும், அதன் தலைவியையும் பாராட்டு பாடுவதை பார்த்து காங்கிரசுகாரனே சிரிக்கிறான்.தன் குடும்பம்,தன் சுக போக நாற்காலி ஆசைக்காக, தன் தமிழினத்தையே காட்டிகொடுத்த துரோகி என்ற பட்டம் வரலாறு கண்டிப்பாய் கொடுக்கும்.பிரணாப் முகர்ஜி சொல்வதை கேட்டு புளகாங்கிதம் அடைந்து அறிக்கை விடுவது, ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு அழகல்ல.என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே, பிதற்றுவது கேவலம்.

இந்த பிரணாப் முகர்ஜி, பதவி சுகத்திற்காக "ராகுல் காந்தி"யை பிரதமர் என்று அறிவித்து, தன் அரிப்பை போக்கி கொண்டவர்.தன் விசுவாசத்தை காட்டிக் கொண்டவர்.

லாகூரில் (பாகிஸ்தான்)நடந்த தாக்குதலில்,சிறு காயம் பட்ட இலங்கை அணி வீரர்களுக்கும்,இலங்கைக்கும், இந்தியா....ஒப்பாரி வைக்கிறது.இலங்கைக்கு,இந்தியா என்ன தான் முட்டு கொடுத்தாலும்,அவர்கள் நம்மை ஆதரிக்க போவதில்லை.இது தான் வரலாறு.

இதே இந்தியா, நேற்று இலங்கை அரசின் தீவிரவாத தாக்குதலில் 57 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் குழந்தைகள்.இருந்தும் கண்டுக்கவில்லை, கண்டிக்கவில்லை.இதுதான் நியாயமா, தர்மமா......?
அரசு பயங்கரவாதத்தை, இந்தியா ஆதரிக்கிறதா?.....தமிழன் என்ன அவ்வளவு கேவலமானவனா??....இந்த பாவத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு.


இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட, தேர்தலில் எதிரிக்கு கூட ஓட்டு போடுவோம்.தமிழின துரோகிகள்"கைப்புள்ள" கருணாநிதி-க்கும்,காங்கிரசு காரனுக்கும் பாடம் புகட்டுவோம்.

கடைசி வெறி:
கலைஞர் கருணாநிதியின் தமிழின துரோகத்துக்கும்,அவரின் தேசிய ஒருமைப்பாட்டு இறையான்மைக்கும் அவருக்கு "கைப்புள்ள கருணாநிதி" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.இனி அனைத்து பதிவர்களும், கைப்புள்ள பட்டத்தை பயன்படுத்த வேண்டுகிறோம்.

4 comments:

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Anonymous said...

கைப்புள்ளையைக் கேவலப் படுத்துவதால் வன்மையாக் கண்டிக்கின்றோம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:) :) :)

Mugundan | முகுந்தன் said...

வருகைக்கு நன்றி....

உண்மைதான் புகழினி, நம்ம கலைஞர், "சோனியாவின் கைப்புள்ள" என்பதால் விதிவிலக்கு.

Post a Comment

கருத்தைப் பகிர: