அய்யயோ....கொல்றாங்களே-கலைஞர்!

Category :

இன்று முதல்வர் கலைஞர் ,முத்துக்குமார் விசயத்தை அரசியலாக்க வேண்டாம் என திருவாய் மொழிந்துள்ளார்.

கலைஞரை செயலலிதா அரசு, கைது செய்த போது சும்மாவே "அய்யோ....அய்யோ கொல்றங்க" - ன்னு பின்னனி பேசி அசிங்க அரசியல் செய்தவர் இந்த தலைவர் கருணா (நிதி).அதை நாள் முழுக்க "சன் டிவி"யில் காட்டி அரசியல் செய்தவர்.



இன்னும் கூட காசு சம்பாதிக்க " டி.வி" நடத்திக்கொண்டு,தமிழனை "கேபிள்" அகதியாக நடத்திக் கொண்டிருப்பவரே.....கட்சியை குடும்ப சொத்தாக்கியவரே.....பார்த்தும் கூட ரத்தக்கண்ணீருடன் கட்சி பணி செய்கின்றனர் உடன்பிறப்புகள்.



போதும் கலைஞரே...போதும்.நாற்காலிக்காக "தமிழினத்தையே அடகு வைக்காதீர்கள்."

முத்துக்குமார்-ஐ சாகடித்த தமிழர்கள்?

Category :





தமிழினத்திற்கு துரோகம் செய்தவர்கள் விபரம்:

1.கலைஞர் மு.கருணா(நிதி),தி.மு.க, முதல் அமைச்சர்,தமிழ்நாடு
2.மரு.ராமதாசு,நிறுவனர், பா.ம.க

3.ப.சிதம்பரம்,மத்திய உள்துறை அமைச்சர்
4.டி.ஆர்.பாலு, மத்திய கப்பல் ,நெடுஞ்சாலைதுறை அமைச்சர்
5.அ.ராசா,மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர்
6.மரு.அன்புமணி,மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்
7.ஜி.கே.வாசன்,மத்திய புள்ளியியல் துறை அமைச்சர்
8.ஆ.வேலு, மத்திய ரயில்வேதுறை துணை அமைச்சர்
9.எஸ்.ரகுபதி,மத்திய சுற்றுச்சூழல் துணை அமைச்சர்
10.கே.வெங்கடபதி,மத்திய சட்ட உதவி அமைச்சர்
11.ஈ.வி.கே.எஸ்.இளங்காவன், மத்திய ஜவுளித்துறை துணை அமைச்சர்
12.சுப்புலட்சுமி ஜெகதீசன்,மத்திய சமூக நலம், துணை அமைச்சர்
13.எஸ்.எஸ்பழனி மாணிக்கம், மத்திய நிதி உதவி அமைச்சர்
14.வி.ராதிகா செல்வி,மத்திய உள்துறை உதவி அமைச்சர்

தமிழனல்லாத தமிழ்நாட்டிலிருந்து போன அமைச்சர்;
15.மணிசங்கர் அய்யர், மத்திய அபிவிருத்தி,வட-கிழக்கு மாநிலம்

கடைசி வெறி:

1.மத்தியில் தமிழன் அதிகார ஆளுமையில் இருக்கிறான், தமிழினத்திற்கு
ஏதேனும் செய்வார்கள் என்று நம்பி ஏமாந்து போன என் சகோதரனே.உனக்கு
என் ஆழ்ந்த அஞ்சலி.


2.இன்னும் சில நாற்காலிகள், மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்...நாங்கள் என்ன செய்வது? என்று கூறி மக்களை ஏமாற்றலாம்.

மத்தியில் எத்தனை தமிழின துரோக அமைச்சர்கள் எனப்பாருங்கள்;

தி.மு.க- 07

பா.ம.க -02

காங்கிரஸ் - 04

தமிழ்ப் பிணங்களில் நடக்கும் இந்திய கிரிக்கெட்?

Category :




அய்யகோ............அய்யகோ...........என்று கலைஞர்
தீர்மானம் மட்டும் போட்டு "படம்" காட்டி விட்டார்.
இந்த நிலையில் "ராசபக்சே அழைப்பில்" சென்றுள்ள
ப்ரனாப் முகர்ஜி,தமிழினம் முழுவதும் அழிந்ததா...இல்லை
மிச்ச,சொச்ச தமிழன் உயிருடன் எவனாவது இருக்கிறானா என
வேவு பார்க்கச் சென்றுள்ளார்.

தமிழக தலைவர்கள் மரண ஓலமிட்டார்கள், புதுடில்லி வரை
சென்று மன்றியிட்டு அழுதார்கள்,தமிழின அழிப்பை தடுக்க.
இந்திய அரசு(திமுக,பாமகவும்) தமிழகத்தை அசிங்கப்படுத்தியது.
அரசியல் அசிங்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழக ஊடகங்கள் கூட தமிழின ஒழிப்பிற்கு துணைபோனது
கொடுமையிலும் கொடுமை.உண்மையை கூட எழுத மனம்
வரவில்லை.

கடைசியாய் ஒரேயடியாய் 300தமிழ் உயிர்களை வேட்டையாடி
இருக்கிறது சிங்கள பயங்கரவாத அரசு.கேட்க நாதி இல்லை.
உரிமையுடன்கேட்க வேண்டிய நாம் கிரிக்கெட் -டில் சவமாகி
விட்டோம்.

தலைநிமிர்ந்து வாழ்ந்த இனம், இன்று "சூடான்" தர்பூர்
நிலையிலான அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

என் இனிய ஈழ தமிழுறவே,நாங்கள் இல்லாத இந்திய இறையான்மையில்
சவமாகி விட்டோம்.

போராடுங்கள்..மக்களே,...போராடுங்கள்.....எத்தனை இடர் வரினும், உரிமையை
மீண்டும் பெற....எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன?

விஜயகாந்த்‍ + ஒபாமா கூட்டணி!

Category :

இதுநாள் வரை தனித்தே போட்டியிடுவேன் என்று
"டயலாக்" (வீரச் சவால்) விட்ட தே.மு.தி.க‌
தலைவர் இரு நாட்களுக்கு முன்,கூட்டணி வைத்துக் கொள்வோம்
என‌ கள்ளக்குறிச்சி-யில் சோக கீதம் பாடியுள்ளார்.

ஆனால் மறுபடியும்"வீராவேசம்" வ‌ந்து, மாநில கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனக் கூறியுள்ளார்.திருமங்கலம் கொடுத்த திருப்பு முனையால்
இந்த "பல்டி" என்று தெரிகிறது.

அநேகமாக அவர் ஒபாமாவின், ஜனநாயக கட்சியுடன்
கூட்டணி வைக்கலாம் எனத் தோன்றுகிறது.ஏனென்றால் அவர்
கொள்கை ப‌டி, இந்தியாவில் எந்த‌ க‌ட்சியும் இல்லை.

மேலும் அவர் கூறுகையில், கூட்டணி கட்சிகளுடன்
"பொது மக்களுக்கும் நல்லது செய்வோம்" என எழுதி
வாங்கி வைத்துக் கொள்வாராம்.

நடக்கட்டும், நடக்கட்டும்.....மக்கள் பார்த்துக் கொண்டு
தான் உள்ளனர்.

கடைசி வெறி:

"மனுசனுக்கு ஆசை வரலாம்....பேராராசை வரக் கூடாது"

"அய்யகோ"- தமிழன் சுயமரியாதைக்கு சமாதி?

Category :




"அய்யகோ"- இன்று தமிழக அரசு, மீண்டும் ஒரு தீர்மானத்தை
சட்ட சபையில் நிறைவேற்றப் போகிறதாம்.இச் செயல்
வெட்கக் கேடானாது.முதலில்,போடப்பட்டு
மத்திய அரசுக்கு அனுப்பப் பட்ட தீர்மானத்தை
குப்பை தொட்டியில் போட்டு தமிழினத்தை அவமானப்
படுத்தியது.

இதற்கு காரணம் நம்முடைய தி.மு.க, பா.ம.க‌
அரசியல் கோமாளித்தனம் தான்.வெறும் பதவி சுகத்திற்காக‌
இவர்கள் இன்னமும் நாடகமாடி வருவது அனைவரும்
அறிந்ததே.இவ‌ர்க‌ளின் "உண்மையை" அன்றே நாடி
சோசிய‌ம் பார்த்தவர் "சிங்க‌ள‌ இன‌வெறி ராணுவ‌ த‌ள‌ப‌தி
பொன்சேகா".

மேலும் கலைஞர் அவர்களுக்கு "பாரத் ரத்னா" என்ற‌
பட்டத்தை கொடுக்க இருப்பதாக மத்திய அரசு ஆசை
காட்டுவதால், கலைஞர் ஈழத் தமிழன் சாவதை அறிக்கை
மட்டும் விட்டு வேடிக்கை மட்டுமே பார்ப்பார் என
தோன்றுகிறது.

ஆற‌ரை கோடி ம‌க்க‌ளின் அர‌சு,இன்ன‌மும் ஒரு உண்மையான‌
அழுத்த‌த்தை "ம‌த்திய‌ அர‌சிட‌ம்" கொடுக்க‌வில்லை
என்பது க‌ண்கூடாக‌ தெரிகிற‌து.

காசா(GAZA) சுடுகாடும்..வன்னியின் இடுகாடும்?

Category :



ஒரு வெறித்தனமான தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்
தனது 24 நாட்களின் பயங்கரவாதத்தை,உலகத்தின் நெருக்கலினால்
முடிவுக்கு கொண்டுவ‌ந்துள்ள‌து.இதில் இஸ்ரேல் வெட்டையாடிய‌து,
"ஹ‌மாஸ்"(HAMAS) ஐ அல்ல‌, அப்பாவி குழ‌ந்தைக‌ளை, பொதும‌க்களை....

ப‌ல்லாயிர‌க்க‌ன‌க்கான‌ வீடுக‌ள், வீதிக‌ள், அலுவ‌ல‌க‌ங்க‌ள் சிதில‌ப்ப‌டுத்த‌ப்
ப‌ட்டு ம‌க்க‌ளின் வாழ்க்கையையே சிதைத்துள்ள‌ன‌ர்.இங்கேயும் அனைத்து
அர‌பு நாடுக‌ளும் வேடிக்கை தான் பார்த்த‌ன‌, அசிங்க‌மே இல்லாம‌ல்.
அமெரிகாவையும்,பிரான்சையும் தேடி ஓடின‌ர்.ஆனால் இஸ்ரேல் எதையும்
காதில் வாங்க‌வில்லை,அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையின் வேண்டுகோளையும்
விர‌ட்டி அடித்த‌ன‌ர்.

க‌டைசில் இஸ்ரேல் வென்ற‌தா? இல்லை, பால‌ஸ்தீன‌ அப்பாவி ம‌க்க‌ளையும்
தீவிர‌வாதியாய் எழுச்சி பெற‌ உத‌விவிட்டு வ‌ந்துள்ள‌ன‌ர்.இந்த‌ போரின் காய‌த்தால்
அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஆயுத‌ம் ஏந்த‌ வ‌ழிவ‌கை செய்துள்ள‌ன‌ர்.

ஆனால் இந்த‌ போரில், முஸ்லிம் உல‌க‌ இளைஞ‌ர்க‌ள் இணைய‌த்தின் மூல‌மும்,
ப‌திவுக‌ளின் மூல‌மும் "இஸ்ரேலை" தோற்க‌டித்துள்ள‌ன‌ர் என்றே சொல்ல‌லாம்.

க‌ட‌ந்த‌ ஒரு மாத‌த்தில் ம‌ட்டும் ஆயிரத்திற்கும் மேற்ப‌ட்ட‌ இணைய‌ த‌ள‌ங்க‌ள்
காசா ப‌ற்றியே எழுதி, ப‌ட‌ம் போட்டு உல‌குக்கு காட்டிய‌து பெரிய‌ வெற்றி.
குறிப்பாக‌..... www.gazatalk.com இந்த‌ இணைய‌த‌ள‌ம் "காசா டாக்"
அனைத்து இஸ்ரேலுக்கு எதிரான‌வ‌ர்க‌ளையும் ஒருங்கினைத்த‌து.இது ந‌ட‌ந்த‌து,மிக‌
குறுகிய‌ கால‌த்தில்.

சில‌ வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளின் ப‌ங்கு.....மிக‌ அதிக‌ம்,குறிப்பாக‌,
http://israelscrimes.blogspot.com
http://gazatoday.blogspot.com

க‌டைசி வெறி:

1.ஈழ‌த‌மிழ‌ன் ப‌டும் அவ‌ல‌த்தை, சிங்க‌ள‌ பேரின‌வாத‌ ப‌ய‌ங்க‌ர‌த்தை நாம் இவ‌ர்க‌ள் மாதிரி
என்று காட்ட‌ப் போகிறோமோ, உல‌க‌த்துக்கு.

2.மேலும் (சோசிய‌ல் நெட்நொர்கிங் மூல‌மாக‌வும்-Website,facebook,Tweeter, You Tube,Blog) ஈழ‌த்த‌மிழ‌னின் வ‌ர‌லாற்றை, ஆங்கில‌த்தின் மூல‌மாக‌வும், சிங்க‌ள‌ மொழியிலும் வெளியிட்டு உல‌க‌த்தை திரும்பிப் பார்க்க‌ வைக்க‌ வேண்டும்.

3.இந்த‌ ப‌ணியில் உண்மையான தமிழ் ஆர்வ‌ல‌ர் யாரேனும் முன்வ‌ந்து ப‌ணி செய்ய‌
விரும்பினால் உதவி செய்ய எங்கள் குழு காத்திருக்கிறது.

பா.ம.க வெளியேறியதா?

Category :

மான,ரோசமுள்ள கட்சி என பா.ம.க(பாட்டாளி மக்கள் கட்சி)
மறுபடியும் நிருபித்துள்ளது.தமிழக சட்டமன்ற தீர்மானத்தையும்,
தமிழக மக்களின் கோரிக்கையையும் "செருப்பால்" அடித்த
மத்திய அரசிலிருந்து பா.ம.க வெளியேறியுள்ளது.

இதன் மூலம் தமிழன் இன்னமும் தன் "சுயமரியாதை"யை,
"தன்மானத்தை" இழக்க வில்லை என வரலாறு கூறப்போகிறது.

மேலும் தி.மு.க - வும் மத்திய அரசிலிருந்து ,விரைவில் வெளியேறும் என்று
"தினமலம்", டீக்கடை பெஞ்சில் சிலர் பேசிக் கொண்டது காதில் விழுந்துள்ளது.

கடைசி வெறி:

1.இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனன்,இலங்கை
கண்டியில், மகிந்த ராசபக்சேயுடன் விருந்து உண்டு களித்துள்ளார்.
அவர் தமிழினத்தை அழிக்க,மேலும் ஆயுதம் தருவதாக
மகிந்தவுக்கு உறுதி அளித்துள்ளார்.

2.இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை சென்று சிங்கள மக்களை
மகிழ்விக்கவும் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

3.அட மானங்கெட்ட, "திமுக அரசே, பா.ம.க-வே" இன்னும் என்ன எதிர்
பார்க்கிறிர்கள் மத்திய அரசிடமிருந்து.

4.எனக்கும் சொரணை கெட்டு, கேட்டு "தமிழினத்திலிருந்து"
"விலங்கு" இனத்திற்கு மாற முடிவெடுத்து விட்டேன்.வாருங்கள்
அங்கேயாவது "சொரணை" யுடன் வாழ்வோம்.

ஆங்கில ஊடகங்களின் அயோக்கியத்தனம்?

Category :

தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் எந்த ஆங்கிலப்
பத்திரிகையும் இலங்கை விசயத்தில் உண்மையை கூட மூடி மறைக்கின்றன.இந்த‌ பாகுபாடான நிலையினால்,
ஈழத்தமிழனின் அவலத்தைக் கூட‌வெளியிட மறுக்கின்றனர்.
இதனை இத் தமிழ் சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்,இவர்களின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது திருமாவளவனின் "உண்ணா நிலைப் போராட்டம்" குறித்து ஒரு செய்தியும் இவர்கள் வெளியிடவில்லை.தமிழினம் அழிந்து போவதில் இவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை?
ஆனால் இந்த மானங்கெட்ட தமிழன்,இவர்களின் செய்திகளை நம்பிகாசு கொடுத்து வாங்கி சோரம் போகிறான்.இதுதான் தமிழனின் தலை விதி.

ஈழத்தில் நடப்பது, சிங்கள பேரினவாத இன அழிப்பு என்பதைச் சொல்ல‌ எந்த நேர்மையான செய்தியாளர்களும் இங்கு இல்லை.
அடக்கு முறைக்கு எதிரான போராட்டம் தீவிரவாதமா?சம உரிமை கேட்கும் மக்கள் பயங்கரவாதிகளா?ஆயுதம் ஏன் தூக்கினார்கள்....அறுபது ஆண்டுகள் ஆன பிறகும்,சிங்கள அரசு ஒரு நேர்மையான தீர்வை வைத்ததா?

இலங்கையில் "லசந்தா"என்ற பத்திரிகையாளனுக்கு இருந்த தைரியம் கூட‌ இங்கு எவருக்கும் இல்லை.அரசின் பயங்கரவாத‌த்தை தட்டி கேட்கும் துணிவு லசந்தாவிற்கு இருந்தது.ஆனால் இங்கு.......?

ஊடகவியலாளரின் உண்மை பணி மக்களின் பிரச்சினையை எழுதி,அவர்களின் பிரச்சினை தீர உதவுவது தான்.ஆனால் இங்குள்ள பத்திரிகையாளர்கள் "காசா" மக்களைப் பற்றி எழுதுகிறார்கள்.,ஆனால் பக்கத்தில் உள்ள‌ இலங்கையில் நடக்கும் இன அழிப்பு நடப்பதை சினிமா மாதிரி பார்த்துக் கொண்டுள்ளனர்.தமிழினம் என்ன துரோகம்
செய்தது உங்களுக்கு?....

உண்மையைத் தான் எழுதவில்லை, அதைவிடக் கொடுமை சிங்கள பயங்கரவாத‌ அரசின் பொய்ச் செய்திகளை கட்டம் கட்டி வெளியிடுவது.இதுதான் சுதந்திர‌ பத்திரிகையாளனின் பணியா?....உண்மைத் தமிழர்களே, செய்தியாளர்களே சிந்தியுங்கள்.

கடைசி வெறி:

ச‌த்ய‌ம் க‌ம்ப்யூட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌த்தின் நிர்வாகி,ராஜு
ஊரில் மக்கள் "சங்க‌ராந்தி"(பொங்கல் பண்டிகை) கொண்டாட‌வில்லை
என‌ IBN-LIVE எழுதுகிறான்.ஆமாம் ராஜூ, இந்தியாவை பெருமைப் ப‌ட‌ வைத்த‌வர்.அவ‌ர் சிறையில் இருப்ப‌தால் கொண்டாட‌வில்லையாம்.
இதெல்லாம் செய்தி.

ஆனால் ம‌க்க‌ளுக்காக "உண்ணாநிலை போராட்டம்" செய்யும்
திருமாவ‌ள‌வ‌ன் ப‌ற்றி ஒரு வரி செய்தி கூட‌ இல்லை.

நிலம் வீழ்ந்தால் என்ன?

Category :

தமிழீழ மண்
பகைவனிடம் வீழ்ந்த போது
பதறின பல இதயங்கள்....
விடியல் தொலைந்திடுமோ என,
பதறாதே தமிழா...,விடுதலை
என்ன விளையாட்டுப் போட்டியா?.

விதைக்கு "உரம்" போடுகிறான்,
வீரியமாய் வெடித்தெழ,
அவலத்தை வேடிக்கை பார்க்கும்
உலகின் "குருட்டு" கண்களை நாம்
பார்க்க வேண்டாம்.அவைகள்
மதத்தைத் தான் பார்க்கின்றன....

விடியல் பிறந்தே தீரும்,
அது தானே நம் மூச்சு.
மனத்தை ஆக்கிரமிக்காமல்,
நம் நிலத்தை அவன்
என்ன செய்வான்..?

பிறக்கும் ஈழம்...
அதை பெற்றெடுப்போம்,
விரைவில் "சிசேரியன்"
மூலமாகவாவது.

மான, ரோசமற்ற பா.ம.க, தி.மு.க!

Category :

புதுடில்லி வரை சென்று கெஞ்சிவிட்டு வந்து ஒரு மாதத்திற்குமேல் ஆகி விட்டது.இன்னமும் மத்திய அரசு சட்டை செய்யவில்லை.தமிழர்கள் "இளிச்சவாயர்கள்" என்று நன்கு புரிந்துவைத்துள்ளனர்.இந்த கூத்தில் இன்னமும் பதவி வெறி பிடித்து அட்டை போல் ஒட்டிக்கொண்டுள்ள பா।ம।க மற்றும் தி।மு।க கேலி கூத்தாகி உள்ளனர். சுய மரியாதையை இழந்து என்ன சாதிக்கப் போகிறார்களோ?.

இந்த இரு கட்சியும் இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல் மத்திய அரசில் இருந்து வெளியேறுவது தான் மானமுள்ள தமிழனின் எதிர்பார்ப்பு.சட்டசபை அனைத்துக் கட்சி தீர்மானத்தைக்கூட அசட்டை செய்த மத்திய அரசு கண்டிக்கத்தக்கது.இதில் நாடகமாடும் திமுக,பாமக வெட்கப்பட வேண்டியவர்கள்.

மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுங்கள்,அரசுக்குகொடுத்த வாக்கு காப்பற்ற வேண்டுமெனில். அரசில் இருந்துவெளி வந்தால் மட்டும் என்ன நடக்கப்போகிறது என்று கேட்காதீர்கள்?.அதை நாடாளுமன்ற தேர்தலில் காண்பிப்போம்.

பாலஸ்தீனத்தில் "காசா" பகுதியில் இஸ்ரேல் , அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை உலகமே கண்டிக்கிறது.இதில்கொடுமை என்னவென்றால் இன அழிப்பு( GENOCIDE ) செய்யும் இலங்கை கூட கண்டித்துள்ளது. ஆனால் தமிழ் ஈழத்தில், இலங்கை படைகள்செய்யும் பயங்கரவாதத்துக்கு, கண்டனம் தெரிவிக்க நாதி இல்லை.ஏனென்றால் அவன் தமிழன்.

நான்கு மாதங்களாக "வன்னியில்" நடைப் பிணங்களாக வாழும்தமிழனுக்கு , உதவி செய்ய எந்த உலகமும் காணோம்.இருப்பது தமிழகம் தான், அவன் கூட வாயை மூடிக்கொண்டிருந்தால்யார் காப்பற்றுவது?
கலைஞர் அவர்களே, மருத்துவர் ராமதாசு அவர்களே......விரைவாக முடிவெடுங்கள்.

இந்த தமிழின ஒழிப்புக்கு, இலங்கைக்கு ஆதரவளிக்கும் கீழ்கண்ட பயங்கரவாதிகளை தயவு செய்து வெளியேற்றுங்கள். துணிவிருந்தால்,

1.அலோக் பிரசாத், இந்திய தூதர்-இலங்கை
2।எம்।கே।நாராயணன் - இந்திய பாதுகாப்பு ஆலோசகர்
3।சிவசங்கர் மேனன் - வெளியுறவு செயலாளர்,மத்திய அரசு