கிரிக்கெட் வியாதி- கடைசி நாள்!

Category :

அப்பாடா...கிரிக்கெட் என்ற பெரு வியாதி
இன்றுடன் முடியப்போகிறது அல்லது மடியப்போகிறது.

121 கோடி மக்களின் இந்தியாவும், 2கோடி மக்களைக்
கொண்ட (பல்லாயிரம் தமிழர்களை கொன்ற) இலங்கையும்
இறுதிப் போட்டியில் விளையாடப்போகின்றன.


உலகத்தின் பெரும்பாலான ஊடகங்களின் பிரதானச் செய்தி
இதுதான்.இந்திய ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
மூன்று நாளாய் இதே அளப்பரை தான்....தலைநகர் முதல்.....தள்ளாடும்
ஊராட்சி வரை.

கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உண்டா?
உண்டு, அது அடிமைகளுக்கு ஆங்கிலேயன் விட்டுச் சென்ற எச்ச, மிச்சம்.

இன்று கூட "இங்கிலாந்து" நாட்டில் மேட்டுக்குடி மக்களைத்தவிர
யாரும் ரசிப்பதில்லை.அனைவருக்கும் பிடித்தது, கால்பந்து விளையாட்டு தான்.

அதனால் தான் பெர்னார்ஷா கூறினார்.... 22 முட்டாள்கள் ஆடுவதைப் பார்க்கும்
22,000 முட்டாள்களின் விளையாட்டு" என்று.

இன்று இந்த விளையாட்டு வியாபாரிகளினால், வியாபாரத்திற்காகத்தான் விளையாடப்படுவதை அனைவரும் அறிவர்.ஆனால் இந்த மோகம் தான் இன்னும் குறையவில்லை.என்று மாறுமோ?

கருத்துப்படம்:நெட்டில் சுட்டது

நன்றி:யாரோ

1 comments:

shyam said...

Apr 8th IPL start , Mind it !!!!!

Post a Comment

கருத்தைப் பகிர: