மம்தாவிடம் மண்டியிட்ட காங்கிரசு!

Category :

காங்கிரசு ஒரு தேசிய கட்சி....ஆனால் மேற்குவங்கத்தில் ஒரு உதிரி கட்சியாகத் தான் மதிக்கப்படுகிறது.இல்லை, மிதிக்கப்படுகிறது...
தேர்தல் கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரசுடன் பிச்சை எடுத்து 14 தொகுதிகளை பெற்றுள்ளது.

உத்திரபிரதேசத்தில் இன்னும் கேவலம்...6 தொகுதிக்கு மேல் உங்களுக்கு அருகதை இல்லை எனக் கூறிவிட்டனர் முலாயமின் சமாஜ்வாடி கட்சி.(மொத்த தொகுதிகள் 80)இதில் கொடுமை என்னவென்றால் ஒரு காலத்தில் காங்கிரசு செல்வாக்காக இருந்த மாநிலம்,இன்று செல்லாக் காசாக முன்னேறி உள்ளது.

காரணம் காந்தி,நேரு பேரை சொல்லி அரசியல் வியாபாரம் செய்ததினால்.

தமிழகத்தில் இவர்களுக்கு இருக்கும் "பெரும் ஆதரவு" அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் திமுக விடம் 20 தொகுதிக்கு பேரம் பேசுகின்றனராம்.இவர்களின் தகுதி இவர்களுக்கே தெரியாமல்....

உறவுகளே , காங்கிரசு கட்சிக்கு இது தான் கடைசி தேர்தலாக இருக்கட்டும்.இவர்களின் தமிழின விரோதத்துக்கு "வாக்குச்சீட்டால் வாய்க்கரிசி போட்டு" காங்கிரசை காணாமல் செய்வோம்.
அதுதான் தமிழனுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது.

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: