வடமலை ‍= தன்னம்பிக்கை நாயகன்

Category :

ஆம்.இன்று (16-03-2019) நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார், ஆனால் அவரின்
நினைவுகள் என்றென்றும் நம்மிள் உயிர் வாழும்.

உழைப்பின் இலக்கணம் அவர்...தேனீ போல் உழைப்பவர்,உழைத்தவர். ஆம், அவர் என்னுள்ளும் கிரியா ஊக்கியாய் ....இளையோருக்கு பாடமாய்....

அவர் அதிகாலையில் 4.00மணிக்கு தன் "சைக்கிள்" ல் வித்தியாசமான் மணியுடன் கூத்தப்பாக்கம் மெயின் ரோட்டில் அனைவரையும் எழுப்பிவிடுவார்...அந்த சைக்கிள் தேவனாம்பட்டினம் கடற்கரை சென்று திரும்பும். அப்போதே என்னுடன் பேசும்போது நம்பிக்கை விதைகளை விதைத்தவர் அவர்.

1980 களில் அவர் கடலூர் "செல்லமய்யர் துணிக்கடை"யின் நாயகன் அவர். முதலாளிக்கு எல்லாமாக இருந்தவர்...அவ்வளவு விசுவாசி.
வியாபாரத்தை வித்தியாசமாக செய்தவர். பின்னர் கால சுழற்சியால், துணி வியாபாரம் படுத்தவுடன், "பாண்டியன் டயர்ஸ்" ல் சேர்ந்து ஊர் , ஊராய் சுற்றினார்... டயர் ரீட்ரெட் வியாபாரம் செய்ய....பெரிய டயர்களை கூட அசால்டாக உருட்டிச் செல்வார்.

அங்கும் உழைப்பு, உழைப்பு...முதலாளிக்கு நல்ல லாபம் ஈட்டித்தந்தார்.

பின்னர் உடல் நலன் குன்றி, வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டிய‌ நிலையிலும், நம்பிக்கையால் வெற்றி கண்டவர்.

போன வருடம் விடுமுறை‍யில், அவர் வீட்டுக்கு சென்று பேசிய நிகழ்வு இன்னும் என் நெஞ்சில்...

அவர் மறையவில்லை...நம்பிக்கைகள் அழிவதில்லை.வடமலை , ஓர் மாமனிதன். அவர் என்றும் வாழ்வார்.

0 comments:

Post a Comment

கருத்தைப் பகிர: