துபாய்-வீரச் சீன தொழிலாளர்கள்!

Category :

அரபு நாடுகளில் நிறைய தனியார் நிறுவனங்கள் சரியான
முறையில் சம்பளம் தருவதில்லை என கேள்வி பட்டுருப்பீர்கள்;
இந்தியர்கள்,நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர் போராடுவார்கள்,
ஆனால் தூதரக ஆதரவு இன்மையால் தோல்வி அடைவார்கள்.
அல்லது நாட்டை விட்டு துரத்தப்படுவார்கள்.,

ஒரு முறை நேபாளிகள் வேலைநிறுத்தம் செய்து வெற்றியும் பெற்றார்கள்.,

பாருங்கள் சீனரின் துணிவை.,
முழுச்செய்தி-க்கு கீழே.,,

கடலூரின் அழுக்கு சில்வர் பீச்!

Category :

சில்வர் ( வெள்ளி)கடற்கரையில்!

விடுமுறையில் தங்கைகளின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு,தேவனாம்பட்டினம்
கடற்கரைக்கு குடும்பத்துடன் சென்றோம்.நிறைய கூட்டம்.,அலை மோதியது.

இப்போதெல்லாம் சில்வர் (தமிழில் வெள்ளி)கடற்கரையில் நிறைய கடைகள்,அதிகமாக தின்பண்ட கடைகள்.மகளிர் சுய உதவி குழுக்களும்,மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்பினால் நிறைய கடைகள் வைத்துள்ளனர்.

கடலை கண்டவுடன் அனைத்து சிறுவர்களும் ஒடி காலை நனைத்தனர்,ஓட்டம்,ஆட்டம்
என பெரியவர்களுக்கு''டிமிக்கி''கொடுத்தனர்.மணலில் புரண்டனர்,நான் மிகவும் ரசித்தேன்,எவ்வளவு அழுக்காக்க முடியுமோ,அவ்வளவு ஆக்கினர் ஆடைகளை.

பின்னர் ஐஸ் க்ரிம் (தமிழாக்கினால் துப்புவார்கள்)சாப்பிட்டோம்.,திரும்பவும் விளையாட்டு.,சிறிது நேரம் கழிந்தது,அடம் பிடித்தனர்,சுண்டல் வேண்டுமென்று.,
பட்டானி சுண்டலை தேர்வுசெய்தனர்.இப்போது தான் தலைப்பை நினைவுக்கு
கொண்டுவரவேண்டும்.

சுண்டலை காலி செய்துவிட்டு காகிதத்தை தூக்கி எறிந்தனர்.,அம்மா,மனைவி,தங்கைகள் மற்றும் குழந்தைகள்...யாருமே சில அடி தொலைவில் குப்பை தொட்டிகளுடன் பிறந்த
குரங்கையோ,முயலையோ கண்டு கொள்ளவில்லை.நான், அவர்கள் போட்ட குப்பைகளை குரங்கிடம் போட்டேன்.,பின்னர் கடிந்தும் கொண்டேன்,நம்மூர் பீச்-ஐ நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால்,அசிங்கம் நமக்குத்தானே என்றேன்.,யாரும் காதில் கேட்டதாக தெரியவில்லை.

இப்படித்தான் அழகிய கடற்கரை அசிங்கமாக ஆகிறது.அடுத்த முறை தான் பார்க்கவேண்டும் என் குடும்பத்தினரை.,

ஆகவே என் இனிய கடலூர் உறவினர்களே,நாமும் கடலூரை ,கடற்கரை-யை சுத்தமாக்கி பாண்டிச்சேரி வரும் சுற்றுலா பயணிகளை கவரலாமே!இதனால் நம்
பொருளாதாரம்,சிறிதேனும் உயருமல்லவா!

வீட்டில்கூட இப்படிதான்,குப்பைகளை போட்டுவிட்டு பெறுக்குவது., எங்கள் வீட்டு பிளாஸ்டிக் குப்பைதொட்டி காத்து கொண்டிருக்கிறது என்று என் மேல் குப்பை விழுமென.?.

கடைசி வரி:(அட இலவசந்தாங்க)

  • சுத்தம் சோறு போடும்,
  • அசுத்தம் சேறு போடும்!

நான் என் கணினி-யில் கூட குப்பையை போடுவது இல்லை.அதுபோல் நீங்களும்
தமிழ்மணத்தில் குப்பையை போடாதீர்கள்.(மன்னியுங்கள் இந்த குப்பையை போட்டதற்கு)

மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப

Category :


உண்மையான மக்கள் தொண்டன் திரு.ககன் தீப்சிங்பேடி இ.ஆ.ப


நீண்ட வருடங்களுக்குப் பின் கடலூர் , உண்மையான மக்கள் பணியாளனை
திரு.ககன் தீப்சிங்பேடி மூலமாக பெற்றுள்ளது.

ஒரு மாவட்ட ஆட்சியர் எவ்வாறெல்லாம் மக்களுடன் பினைந்து பணியாற்றி அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவமுடியும் என்பதற்கு திரு.பேடி அவர்களே முன்மாதிரி;

கடலூர் மாவட்ட ஆட்சியரின் (கலெக்டர்) சாதனைகளில் சில,

  • சுனாமி பேரலை தாக்கியபொது,மனிதன் செய்த பணி இன்னும் பாதித்கப்பட்ட மக்கசொல்ல கேட்கலாம்.வெள்ளம் வந்து சாலைகள்(ரோடு) அறுத்துகொண்ட போது,ஜெ.சி.பி வாகனம் மூலம் சென்று மக்களை சந்தித்து குறையை சரி செய்தது.
  • கம்மியம்பேட்டை பாலம் அமைத்து ,புறவழிச் சாலை ஏற்படுத்திக் கொடுத்தது.
  • கடலூரின் பாழடைந்த பூங்காவை ,நந்தவனமாக்கி அதில் சிறுவர் பூங்காவை அமைத்து குழந்தைகளின் பாராட்டு மழையில் இப்போதும் நனைபவர்.
  • தேவணாம்பட்டினம் கடற்கரை (சில்வர் பீச்)-யை அழகு படுத்தி,அங்கே சுய உதவி குழுவினருக்கு சுயதொழிலையும் ஏற்படுத்தி கொடுத்தவர்.இப்போதெல்லாம் விடுமுறை நாட்களில் மக்கள் கடலையும் பார்க்க வழி தந்தவர்.
  • முந்தைய ஆட்சியில் சிறந்த ஆட்சியர் என பரிசையும் பெற்றவர்,ஆட்சி மாறிய போது கூட இவரை மாற்றாமல் இருந்ததே,இவரின் சாதனைக்கு சான்று எனலாம்.
  • கடலூர் மாவட்டத்திற்கு இவர் வந்து மூன்றறை ஆண்டுகள் கழிந்தும் மக்களே கடன் என உழைப்பவர்.
  • 2006 நாட்காட்டி-யில் (காலண்டரில்) குடியரசு தலைவர் திரு.கலாமுக்கு போட்டியாக இடம் பெற்றவர்.நிறைய வணிக நிறுவனங்கள் திரு.பேடி- யின் புகைப்படத்தை தங்கள் நிறுவன நாட்காட்டியில் இட்டு பெருமை சேர்த்தனர்.
இவரின் சொந்த தகவல்கள்;

1.ஒரு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள்
2.அடிப்படையில் ஒரு இன்சினியர்-பாட்டியாலா தாபர் பொறியியல் கல்லூரியில் படித்தவர்
3.தமிழிலே பேச முயல்பவர்
4.இங்கு வருவதற்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆட்சியராக இருந்து பெரும் பரபரப்பாய் பேசப்பட்டவர்.மக்களின் பேரன்பையும்,பேராதரவையும் பெற்றவர்.

கடைசி வரி:(அட ....இலவசந்தாங்க!)

இவரிடம் இருந்து அரசாங்க ஊழியர்கள் நிறைய பாடம் படிக்கலாம்.(மனமிருந்தால்)






அடேங்கப்பா,,,,பாண்டிச்சேரி-க்கு விமானம்!

Category :


புதுவை மக்கள்(பணம் படைத்தவர்கள்) இனி சென்னைக்கு தினமும்
விமானத்தில் பறக்கலாம்.விமான சேவையை நடத்த ஜாக்சன்(Jagson Airlines)
ஏர்லைன்ஸ் முன்வந்துள்ளது.கூடுதலாக பெங்களூருக்கும்,திருப்பதி-க்கும்
கூட பயணம் செய்யலாம்.

கடலூர்காரனான நான் எப்படி,பயணம் செய்யமுடியும்.?,கடலூருக்கு யாராவது
விமானம் விட்டால் நானும் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும்.கடலூரை முன்னேற விடாமல் தடுக்கும்,பாண்டிச்சேரியை நாம் எப்படி எதிர்கொள்வது?கடலூர் வலைப்பதிவர்களே,ஆலோசனை-யை அள்ளி விடுங்கள்.

ஜாக்சன் ஏர்லைன்ஸ்-புதுடில்லி-யை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.முக்கியமாக அவர்கள் இயக்க இருக்கும் விமானம்,"டோர்னியர்- 228'',(DORNIER 228)14முதல்16 பேர் வரை பயணம் செய்யலாம்,டோர்னியரை-தயாரிப்பது நம்ம பெங்களூர் எச்.ஏ.ல் (HAL)தான்.
விமானத்தின் மாதிரி படம் தான் மேலே உள்ளது,,


கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பாண்டிச்சேரி- சென்னை-ரூ.1500(பேருந்துக்கு,அதாங்க பஸ்-க்கு ரூ.46/தான்.)
பாண்டிச்சேரி-பெங்களூர்-ரூ.2400
பாண்டிச்சேரி-திருப்பதி-ரூ.2400

பாண்டிச்சேரி மக்களே மேலே பறந்து, பறந்து பாரை(!) பாருங்கள்,தண்ணீர் போடாமல்.,
பறந்து பார்த்துட்டு ஒரு பதிலும் போடுங்க.

தமிழ் கவலைக்கிடம்?(சாரி சீரியஸ்)

Category :

இன்றைய ( 02-ஜுன்)ஆங்கில முரசை,மன்னிக்கவும்,தமிழ் முரசு மாலை இதழின் முதல்
பக்கத்தை கண்டு திடுக்கிட்டேன்;
தமிழை கட்டாயமாக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடையும் நேரத்தில்,முதல்வர் பங்குதாரராக
இருக்கும் நிறுவனமே தமிழை கேவலப்படுத்துவது,கவலை தரும் செய்தியாகும்.

கீழ் கண்ட வார்த்தைகள், ஒரு செய்தியின் அவலங்கள்.,

1.ராகுல் மகாஜன் சீரியஸ்?-கவலைக்கிடம் என எழுதினால் பாவம் தமிழர்களுக்கு புரியாது பாருங்கள்!
2.செக்ரட்டரி ?-உள்ளே மகாஜனின் செயலாளர் என தப்பி தவறி மறந்து எழுதி இருந்தனர்.
3.ஆஸ்பத்திரி?-பரவாயில்லை,ஆஸ்பத்திரி-யை எல்லோருமே தமிழாக்கிவிட்டோம்,கூடுதலாக தமிழ் மருத்துவமனையையும் "ஆஸ்பத்திரியில் சேர்த்து
விட்டோம்.
4.ஃபுட் பாய்சன்? என அடுக்கிகொண்டு போகலாம்.

வியாபாரம் தான்,நாங்கள் மறுக்கவில்லை.,அதற்காக விற்பனையை மலிவான
வார்த்தை மூலம் காசாக்கும்,உங்களுக்கும் ''தினமலர்''தாளுக்கும் என்ன வேறுபாடு?

தயவு செய்து சிங்கப்பூர் தமிழ்முரசு செய்திதாளை ஒருமுறையேனும் பாருங்கள்.

Tamil valga?