![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVggzkJw1ORkr3UQ8108rQjlxbrV83SROs0-ED_xUxXOIrhKWbgRAybxmUOHOZyzMFxQjiJ0AKp5Lh8ukFUvd3O0w4_kIozwv-HEgrECIJ4cpkxs99PtbLSRmq_YOx6KhXSc-X/s400/Lions-lioness.jpg)
ஈழத்தின் பாலியல் வல்லுறவும்,தமிழகத்தின் கற்பழிப்பும்!
கடந்த சில தினங்களுக்கு முன், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,நம்முடைய புலம் பெயர் சகோதரிகளின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது.
அவர்களின் "பாலியல் வல்லுறவு" பேச்சு கூட தெளிவாகவும்,ஆண்மைத்தனமாகவும் இருந்தது.இலங்கையில் நடைபெறும் இன அழிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற போதிலும் அவர்களின் அவலங்கள் இன்றும் வேடிக்கை தான் பார்க்கப்படுகின்றன,இந்த குருட்டு உலகத்தினால்.
இந்த அவலம்தான் " விடுதலைப் போராட்டத்தில்" அவர்களை போர்முனைக்கு இட்டுச் சென்றுள்ளது எனக் கூறலாம்.ஈழப் பெண்களின் வீரத் தியாகங்களும்,பங்களிப்பும் கண்டிப்பாய் வரலாற்றில் இடம்பெறும்.
புலம்பெயர் சகோதரிகளின் வார்த்தைகள் மிக்க நம்பிக்கை அளித்தன.அதுமாதிரி தமிழகப் பெண்களும் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இன்னும் கூட தமிழகத்தின் தினசரிகள் " கற்பழிப்பு" என்ற அசிங்கமான அர்த்தமற்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றன. எப்போது மாறுவோம் நாம்?
0 comments:
Post a Comment
கருத்தைப் பகிர: