இனிய நண்பன் செந்திலின் கடலூர் வருகை!

Category :

ஜுலை 08,2006 அன்று என் இனிய நண்பன் செந்தில் ,அவர் துணைவி அருணா மற்றும் இவர்களின் புதல்வி ராஜி மதியம் சுமார் 2.00 மணி அளவில் வந்திறங்கினர் வீட்டின் முன்.,
அளவில்லா மகிழ்ச்சி எங்களுக்கு;போன வருடமே வந்திருக்க வேண்டும்., தாமதமான வருகை எனினும் மிகுந்த மகிழ்ச்சி என் துணைவிக்கு.

எல்லோரும் சாப்பிட்டு கதை.,கதையாய் நிறைய விசயங்கள் பேசினோம்.,பின்பு இரண்டு மணி நேர ஒய்வுக்கு பிறகு கடலூர் கடற்கரைக்கு(பீச்) சென்றோம்.,
கடலில் காலை நனைத்துவிட்டு,ஒரு இடத்தில் அமர்ந்தோம்.
முகிலும்,ராஜியும் நன்கு ஒட்டிக் கொண்டனர்.,எங்களைச் சுற்றி,சுற்றி ஒடி அமர்க்களம் செய்தனர்.பின்பு மிளகாய் பஜ்ஜி,அய்ஸ்கிறீம்., என சாப்பிட்டு., குடும்ப நிகழ்வுகளை பேசினோம்.இடையில் அருணாவும்,எழிலும் பேசிக்கொண்டனர்.,யாரைப் பற்றி பேசப் போறாங்க???தெரிந்தது தானே!

எட்டு மணிக்கு ஆட்டோவில் நேராக கடலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆனந்த பவனுக்கு சாப்பிட இறங்கிக் கொண்டோம்.உள்ளே நல்ல கூட்டம்., அதனால் குளிர் அறைக்குச் சென்றோம்.,பிடித்தமானவற்றை உபசரிப்பாளரிடம் சொன்னோம்.,ராஜி யின் அழகுத் தமிழ் பேச்சு ,அனைவரையும் கவர்ந்தது.,பக்கத்தில் அமர்ந்து உண்டவர்களும் ரசித்தனர்.உணவும் அருமையாக இருந்தது.,

அங்கிருந்து ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தபோது மணி இரவு 10.00.,விருந்தினர்
மாடியில் தூங்கினர்.,

காலையில் அப்பா ,கடலூர் ஒ.டி க்கு மீன்,இறால் வாங்க சென்றார்.,நான் 7.00மணி வாக்கில் நல்ல கோழி வாங்க வண்டிப்பாளையம் ரோட்டுக்கு சென்றேன்.,காலையிலேயே மதிய விருந்துக்கு எழிலும்,அம்மாவும் தயாராயினர்.காலை சிற்றுண்டி முடித்துவிட்டு கோயிலுக்கு கிளம்ப தயாரானோம்.நான் அப்பா ஏக்சல் -யை எடுத்து கொண்டேன்,செந்தில் என் வண்டி-"யமகா"வை(என் துணைவி மொழியில் "கட்டை வண்டி")உதைத்த பின் அவர் மனைவி மற்றும் ராஜி ஏறிக்கொண்டனர்.

நான் வழிகாட்டியாக முன்னே சென்றேன்.,முதலில் பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.,பின்பு திருவந்திபுரம் சென்று தேவநாத பெருமாளை பார்த்தோம்.,கோயிலை விட்டு வரும் போது மணி 12.00.,கொடுமையான வெயில்.,

நல்ல படியாக வீடு வந்து சேர்ந்தோம்.,வீட்டில் நுழைந்தவுடன் ஒரே வாசம்,அருணா ,எழிலுடன் சேர்ந்து சமையலில் இறங்கினார்.நாங்கள் போன வருடம் தஞ்சாவூர் சென்ற போது அறுசுவை விருந்து படைத்தவர் அருணா.

சரியாக இரண்டு மணியளவில் சாப்பிட்டோம்.,அருமையாக சமைத்திருந்தனர்.,(அம்மா,எழில் மற்றும் அருணா-வுக்கு நன்றி)சாப்பிட்டு சிறு தூக்கம் போட்டோம்.,
நான்கு மணிக்கு தஞ்சை செல்ல புறப்பட்டனர்., நானும்,முகிலும் பேருந்து நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தோம்.

ராஜி கையாட்டிக் கொண்டிருக்கும் போதே பேருந்து புறப்பட்டது.

இனிமையான இரண்டு நாட்கள்,இனிமையான மனிதர்களால் மனதில் இடம் பிடித்தது.