நண்பனா? மனைவியா??..ஏன் இந்த முடிவு???

Category :

ஒரு வருத்தம் தரும் கடந்த வார நிகழ்வு,.

இரு இனைபிரியா கேரள நண்பர்கள்,ஜாபர் அலி மற்றும் சந்தோஷ்(27).கடந்த ஒன்பது வருடங்களாக ஒரே செருப்பு கடையில் பணி,இதன் மூலம் நட்பு இறுக்கமானது.பொருளாதார உயர்வுக்கு என போனவாரம் சந்தோஷ்
ஷார்ஜா(Sharjah)சென்றார்,வேலை கிடைத்து அல்ல.வேலை தேட.
பொதுவாகவே மலையாளிகள் வேலை தேட துபாய் போவது என்பது சாதாரணம்.இப்பொது விமான டிக்கட்டும் மலிவான விலையில்
கிடைப்பதால் "விசிட் விசா"வில் வேலை தேடும் படலம் .

சந்தோஷ் ஷார்ஜா வந்த இரு தினங்களில் ,ஜாபர் அலி நண்பன் சந்தோஷ்-இன் பிரிவினால் துயரப்பட்டு ,மன இறுக்கத்தினால் மாரடைப்பினால் மரணம் அடைகிறார்.இத்துயரச் செய்தியை மற்ற நண்பர்கள் சந்தோஷ்-க்கு தெரிவிக்க அதிர்ச்சியடைகிறார்.உடனே நாடு போகவேண்டும் என ஷார்ஜா-வில்
ரூமில் உடன் தங்கியோரிடம் தெரிவிக்கிறார்.அவர்கள் சமாதானப்படுத்தி,
இப்போது தான் நிறைய செலவு செய்து வந்துள்ளாய்.,இன்னும் வேலை கூட கிடைக்கவில்லை என்று கூறி உண்மையை புரிய வைக்கின்றனர்.

ஆனால் மனம் கேட்காமல்,இரவைக் கூட தள்ள இயலாமல் ,தூக்கில் தொங்கிவிடுகிறார்.
ஒரு நண்பனின் நட்பு மரணத்திலும் தொடர்கிறது. கொஞ்சம் யோசனை செய்திருந்தால் சந்தோஷ் இன்று வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

இதில் கொடுமையான துயரம் என்னவெனில் தன் மனைவியையும்,ஒன்பது மாத குழந்தையையும் அநியாயமாய் கடைசி நேரத்தில் கூட மறந்தது.பாவம் ஜெயஷ்ரி(சந்தோஷ் மனைவி),தற்போது ஒன்பது மாத குழந்தையுடன்...(கணவனின் உயிரற்ற உடலுக்காக.,காத்துக் கொண்டு)



கடைசி வரி:
  • இந்த மாதிரி அனாவசிய தற்கொலைகள் இப்போது துபாயில் அதிமாகிவருகிறது.சிறு ஏமாற்றத்தை கூட தாங்க இயலாத ஒரு அவல வாழ்க்கை முறையை இப்பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுத்திவிட்டதோ எனக் கவலை கொள்ளவேண்டி உள்ளது.
  • குறைந்தது மாதத்தில் 20 தற்கொலைகள் நிகழ்கின்றன,அதிகமானோர் மலையாளிகளே!
நன்றி:காமுதிஆன்லைன்,கேரளா மற்றும் கலீஜ் டைம்ஸ்

சிக்-குன் -குனியாவும்,சின்ன பொண்ணு ஆயாவும்!

Category :

பெயர்:சின்ன பொண்ணு
ஊர்:கடலூர்
உறவு:ஆயா(அம்மாவின் அம்மா)
வயது:80+
தற்போது:தனியார் மருத்துவமனையில்
காரணம்:சிக்-குன் -குனியா

சாதாரண காய்ச்சல் என்றுதான் ஆயாவை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்து சென்றார்,அம்மா.மருத்துவர் மருந்து,மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார்.
பின்னர் இரண்டு நாட்கள் மருந்து,சாப்பிட்டும் ஒன்னும் முன்னேற்றம் தெரியாததால்,மீண்டும் படையெடுத்தார்கள்,மருத்துவரை நோக்கி.,

இப்போது மருத்துவர் சொன்னது,சிக்குன் குனியா என்று.பத்து நாட்களுக்கு இப்படித்தான் சுரமும்,மூட்டு வலியும் இருக்கும் என்றார்.
ஆயாவினால் நிற்க கூட முடியாமல்,அம்மா மற்றும் என் துணைவி உதவி கொண்டு தான்,"ஒன்னுக்கும்,ரெண்டுக்கும்" போனார்கள்.

இரவில் ஒரே சத்தம்,பினாத்தல்,ஆயாவினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.அடுத்த இரண்டு நாட்களில் கால்கள் ரொம்ப வீங்கிவிட்டன.மருத்துவரிடம் போனபோது,பெரிய
மருத்துவமனையில் சேர்த்துவிடுங்கள் என கூறிவிட்டார்.

பின்னர் கடலூரில் புகழ்பெற்ற மருத்துவமனையில் சேர்த்து,இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றன.இன்னமும் ஆயாவினால் பழய நிலைக்கு வர இயலவில்லை.

சுரம் விட்டு,விட்டு வருகிறது,அதனால் மருத்துமனையில் இருக்க வேண்டிய கட்டாயம்.அதிகாரம் செய்து கொண்டிருந்த ஆயா இப்போது அடங்கி ,ஒடுங்கிப் போய்.....

"ஆறு பேர் உள்ள வீட்டில்,ஆயாவை மட்டும் ஏன் கடித்தது அந்த கொசு?".யாராவது,மருத்துவ ஜீவிகள் பதில் சொல்வீர்களா?

கடைசி வரி:
சிக்-குன் -குனியா பற்றி
"Chikungunya fever is a viral disease transmitted to humans by the bite of infected mosquitoes. Chikungunya virus (CHIKV) is a member of the genus Alphavirus,in the family Togaviridae. CHIKV was first isolate
from the blood of a febrile
patient in Tanzania in 1953, and has since been identified repeatedly in west,central and southern Africa and many areas
of Asia, and has been cited as
the cause of numerous human epidemics
in those areas since that time.

The virus circulates throughout much of Africa, with transmission thought
to occur mainly between mosquitoes and monkeys."

சென்னையில் நடந்த வலைப்பதிவர் மாநாடு!

Category :


சென்ற வாரம் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் எத்தனை தமிழ் வலைப்பதிவர்கள் கலந்து கொண்டனர்.ஏன் இது பற்றிய விரிவான செய்தி தமிழ்மணத்தில் யாரும் போடவில்லை? இதை இனைந்து நடத்தியது யாகூ இந்தியாவாமே?நேற்று தற்செயலாய் பிபிசி தமிழ் இணையத்தை பார்த்த போது தான்,இது பற்றிய செய்தி தெரியவந்தது. யாராவது கலந்து கொண்டவர்கள் ,விரிவான பதிவை போடலாமே? ஆர்வமுடன் காத்திருக்கிறேன். -முகு-

குறிப்பு:
இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தகவல்:BBC Tamil

பாவப்பட்ட மந்திரி,ஆஸ்கர் பெர்ணான்டஸ்!

Category :



எந்த இலாகாவும் இல்லாமல், ஒரு நல்ல மத்திய மந்திரி நீண்ட
காலமாக மத்திய அரசில் இருக்கிறார்.ஏன் என்று புரியவில்லை?

நம் பிரதம மந்திரியும்,சோனியா அம்மையாரும் ஏன் இதுவரை ஒரு இலாகா கூட
ஒதுக்காமல் உள்ளனர் என்றும் புரியவில்லை.

அந்த மந்திரி என்ன வேலை செய்து,சம்பளம் பெறுகிறார்?யாராவது விளக்குங்களேன்?அவராலுமும் சுய மரியாதை இல்லாமல்,சும்மாவே எப்படி இருக்க முடிகிறது?

அரசியலில் இதெல்லாம்,சகஜம் என்றாலும் ஏன் யாரும் கேட்கவில்லை?
அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?யாராவது பதில் சொல்லுங்கள்!

இதில் என்ன கொடுமை என்றால் சில மந்திரிகள் இன்னமும் நாலைந்து துறைகளை
சுமந்து கொண்டு ஒன்னும் செய்யாமல் உலாவுவது!

அன்புடன்,
முகு