அருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து!

Category :

ஆடி மாதம் பொறந்தாலும்,பொறந்தது இந்த விளம்பர‌
அசிங்கங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
ஆடி மாசத்துல தான் தூள் பறக்கும் இலவசங்கள் பிறக்கும்.ஒன்னு வாங்கனா,இன்னொன்னு இலவசம்;மொட்டை
போட்டா சந்தனம் இலவசம்;அல்வா வாங்கனா ரெண்டு(!) இலவசம்..
இப்படி பலப்பல...

நேற்று(18-07-2007) "ராஜ் டிவி"‍யிலும் ஒரு விளம்பரம்.
''இந்த மாதம் முழுவதும் அம்மன் படங்கள்...
அனைத்து படங்களையும் பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்''.
என்ன ஏமாற்ற வரிகள் பாருங்கள்?.சாமியை வைத்து வியாபாரம்
செய்வதும் கூட வரையறை இன்றி போய்விட்டது.ஒரு திரைப்படத்தை
பார்த்தால் பார்ப்பவருக்கு அருள் கிடைக்காது,டி.வி நிறுவனத்துக்குத்தான் 'பண' அருள் கிடைக்கும்.

தமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.

விஜயகாந்த்‍ தமிழுக்கு ''நோ''?

Category :

தன்னுடைய 150‍ வது பட பூஜையை,சொந்த‌ இஞ்சினீயரிங் கல்லூரியில் நேற்று நடத்தி இருக்கிறார் கேப்டன்.எந்த ராணுவத்தில் பணிபுரிந்தார்
எனத் தெரியவில்லை(!). படத்தின் பெயர் வித்தகன்.

நான் கடலூரிலிருந்து,சென்னை செல்லும் போதெல்லாம் பார்ப்பேன்,மாமண்டூரில் தன் கல்லூரி வாயிலில் நின்று வரவேற்பார்.(விளம்பர பலகையில் தான்)

தமிழக கல்வி முன்னேறியதோ இல்லையோ,இந்த மாதிரி பகுதி அரசியல்வாதிகள் வாழ்வு முன்னேறி உள்ளது.அங்கு படிக்கும்
மாணவர்களைத் தான் கேட்க வேண்டும்,நோட்டு புத்தகங்கள்,பாடங்களில் கேப்டன் முகம் இருக்கிறதா என‌?.

சரி,விசயத்துக்கு வருவோம்.நேற்று செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது ஒரு கேள்வி அதிரும்படியாக இருந்ததாம்.

''சிவாஜி" படம் பார்த்தீங்களா?‍‍
அதற்கு தே.மு.தி.க கேப்டன், ''நான் எந்த படமும் பார்ப்பதில்லை.
நல்ல‌ ஆங்கில படங்களை மட்டும் பார்ப்பேன்.''

ஆகா நல்ல வேளை, அவர் நடித்த படத்தை அவரே பார்க்கவில்லை..பார்த்திருந்தால் என்ன ஆயிருக்கும்?.

பாருங்கள் தமிழர்களே...எவ்வளவு திறமையாக ஏமாற்றி பிழைக்கிறார்கள்.இவர்கள் ஆங்கில படம்தான் பார்ப்பார்களாம்.
நாம் தான் இவ‌ர்க‌ள் ந‌டித்த‌ ப‌ட‌த்தை பார்த்து,பார்த்து ஏமாற‌ வேண்டுமாம்.

ஏமாறுவ‌து தான் ந‌ம‌க்கு அல்வா சாப்பிடுவ‌து மாதிரி ஆயிற்றே...வாங்க ''ப‌ழ‌க‌, ப‌ழக'' ஏமாறுவோம்.

மாயாவதி‍யிடம் தோற்ற மு.க + ஜெ.ஜெ!!

Category :

அம்மாடி....சகோதரி மாயாவதி என்ன பாய்ச்சல்.....பாய்ந்திருக்கிறார்.
சில அப்பாவி தொண்டர்கள் புளகாங்கிதம் அடைகிறார்களாம்..
நம்ம‌ ஜாதி பெண்,கோடீஸ்வரி ஆகி விட்டாரே என....

