வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்?

Category :

"சமச்சீர் கல்வி"யை தூக்கி வீசியுள்ளது புதிய அரசு.சமீபத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்துள்ளனர்.இதைப்பற்றி இனிமேல் தான் "சிறப்பு நிபுனர் குழு"அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


இதில் அரசியல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.கலைஞர் கொண்டுவந்தார்
என்பதற்காகக் தான் இது நிராகரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.புதிய அரசுக்கு கலைஞர் மேல் வெறி என்றால்,அதை அவர் பற்றிய பாடங்களை நீக்குங்கள்,அதற்காக அச்சடித்து விற்பனைக்கு வர உள்ள நிலையில் அனைத்தையும் பாழாக்குவது பாவச்செயல்.இதில் "பல நூறு"கோடி ரூபாய் மக்களின் வரிப்பணமும் வீணாக்கப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமச்சீர் பாடப்புத்தகங்களை எழுதியது சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழு...அதை தூக்கி வீசுவது அவர்களை "செருப்பால்"அடிப்பது போலானது.

கடைசி வெறி:
அதிமுக ஆட்சிக்காக தன் நாக்கை காணிக்கை அளித்த பெண்மணிக்கு "அரசு வேலை"கொடுத்து தன் எல்லையை மீண்டும் மீறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்
தமிழக முதல்வர்.

உதவி செய்யவேண்டுமெனில் தன் கட்சி அலுவலகத்தில் பணி கொடுத்து
பல ஆயிரம் ஊதியம் கொடுத்தால் பெருமைப் படலாம்.

படம் உதவி:அம்புலிமாமா

1 comments:

கோகுல் said...

தொடர்ந்து எழுதலாமே?

Post a Comment

கருத்தைப் பகிர: