நானும் சாமி தான்?

Category :



வேசம் போட்டு
வேடிக்கை காட்டினேன்,
வயிற்றை நிரப்ப...
வீதி,வீதியாய் விதியே
என்று திரிந்தாலும்....
ஐம்மது பைசா,அதிகமாய்
போனால் ஒரு ரூபாய்,இலவசமாய்
ஏளனப்பார்வையும்,பேச்சும்.

என்னை மாதிரியே ஒரு
சிலை தெருவோரம்..,
அங்கே வ‌ருப‌வ‌ர்க‌ள்
வேடுக்கை காட்டுவார்க‌ள்...?
அங்கேயும் ஒரு உண்டி உண்டு,
அத‌ன் வாய் நிர‌ம்பி,
அரைகுறையாய் சிரித்த‌து,
ஒரு "ப‌த்து ரூபா" நோட்டு.