என்ன சாதனை செய்திருக்கிறார்....?அவரின் சொத்து மதிப்பு ரூ.52கோடியாம்.நம்ம ஜெவையும்,கலைஞரையும் ஒரே கல்லில் வீழ்த்தியிருக்கிறார்.இந்த சொத்து விபரத்தை அவரே உத்திர பிரதேச மேலவை தேர்தல் வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார்.
மாயாவதி அவர்கள் 2004 மக்களவை தேர்தல் நடந்த போது இருந்த சொத்து மதிப்பு 11 கோடி.ஆனால் இதை 52.5 கோடியாக மாற்றி சாதனை
புரிந்துள்ளார் மாயாவதி....ஆகா என்ன வளர்ச்சி.....உ.பி நன்றாக
முன்னேறி இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

மாயாவதி சொல்கிறார்..,என் தொண்டர்கள்,நலம் விரும்பிகள் அனுப்பிய‌ பணத்தில் தான் இந்த சொத்துகளை வாங்கினேன்.அவர்கள் என்னை கோடீஸ்வரியாக பார்க்க விரும்புகிறார்கள்.ஆகா...என்ன தத்துவம் புல்லரித்து போகிறது.

சகோதரியே,அடித்தட்டு தொண்டன் அன்றாடங்காச்சியாக இருந்தாலும்...அவனின் பெரிய மனசை பாருங்கள்.அதுவும் வர்த்தக கட்டிடங்களாகவே வாங்கி குவித்துள்ளீர்.நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம்,நீங்கள் அரியணை ஏறியபோது.ஒடுக்கப்பட்ட இனம்...உயரே வளரப்போகிறது என.ஆனால் வளர்ந்தது,உங்கள் மாளிகையும்,
வர்த்தக கட்டிடங்களின் உயரமும் தான்.

இதோ சகோதரி மாயாவதி அளித்த‌ சொத்து ப‌ட்டிய‌ல்:

அ.சொந்த‌ கார்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍===========இல்லை
ஆ.கை மேல‌‍============50.27 ல‌ட்ச‌ம்
இ.வங்கி வைப்பு நிதி=====12.88 ல‌ட்ச‌ம்
ஈ.த‌ங்க‌ ந‌கை=============50.87 ல‌ட்ச‌ம்
உ.வைர‌ ந‌கை============49.75 ல‌ட்ச‌ம்
ஊ.வெள்ளி===============1.12 ல‌ட்ச‌ம்(சாப்பாட்டு சாத‌ன‌ம்)
எ.க‌ன்னாட் பிளேஸ்
வ‌ர்த்த‌க‌ வ‌ளாக‌ம்==========2.05 கோடி+1.27 கோடி (ரெண்டு)
ஏ.ல‌க்னோ வீடு===========97.42 ல‌ட்ச‌ம்
ஐ.ஒக்லா வ‌ளாக‌ம்=========15.5 கோடி

இத்த‌னைக்கும் மாயாவ‌தி சாதார‌ன‌ ஏழைக் குடும்ப‌த்தில் பிறந்த‌வ‌ர்.ஆசிரிய‌ராக‌ இருந்து,அர‌சிய‌லுக்கு வ‌ந்த‌வ‌ர்....க‌ன்ஷிராம் அவ‌ர்க‌ளின் உத‌வியினால் உல‌குக்கு அறிமுக‌மான‌வ‌ர்.

எங்க‌ள் முத‌ல்வ‌ர் க‌லைஞ‌ர் ,எழுதி ச‌ம்பாதித்த‌து என்பார்..சொத்து=26.5கோடி
முன்னாள் முத‌ல்வ‌ர் ஜெ.ஜெ ந‌டித்து ச‌ம்பாதித்த‌து என்பார்..சொத்து=24.6 கோடி இது மாதிரி,நீங்களும் சொல்ல‌லாம் எதிர்காலத்தில்,
நான் டியுச‌ன் ந‌ட‌த்தி ச‌ம்பாதித்த‌து என‌.

ஓட்டுப் பெட்டிக‌ள் தான் இங்கு நிறைய‌ உள்ள‌னவே,ஏமாறுவ‌த‌ற்கு???
வாழ்க‌ ஜ‌ன‌நாய‌க‌ம்.....அல்ல, ப‌ண‌ நாய‌க‌ம்.!!

சிவாஜி‍யை புடிக்க வந்த நிமிட்ஸ் கப்பல்?

Category :

என்ன ஆச்சரியமா இருக்கா....எனக்கும் அதே'''ங்''...
நம்ம சிவாஜி‍‍-ய தான் புடிக்க (படம் புடிக்க இல்ல) வந்துருக்காங்களாம்..

அத‌னால‌ தான் நிமிட்ஸ்-ஐ சென்னை க‌ட‌லில் நிறுத்திவிட்டு எல்லா போர்வீர‌ர்க‌ளும் சுத்தி பார்க்க‌ போயிருக்காங்க‌.அதுல‌ ஒரு கூட்ட‌ம் CIA ஐ சேர்ந்த‌தாம்.க‌ட‌ற்ப‌டை போர்வீர‌ர்க‌ள் நட்சத்திர‌ ஓட்ட‌ல்க‌ளில் வீர‌த்தை காட்டிக்கொண்டிருக்கும் போது,இந்த‌ CIA குழு ஒவ்வொரு தியேட்ட‌ருக்கும் போய் சிவாஜிய‌ தேடுதாம்.அவ‌ங்க‌ வேட்டிய‌ க‌ட்டிகிட்டு, ஆட்டோவுல‌ தான் போறாங்க‌ளாம்.

நேத்து ஒரு திரைய‌ர‌ங்கு(தியேட்ட‌ர்) சென்ற‌ போது,தியேட்ட‌ர்கார‌ங்க‌ இழுத்து‍கிட்டு போய் உள்ள‌ உக்கார‌ வ‌ச்சுட்டாங்க‌ளாம். தியேட்ட‌ருல அவ்ளோ கூட்ட‌மாம்(????) ஏசி-ய‌ கூட‌ நிறுத்திட்டாங்க‌னா பார்த்துக்கோங்க‌...
லைட்கூட‌ போட‌ல‌யாம்.

CIA அதிகாரிங்க‌ நைசா...ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ங்க‌கிட்ட‌ பேச்சு கொடுத்தாங்க‌ளாம்.அட‌ த‌மிங்கிலிஷ்‍‍-ல‌ தான்.ஆனா ப‌க்க‌த்துல‌ இருந்த‌வ‌ரு அமெரிக்க‌ ஆங்கில‌ம் பேசிய‌போது திடுக்கிட்டாராம்.விசாரிச்சா அவ‌ரும் நிமிட்ஸ்-லேர்ந்து தான் வ‌ந்திருக்காரு,ப‌க்க‌த்துல‌ ஒரு பெண்புறா வுட‌ன்.
ச‌ரி எப்ப‌டா இடைவேளை வ‌ரும்னு காத்திருந்தாங்க‌ளாம்.....யாராவ‌து சிவாஜி ர‌சிக‌ன் மாட்ட‌மாட்டானா-ன்னு‌...இடைவேளை வுட்டும் லைட்டை போட‌ல‌யாம்.CIA அதிகாரி ஒருத்த‌ர் சிக‌ரெட்டு லைட்ட‌ர‌ கொளுத்துனா....அதிர்ச்சி....????இருந்தது ஒரு இருவ‌து பேர்.

ப‌ட‌ம் வுட்டு யாரா‌வ‌து வெளிய‌ வ‌ரும்போது,சிவாஜி ப‌த்தி கேட்க‌லாம் வ‌ழியிலே காத்திருந்தா யாருமே வெளியே போவ‌லையாம்.ஆச்ச‌ரிய‌ப்ப‌ட்டு அடுத்த ஷோவும் பாக்கபொறீங்களா‍ன்னு கேட்டாங்களாம் CIA. அதைக் கேட்டு,சார் நாங்களே நொந்து நூலாக இருக்கோம்,,,,போங்க சார்‍ன்னு தமிங்கிலத்துல சொன்னாங்களாம்.நாங்க எல்லாம் ஆஸ்ரமத்துல வேலை செய்யரோம்...இப்ப எங்க வேலை நாளு பூரா இங்க தூங்கறது தான்.என்ன‌ பன்றது சார்...தலை யெழுத்துன்னு வேலை செய்யறோம்.அதுல நல்ல ஆங்கிலம் பேசிய ஆஸ்ரம வேலைகாரர்....ஏன் சார்...எங்க சிவாஜிய பாக்கவா அமெரிக்காலேர்ந்து வந்தீங்க??...

நீங்க வேற....200 கோடிய அமெரிக்காலேர்ந்து சிவாஜி எடுத்துகினு வந்தாருல்ல...அந்த பணம் எங்க பணம்...அதை கண்டுபுடிக்கத்தான் வ‌ந்துருக்கோம்.அந்த பணத்த அவர் உழைச்சி சம்பாதிக்கல...அமெரிக்க‌ ஹவாலாவுல ''தில்லுமுல்லு''-‍ல சம்பாதித்தது......

இதைக் கேட்ட ஆஸ்ரம ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஒரு ரசிகர் மட்டும்.....CIA கிட்ட சொன்னார்,

''நாங்க‌ ஒரு த‌ட‌வ‌ ஏமாந்தா....
நூறு த‌ட‌வ‌ ஏமாறாம‌ வுட‌ மாட்டோம்''.

இப்ப‌ CIA அதிகாரிக‌ள் உறைந்த‌ன‌ர்.

அதிருதில்ல‌......

நிமிட்ஸ்‍‍‍‍‍ வருகையும்,நம் குய்யோ,முய்யோ‍-வும்!

Category :

ஆமாம்.ஜெ முதல் துறைமுக தொழிலாளர் சங்கம் வரை எதிர்க்கும் ஒரு செய்தியை பார்க்கிறோம்.

ஏன் இந்த ஊடகங்களும்,அரசியல்வாதிகளும் இந்த பலூனை ஊதி விளையாட்டு காட்டுகின்றனரோ தெரியவில்லை.ஒரு வேளை
வியாபாரமாக‌ இருக்கலாம்.அரசியல்வாதிகளுக்கு ஒரு இலவச விளம்பரத்திற்கான‌ வாய்ப்பாகவும் இருக்கலாம்.

இது ஒன்றும் புது நிகழ்வு அல்ல.ஏற்கனவே பிரஞ்சு அணுசக்தி கப்பல்கள் இந்தியா‍வுக்கு வந்து சென்றுள்ளன.அப்போது இந்த குரல்கள் எங்கு போயின‌ என்று புரியவில்லை?.

பொது மக்கள் கதிர் வீச்சினால் பாதிக்கப்படுவார்களாம்...என்ன கரிசனம்?இதுவே ரஷ்ய அணுசக்தி கப்பல் என்றால்,இந்திய காம்ரேடுகள்(தோழர் சீத்தாராம் யெச்சுரி உட்பட) வாயை சிவப்பு திரவத்தினால் ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

இங்கே நம்ம கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையம்(2000MW) அமைக்கும் பணி வெகு வேகமாக‌ நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த விசயமே.

இதனால் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ மின்சாரம் கிடைக்கும்.பேச்சிபாறை அணையிலிருந்து ஒரு நாளைக்கு 30,891 M3/day அதாவது 3கோடி லிட்டர் தண்ணீரை அணுசக்தி உலைக்கு ப‌யன்படுத்தப் போகிறார்கள்.

இதன் மூலம் நம் உயிருக்கும் உலை வைக்கலாம்.அணுவினால் அல்ல...குடி நீரினால்.