சவுக்கு.நெட்-தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்?

Category :

ஆமாம், எத்தனை பேருக்கு தெரியும் தமிழ்நாட்டிலும் ஒரு விக்கிலீக்சு(Wikileaks) அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் கலங்க வைப்பதை, கலங்க வைத்துக் கொண்டிருப்பதை.

இந்த தளம் தமிழக மக்கள் உரிமைக் கழகம்(www.savukku.net) என்ற
போர்வையின் கீழ் இயங்குகிறது.நிறைய உண்மைகளை
வெளியிட்டு அதிகார வர்க்கத்தினரை கழிசல் புடுங்க வைத்துக் கொண்டுள்ளனர்.

மேலும் இதன் பொறுப்பாளர் ஒருவரை கைது செய்து மிரட்டியும் பார்த்துவிட்டனர்.ஆனாலும் நாளுக்கு நாள் இதன் புலனாய்வு செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன.

விக்கிலீக்சு தனது கொள்கையில் மிகவும் நேர்மையான முறையில் செயல் படுகின்றனர்.குறிப்பாக பொய் செய்தியை ஊக்குவிப்பதே இல்லை.அனைவரும் தன்னார்வலர்கள்,காசுக்காக மனசாட்சியை விற்க்கும் சாதாரண ஊடகக்காரன் அல்ல.
அமெரிக்கா எத்தனையோ மாதம் முயற்சி செய்தும் இன்றுவரை அவர்களின் "செர்வர்களைக்"(Server)கூட அடையாளம் காண முடியவில்லை.அதன் நிறுவனர் ஒரு கணிணிப்புலி என்பதால் சங்கேத மொழியிலே உலக கணிணி செர்வர்களில் தகவல்கள் இருந்தும் அதனை காணமுடிவதில்லை.
இங்கே நம் சவுக்கு.நெட் உண்மையை புட்டு வைக்கத் தான் பாடுபடுகிறது என்ற போதிலும் அது தனி மனித தாக்குதலிலும் ஈடுபடுவதினால் அதன் நியாயம் தர்மம் சோதனைக்குள்ளாகிறது.இணையதளத்தின் தலைப்பில் உள்ள தமிழீழத்தின் தலைவர் பிரபாகரனின் படம் அவசியமில்லாதது.தமிழகத்தின் நிறைய இதழ்கள்,வார ஏடுகள் காசு பார்க்கத்தான் அந்தத் தலைவனின் படத்தைப் போட்டு சம்பாதிக்கின்றனர்.
ஆனால் இந்தமாதிரி மக்களுக்கான ஊடகங்கள் இருந்தால் தான் அரசியல் வாதிகள், காசுக்கும்,சொகுசுக்கும் மயங்கும் அதிகாரிககள் ஒழுங்காக நடக்க முயல்வார்கள்.

எந்த ஊடகத்தின் பணியும் சமுக அக்கறையுடன், மனித முன்னேற்றத்துக்கு
பாடுபடுவது தான்.ஆனால் பெரும்பான்மையான ஊடக முதலாளிகள் , வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களாகவும், தரகர்களாகவும் உள்ளதால் உண்மைகள் அனைத்தும் வருவதில்லை.

8 comments:

Anonymous said...

நல்ல பகிர்வு

Mugundan | முகுந்தன் said...

சதிஷ்,
வருகைக்கு நன்றி.

இக்பால் செல்வன் said...

உண்மைதான் சவுக்கு பல அரசியல் வாதிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியுள்ளது. ஆனால் சவுக்கின் நம்பக தன்மை பல தடவை கேளிவிக்குள்ளாகியும் இருந்தது நினைவுக் கொள்ள தக்கது. எப்படியானாலும், உண்மைகள் வெளிவருவதை நாம் எப்போதும் ஆதரிக்கிறோம்

வானம் said...

சவுக்கின் தனிமனிதத்தாக்குதல் என்பது இயல்பானது. அவர் நிலையில் நாம் இருந்திருந்தால் இந்தளவுக்கு புரட்சிகரமாக செயல்பட்டிருக்ககூடும் என்று தோன்றவில்லை. நிச்சயமாக சவுக்கு தமிழ்நாட்டின் விக்கிலீக்ஸ்தான். பிரபாகரன் தமிழர்களின் சொத்து,யார் வேண்டுமானாலும் அவர் படத்தை பயன்படுத்தலாம்,வியாபார நோக்கமில்லாமல். என் கணிணியிலும் அவர் படம்தான் ஸ்கிரீன்சேவர்-ஆக இருக்கிறது.

Mugundan | முகுந்தன் said...

இக்பால் செல்வன் மற்றும் வானம்,

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

Sivatharisan said...

அருமை

rajesh.r said...

வணக்கம் திரு.முகுந்தன். தமிழ் நாட்டின் விக்கி லீக்ஸ் என்ற தங்களின் பதிவு எனக்கு புதியதோர் தகவலை தந்தது. தங்களின் பதிவிற்க்கு நன்றி.

Thanigai said...

வணக்கம் முகுந்தன், உங்களின் இந்த பதிவு நண்பர்களின் இ-மெயில் மூலமாக இன்று படித்தேன்.
ஆம்.. சரியாக கூறினீர்கள்.. சவுக்கு, தமிழ் நாட்டுக்கு விக்கி லீக்ஸ் தான்...! எந்த ஊடகங்களிலும் வராத உண்மை செய்திகளை இங்கு காணலாம்.. வழக்கம் போல இதற்கும் எதிர்ப்புக்கள் இல்லாமல் இல்லை..?

Post a Comment

கருத்தைப் பகிர: