புதுச்சேரி = குடிச்சேரி‍‍: ஒரு "பார்"வை!

Category :

இன்று காலை ஆறரை மணிக்கு வில்லியனூர் சென்றபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டின.

1.மேட்டுப்பாளையம் சாராயக்கடை/கள்ளுக்கடை:

சுமார் நூறு பேர் உற்சாக பாணம் அருந்திக் கொண்டிருந்தனர்.
காலை தேநீர் கடையில் உள்ள கூட்டத்தை விட இங்கு அதிகம்
இருந்தனர்.முன்பு மாலையில் பணி முடிந்து போகும்போது
குடித்தவன் இன்று முன்னேறி அதிகாலையில் குடிக்கிறான்.
தமிழனின் தலையெழுத்தை இனி யாரும் மாற்றமுடியாது.
வெள்ளைக்காரன் எவ்வளவு குடித்தாலும் யாரையும் முகம்
சுளிக்க வைக்கமாட்டான்.ஆனால் தமிழன் முட்டக் குடித்து
சாக்கடையின் நாற்றத்தை தனதாக்கி கொண்டிருப்பது மனதை
சுடுகிறது.
2.அரும்பார்த்தபுரம் சாராயக்கடை/கள்ளுக்கடை:
இங்கு சுமார் அறுபது முதல் எழுபது பேர் வரை இருந்தனர்.
வியாபாரம் சூடு படிக்க ஆரம்பித்து இருந்தது.
புதுச்சேரியை ஆளும் காங்கிரசு கட்சி குடிச்சேரியாக்கி மக்களை
மேன்மைபடுத்தி இருப்பதை "மார்" தட்டிக் கொள்ளலாம்.

என்ன காரணம்:
ஏன் காலை ஆறு மணிக்கே சாராயக்கடையை மொய்க்கின்றனர்.ஏன் குடும்பம், மனைவி,
குழந்தை என இருந்தும் போதைக்கு அடிமையானது ஏன்?
விடை கிடைப்பது சுலபம்.....குடி கொடுக்கும் போதை தான் அது.
அடித்தட்டு மக்கள் சாராயக்கடை,கள்ளுக்கடைகளை மொய்க்க,
நடுத்தர,மேல் மட்ட மக்கள் சொகுசு வெளிநாட்டு சரக்குகளை
குடிக்கின்றனர்.

மீதி கடைகளை பற்றி அடுத்த முறை எழுதுகிறேன்,அது வரை
போதையுடன் காத்திருங்கள்.

3 comments:

Anonymous said...

ippadi ozhukkamaana neengal edharku saarayakadaigalukkul mookkai nuzhaitheergal ? oru velai sundal vangi saapida poneergalo ? sandhegamthan

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

boethai illaamalaeyae kaaththirukkiRaen
- Devamaindhan

Philosophy Prabhakaran said...

Follower link எங்கே...?

Post a Comment

கருத்தைப் பகிர: