வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் தினசரி சர்க்கஸ்?

Category :

தினசரி இந்திய‍, பாகிஸ்தான் எல்லையான "வாகா"(WAGAH) வில் நடக்கும் கொடி ஏற்றம், இறக்கம் ஒரு பெரிய திருவிழாவாக, வேடிக்கைத் தெரு விழாவாக பல்லாண்டுகளாக நடைபெற்று வருவது பெரும்பாலானோர் அறிந்ததே.

இந்த "கண்றாவியை, கேலிக்கூத்தை" வெளிநாட்டினரும், இந்திய‌ பாகிஸ்தான் அப்பாவி மக்களும் பார்த்து ஆரவாரம் செய்வர். நாட்டுப்பற்றை, வெறியாக்கும் ஒரு மறைமுக நிகழ்வு அது. இந்நிகழ்வை நேரடியாகவோ, யு‍-டுயுப்(U-TUBE) மூலமாகவோ கண்டால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா சார்பாக "எல்லைப் பாதுகாப்புப் படை"யும்(BSF) பாகிஸ்தான் சார்பாக‌ "ரேஞ்சர்ஸ்" (Rangers) என்ற படைப் பிரிவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர். படைவீரர்கள் ஓடுவார்கள், நிற்பார்கள்..... மரியாதை செய்வார்கள். வெகு வேகமாக காலைத் தூக்கி தாய் மண்ணை உதைப்பார்கள் (பாரத மாதா, இந்த‌ உதையில் உடைந்து உருக்குலைந்து போயிருப்பாள்).

இந்த மாதிரி உதை மரியாதைகளினால் "கால் மூட்டுகள்" சீக்கிரம் பயனற்றுப் போகும்; வலியினால் அவதிப்படுவார்கள். அறிவுள்ளவர்கள் இந்த மாதிரி செயல்கள் செய்ய முன்வர மாட்டார்கள். ஆனால் அதிகார‌ வர்க்கம் இந்த வீரர்களின் கால்களைப் பற்றியோ அல்லது உடல் நலனில் அக்கறை கொள்வதோ கிடையாது.

ஆனால் தற்போது இரு நாட்டு வீரர்களும், தம் முன்னோர்கள் படும் அவதியைக் கண்டு உதையின் வீச்சை குறைக்க கேட்டுக்கொண்டுள்ளனராம். இதனால் இரு அரசாங்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம்.

இந்த உதை நிகழ்வை ஒரேயடியாக நீக்கினாலும் நல்லதுதான். ஏன் ஒரு "கைக் குலுக்களுடன்" இனிய தினத்தை புதிதாக‌ வரவேற்கக் கூடாது?.

நன்றி:கீற்று.காம் (கீற்று இணையம்) Photo Courtesy:npr.org

கலைஞர்,கலைஞருக்கு எழுதிய கடிதம்!

Category :

அனுப்புநர்:
மு.கருணாநிதி
எண்:15, 4வ‌து வீதி
கோபாலபுரம்,
சென்னை‍ 600086.

பெறுந‌ர்:
மாண்புமிகு முத‌ல‌மைச்ச‌ர் அவ‌ர்க‌ள்
த‌லைமைச் செய‌ல‌க‌ம்
த‌மிழ்நாடு அர‌சு,
சென்னை 600 009.

பொருள்:சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னைக்கு பெய‌ர் சூட்டுவ‌து‍ தொட‌ர்பாக‌‍

அய்யா,

வ‌ண‌க்க‌ம்.நான் க‌ட‌ந்த‌ நான்க‌ரை ஆண்டுக‌ளாக‌ த‌மிழ‌க‌த்தை "ந‌ல்லாட்சி" செய்து வ‌ருவ‌து அனைவ‌ரும் அறிந்த‌தே.ந‌ல்லாட்சிக்காக‌ மாத‌ம் ஒரு பாராட்டு
விழா ந‌டைபெறுவதையும் தாங்க‌ள் அறிவீர்.

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் ஏகோபித்த‌ ஆத‌ர‌வினால் "க‌லைஞ‌ர் காப்பீட்டுத் திட்ட‌ம்",
“க‌லைஞ‌ர் வீட்டு வ‌ச‌தி திட்ட‌ம்”, கலைஞர் இலவச வண்ணத் தொல்லைக்காட்சி திட்டம்,கலைஞர் ஒரு ரூபாய் அரிசி,தற்போது “கலைஞர் திரைப்பட நகரம்”,எதிர்காலத்தில் “கலைஞர் இலவச பம்பு செட்டு திட்ட‌ம்”,என‌ப் ப‌ல‌
திட்ட‌ங்க‌ள் க‌லைஞ‌ரின் "பெண்சிங்க‌ம்" மாதிரி வெற்றிக‌ர‌மாக‌ ஓடிக் கொண்டிருப்ப‌தையும் தாங்க‌ள் அறிவீர்.

இந்த‌ நிலையில் "காங்கிர‌சு" க‌ட்சியின் த‌மிழ‌க‌ கிளையின் த‌ம்பி இள‌ங்கோவ‌ன்
சென்னை அர‌சு பொது ம‌ருத்துவ‌மனைக்கு "ராஜிவ்காந்தி" பெய‌ரை வைக்க‌ வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆசிரிய‌ர் வீர‌ம‌ணி, "பெரியார்" பெய‌ரை வைக்க‌
வேண்டுகோள் விடுத்துள்ளார்.க‌டைசியாக‌ "நாம் த‌மிழ‌ர்" என்ற‌ சிறார்
இய‌க்க‌ம் "முத்துக்குமார்"பெய‌ரை வைக்க‌வேண்டும் என‌க் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்.

ஆனால் இதில் அதிக‌ த‌குதி யாருக்கு என்று கழகம் ஒரு ஓட்டெடுப்பு ந‌ட‌த்திய‌தில் "க‌லைஞ‌ர்" பெய‌ரைத்தான் அதிக மக்கள் தேர்ந்து எடுத்து உள்ள‌ன‌ர்.இந்த‌ பெய‌ர் வைப்ப‌தில் உங்க‌ளுக்கும் ஆட்சேப‌னை இருக்காது என‌ ந‌ம்புகின்றோம்.


"க‌லைஞ‌ர் அர‌சு பொது ம‌ருத்துவ‌ம‌னை" என‌ பெய‌ரிட‌
இந்திய தேச‌த்தின் த‌லைவி, சோனியா காந்தி அம்மையாரிட‌மும் "கடிதம்" மூலம் அனுமதி வாங்கிவிட்டேன் என‌த் தாழ்மையுட‌ன் தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டு உள்ளேன்.

ந‌ன்றி!

த‌ங்க‌ள் உண்மையுள்ள‌,

மு.க‌ருணாநிதி
த‌லைவ‌ர்,தி.மு.க‌
23-08-2010


நகல்:

1.மாண்புமிகு ஆளுநர் அவர்கள்
தமிழ்நாடு அரசு

2.மாண்புமிகு பிரதமர் அவர்கள்
இந்திய அரசு