செம்மொழி மானாட,மயிலாட!

Category :




தமிழுக்கு செம்மொழி அலங்காரம் வந்தாலும்,இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சி
அதிகார மொழியாக பரவலாக்கப்படவில்லை.இன்னும் நீதிமன்றத்தில் தமிழ்
தடுமாறிக்கூட நுழைய முடியவில்லை.முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால்
தமிழுக்கும்,தமிழனுக்கும் செய்திருக்கலாம்.ஆனால் அவர் குடும்ப பிரச்சினையில் தடுமாறியதால், தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.


தமிழுக்கு எந்த மொழியை விடவும், செம்மொழி தகுதி அதிகம் உண்டு,அதற்கு
நம் இலக்கியங்களும்,வரலாறுகளும் சாட்சி.ஆனால் தமிழ்நாட்டில் மொழியை
வைத்து அரசியல் நடப்பது புதிதன்று.

ஆனால் தற்போது தமிழ் பேசுபவன் நிலையைப் பாருங்கள்,ஒரு பேரழிவை
சந்தித்த ஈழத் தமிழினம் படும் அவலம் "நான் தமிழன்" என்று கூறவே
கேவலமாக உள்ள்து.

தமிழுக்கு மாநாடு நடத்தினால் தமிழனுக்கு பெருமையே.ஆனால் கோவையில்
என்ன நடக்கப்போகிறது என்று எழுதித் தெரிய வேண்டியதில்லை.அது கலைஞருக்கு ஒரு பாராட்டு விழாவாகத் தான் நடக்கப்போகிற‌து.

இந்த மாநாட்டினால் கோவை நகர், புது சாலைகளையும், தண்ணீர் வசதிகளையும் தற்காலிகமாக பெற்றுள்ளது.இதுதான் இந்த மாநாட்டினால்
பெற்ற பயனாக இருக்கும்.

"செம்மொழி கீதம்" எங்கும் எதிரொலிக்கின்றன.ஏதோ இரைச்சலுக்ககு நடுவே சில தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளனர்.கலைஞரின்
இந்த வரிகளுக்கு " நோபல் பரிசு" கொடுக்க சில "கைப்புள்ள உடன்பிற‌ப்புகள்"மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

வாழ்க தமிழ்மொழி! வெல்க தமிழினம்!!

குறிப்பு:

மாநாட்டில் "குஷ்பு" அக்கா",செம்மறித் தமிழர்கள் என்ற தலைப்பில்
பேசலாம்.ஏன் என்றால் "அவருக்கு கெமிஸ்ரி" நல்லா தெரியும்.

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: