அப்பாவும்,அம்மாவும்...ஆகாய விமானத்தில்!

Category :

ஆமாம்.இரு வாரங்களுக்கு முன் விடுமுறையில் பெங்களூரு‍‍க்கு குடும்ப‌ உறுப்பினர்கள்(நான்,மனைவி,மகன்,அப்பா & அம்மா) அனைவரும் விமானத்தில் சென்றோம்.

என் சின்ன ஆசையாய் இருந்தது,நிறைவேறியது..,மிக்க மகிழ்ச்சியாக‌ இருந்தது.கடலூரிலிருந்து பேருந்தில் நான்கு மணி நேர பயணம் செய்து,அரை மணி நேரத்தில் (Airbus-A320)பெங்களூரு வந்து சேர்ந்தோம்.
அம்மாவும்,அப்பாவும் மிகவும் ஆச்சரியமடைத்தனர்...முதல் விமான பயணம் சுலபமாய் முடிந்தது,கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
முதலில் நன்றி சொல்ல வேண்டியது...திரு.கோபிநாத் ,அவர்களின் ஏர் டெக்கான்-க்குத் தான்.அவர்தானே நடுத்தட்டு, கீழ் தட்டு மக்களையும் விமானம் ஏற வைத்தவர்.

பெங்களூரில் மூன்று தினங்கள் இருந்து அனைத்து இடங்களையும் பார்த்தோம்.பெங்களூரு‍-ம் சூடாகத் தான் இருந்தது.கணிணி நிறுவனங்கள் நிறைய வந்ததினால்,மிகப் பெரிய மாற்றம் எதையும் அடித்தட்டு மக்கள் பெற்று விடவில்லை என்பதை காண முடிந்தது.நிறைய பல அடுக்கு கட்டிடங்கள் வழியெங்கும் தென்பட்டன.கட்டிடத் தொழிலில் பெரும்பாலும் தமிழர்கள் தான் இருந்தனர்.

ப‌ய‌ண‌ம் இனிமையாய் முடிந்து வீடு திரும்பினோம்.

க‌டைசி வ‌ரி:

இனிய‌ ச‌கோதர‌,ச‌கோத‌ரிக‌ளே உங்க‌ள் பெற்றோர்க்கு ஏதேனும்செய்ய‌ விரும்பினால் த‌ய‌வு செய்து அவர்க‌ள் ஆரோக்ய‌மாய்,ந‌ல்ல‌நிலையில் உள்ள‌ போதே செய்யுங்க‌ள்.

காசு வ‌ரும் ,போகும்....?ஆனால்...!!!