தமிழ்-ஆங்கில ஊடக அக்கிரமங்கள்

Category :

சமீக காலமாக இந்திய ஊடங்களின் செயல் வரையறை மீறி காசு பார்ப்பதையே குறிக்கோள் என்பதையே தெளிவாக காண்பிக்கிறனர். இடைத்தரகர் நீரா ராடியா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உரையாடல்

இந்தி ஊடகங்களில் சினிமா மாதிரி போட்டுகாட்டினர்.

இதன் மூலம் அனைத்து ஊடகங்களின் உண்மையான முகம் வெளிச்சமானது.


என்.டி.டி.வி(NDTV) பர்கா தத் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ்(Hindustan Times) ன் விர் சிங்வி போன்ற‌ அதிமேதாவி ஊடகவியளாலர்களின் அசிங்க பேரத்தை கேட்க முடிந்தது.அரசியல் கட்சிகளின் புரோக்கர் மாதிரி இவர்களும் செயல்பட்டது அம்பல‌மானது.

எல்லா தொலைக்காட்சி நிறுவ‌ங்க‌ளும் டி.ஆர்.பி(TRP) என‌ப்ப‌டும் மாயைக்கு எதையுமே செய்ய‌ காத்திருக்கிற‌ன‌.வியாபார‌ம் இல்லையென்றால் ந‌ம் வீட்டு ப‌டுக்கையறையில் கூட‌ அவ‌ர்க‌ள் நுழைய‌லாம்.

நம்ம ஊர் ஊடகங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.நித்தியானந்தா,ரஞ்சிதா ஊடல் வீடியோ மூலம் சன் தொலைக்காட்சியும்,நக்கீரன் இதழும் அசிங்கமான முறையில் காசு பார்த்தது நாம் அறிந்ததே.


பத்திரிகை தர்மம் என்று பெயருக்குத்தான் உள்ளது.நிறைய ஊடகங்கள் கட்ட பஞ்சாயத்து செய்தும்,அரசியல்வாதியுடன் உறவாடியும் காரியம்
சாதித்துக்கொள்கின்றன.
தற்போது கூட நடிகர் விஜயகுமார் குடும்ப பிரச்சினையில் உள்நுழைந்து ஏதாவது அசிங்கம் கிடைக்காதா என நாக்கை தொங்க போட்டுக் கொண்டு
காத்துக்கிடக்கின்றனர்.

கடைசியாக ஒரு கொடுமை நடந்தது.ஒரு அறக்கட்டளை விழாவுக்கு நிதி திரட்ட வந்த நடிகை யானா குப்தா(Yana Gupta) ஜட்டிபோடவில்லை என்பதை இந்தி தொலைகாட்சி,பத்திரிகை படமாக்கி அசிங்கப் படுத்திக் கொண்டனர்.ஏமாந்தால் ஜட்டியில் கூட கேமரா வைத்துவிடுவார்கள் இந்த‌ கேவலமான ஊடகங்கள்.அதுவும் இதை செய்தது டைம்ஸ் ஆப் இந்தியா(Times of India),மிட்டே(Mid-day) போன்ற பெரிய ஊடகங்கள்.

பத்திரிகை தர்மம் என்பது தற்போது கடுகளவும் இல்லை.மனித சமுதாயத்தின் நான்காவது தூண் எனப்படும் "ஊடகம்"மக்களுக்கான, மக்கள் மேம்பாட்டிற்க்காகத் தானே தவிர....காசு பார்க்க அல்ல.


ஒரு ஊடகவியளாளன் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை அமெரிக்க ஊடக அமைப்பு விளக்கியுள்ளதை கீழே காணலாம்.

• உண்மையை தேடுதல், த‌ருத‌ல்(Seek Truth and Report It)
• யாரையும் புண்படுத்தாமலிருத்தல்(Minimize Harm)
• தன்னிச்சையாய் பக்கசார்பற்று செய்தி அளித்தல்(Act Independently)
• சமுக பொறுப்புணர்வுடன் அடங்கி செயல்படல்(Be Accountable)

கடையாக விக்கிலீக்ஸ்(wikileaks) என்ற இணையத்தளம் இன்று உலகையே நடுங்கவைப்பதை அனைவரும் அறிவர்.ஆனால் அவர்கள் அசிங்கமான முறையில் எதையும் காசுக்காக வெளியிடவில்லை.


அரசாங்கங்களின் உண்மை முகத்தை கிழித்தெறியத் தான் அதன் நிறுவனர் ஜூலியன்(Julian Assange) பாடுபடுகிறார்.


வாழ்க பத்திரிகையியல்…!


எழுத்து:எண்ணத்துப்பூச்சி
வெளியீடு:பாண்டிச்சேரிபிளாக்.காம்
நன்றி:www.pondicherryblog.com

1 comments:

சாமக்கோடங்கி said...

ஜூலியன் ஒரு உண்மையான ஹீரோ.. அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

Post a Comment

கருத்தைப் பகிர: