சிற்பி இராசன் அவர்களின் "சிறப்பு விழா"....

Category :



இந்த வருடமும் சிற்பி அவர்களின் பிறந்த நாள் விழா (25-12), அவரின்

அன்பு தோழர்களினால் புதுவை அருகில் அமைந்துள்ள‌ "ஆரோவில்" நகரில் நடத்தப்பட்டது.



சிறப்பு விருந்தினராக "தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் இராமகிருட்டிணன் கலந்து கொண்டார்.



புதுவை நகர தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். மதிய உணவு அறுசுவையுடன் பரிமாறப்பட்டது. பின்னர் சிற்பி அவர்களின் மந்திரவித்தை "மேஜிக்" நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்வு முழுநாளும் இனிமையான முறையில் நடந்தேறியது.தோழர்கள் அனைவரும் சிற்பி இராசனின் மக்கள் பணி சிறக்க வாழ்த்தினர்.

மதுரை ஆதினம் ஆனார் சி.டி சாமியார்!

Category :

நித்யானந்தா சாமியார் தற்போது மதுரை ஆதினத்தின் மகா சந்நிதானம் ஆக ஆக்கப்பட்டுள்ளது பலருக்கு
அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டிருப்பது உண்மை.


ஒரு குற்றப் பிண்ணனி கொண்டிருப்பவரை ஏன்
நியமனம் செய்தனர் எனப் புரியவில்லை.

கூடிய சீக்கிரம் தகவல் வரும் என நம்பலாம்.


தமிழினம் வெட்கி தலைகுனிய வைத்திருக்கிறார்கள்.