11ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு-ஒரு பார்வை

Category :



30-12-2012 அன்று  காலை சிதம்பரம் "அண்ணாமலைப் பல்கலைக்கழக" அரங்கில் நுழைந்தவுடன், சிறு அதிர்ச்சி உண்டானது. காரணம்  அரங்கில் சுமார் 50 பேர் தான் இருந்தனர். அதில் விற்பனையாளர்களும் அடங்கும். விழாவில் சுமார் 1000பேராவது இருப்பார்கள் என நம்பி இருந்தேன்.



இணையத் தமிழனின் நேரடிப் பங்களிப்பு ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதில் அளிப்பது மிக கடினம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சரிவர ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.சரியான அளவில் விளம்பரப்படுத்தப் படவில்லை. மாணவர்களின் பங்களிப்பும் இல்லை.

அரங்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் மிக குறைவே.

மக்கள் கூடத்தில் 30-12-2012 அன்று காலையில் நடைபெற்ற நிகழ்வில்'' விக்கி காமன்சு" பற்றி தமிழ்ப்பரிதி அவர்கள் விளக்கமளித்தார். நல்ல தகவல்களை அறிய முடிந்தது.

அடுத்த மாநாட்டையாவது , மக்கள் பங்களிக்கும் வகையில் அமைத்தால் உபயோகமாக இருக்கும்.

சிற்பி இராசன் அவர்களின் "சிறப்பு விழா"....

Category :



இந்த வருடமும் சிற்பி அவர்களின் பிறந்த நாள் விழா (25-12), அவரின்

அன்பு தோழர்களினால் புதுவை அருகில் அமைந்துள்ள‌ "ஆரோவில்" நகரில் நடத்தப்பட்டது.



சிறப்பு விருந்தினராக "தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் இராமகிருட்டிணன் கலந்து கொண்டார்.



புதுவை நகர தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். மதிய உணவு அறுசுவையுடன் பரிமாறப்பட்டது. பின்னர் சிற்பி அவர்களின் மந்திரவித்தை "மேஜிக்" நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்வு முழுநாளும் இனிமையான முறையில் நடந்தேறியது.தோழர்கள் அனைவரும் சிற்பி இராசனின் மக்கள் பணி சிறக்க வாழ்த்தினர்.

மதுரை ஆதினம் ஆனார் சி.டி சாமியார்!

Category :

நித்யானந்தா சாமியார் தற்போது மதுரை ஆதினத்தின் மகா சந்நிதானம் ஆக ஆக்கப்பட்டுள்ளது பலருக்கு
அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டிருப்பது உண்மை.


ஒரு குற்றப் பிண்ணனி கொண்டிருப்பவரை ஏன்
நியமனம் செய்தனர் எனப் புரியவில்லை.

கூடிய சீக்கிரம் தகவல் வரும் என நம்பலாம்.


தமிழினம் வெட்கி தலைகுனிய வைத்திருக்கிறார்கள்.

தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்‍,வித்யாலயா‍‍?

Category :

முன்பு தனியார் பள்ளிகள் "இங்கிலிஷ் கான்வன்ட்" என்றும்
"மேல் நிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,ஆரம்பப்பள்ளி" என்று
ஆர‌ம்பிப்பார்கள்.

ஆனால் தற்போது "இந்தி பெயர்களினால்" தமிழ் மக்களை கலப்படம்
செய்கிறார்கள்.இது வியாபாரம் என்றபோதிலும், இந்த அக்கிரமத்தை எதிர்த்து
குரல் கொடுப்பது நம் கடமை.

இந்த‌ வியாபார‌த்தை செய்வ‌து வேறுயாரும‌ல்ல‌...த‌மிழ‌ர்க‌ள் தான்.

குறிப்பாக கடலூர்/புதுச்சேரியில் இய‌ங்கும் ப‌ள்ளிக‌ளைப் பாருங்க‌ள்;

1.ஆச்சாரியா சிக்க்ஷா ம‌ந்திர்
2.ஆதித்யா வித்யாஷ்ர‌ம‌ம்
3.ச‌ர‌ஸ்வ‌தி வித்யால‌யா
4.ராமகிருஷ்னா வித்யாச‌லா
5.சார‌தா வித்யால‌யா
6.அர‌பிந்தோ வித்யால‌யா
7.அக்க்ஷ‌ர‌ வித்யாஷ்ர‌ம‌ம்

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்?

Category :

"சமச்சீர் கல்வி"யை தூக்கி வீசியுள்ளது புதிய அரசு.சமீபத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்துள்ளனர்.இதைப்பற்றி இனிமேல் தான் "சிறப்பு நிபுனர் குழு"அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


இதில் அரசியல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.கலைஞர் கொண்டுவந்தார்
என்பதற்காகக் தான் இது நிராகரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.புதிய அரசுக்கு கலைஞர் மேல் வெறி என்றால்,அதை அவர் பற்றிய பாடங்களை நீக்குங்கள்,அதற்காக அச்சடித்து விற்பனைக்கு வர உள்ள நிலையில் அனைத்தையும் பாழாக்குவது பாவச்செயல்.இதில் "பல நூறு"கோடி ரூபாய் மக்களின் வரிப்பணமும் வீணாக்கப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமச்சீர் பாடப்புத்தகங்களை எழுதியது சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழு...அதை தூக்கி வீசுவது அவர்களை "செருப்பால்"அடிப்பது போலானது.

கடைசி வெறி:
அதிமுக ஆட்சிக்காக தன் நாக்கை காணிக்கை அளித்த பெண்மணிக்கு "அரசு வேலை"கொடுத்து தன் எல்லையை மீண்டும் மீறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்
தமிழக முதல்வர்.

உதவி செய்யவேண்டுமெனில் தன் கட்சி அலுவலகத்தில் பணி கொடுத்து
பல ஆயிரம் ஊதியம் கொடுத்தால் பெருமைப் படலாம்.

படம் உதவி:அம்புலிமாமா

கலைஞரே போதும்?இன்னும் மவுனம் ஏன்??

Category :

போதும் கலைஞரே,போதும்....இனியும் தி.மு.க வை அழிக்காதீர்கள்.

தயவு செய்து கட்சிப் பணியிலிருந்து விலகி, அண்ணாவின் கட்சியை
காப்பாற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.
இனியும் உங்கள் "குடும்ப ஊழல்களுக்கு" கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.


இந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.
சுயமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.

கட்சியின் அடுத்த தலைவனை உடன்பிறப்பு தேர்ந்தெடுக்கட்டும்,
இதுதான் உண்மையான தி.மு.க தொண்டணின் விருப்பம்.அதனால்

தயவு செய்து அரசியலிலிருந்து விலகுங்கள்.

இனியும் "ஒருவர் சிறை சென்றுவிட்டதாலேயே குற்றவாளியாகிவிடமாட்டார்"
என நாக்கை சுழற்றாதீர்.

நாங்கள் பட்டது போதும்...கலைஞரே!!!!

கார்ட்டூன் உதவி: மதி
நன்றி:தினமணி

புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?

Category :

New Secretariat building for sale!

ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.


அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்
விற்பனைக்கு வர உள்ளது.

"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த
வாடகைக்கும் கிடைக்கும்.

கடைசி வெறி:
மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.