நாணயம் தவறியவர்கள்!!!

Category :

இப்போதெல்லாம் தினசரி செய்திதாள்களைப் படிக்கும்போது அடிக்கடி தென்படும் கால் பக்க,அரை பக்க பொது விளம்பரத்தைக் காணலாம்.
அவ் விளம்பரம் இதோ,''வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத நாணயம் தவறியவர்கள்".

குறிப்பாக கடன் வாங்கியவரின் புகைப்படமும்,கூடுதலாக ஜாமீன் கொடுத்தவர் புகைப்படமும் இனைந்திருக்கும்.அவர்கள்பெற்ற கடன் எதோ கோடி ரூபாய் என நினைக்காதீர்கள்.வெறும் 50ஆயிரம் முதல் 1லட்சம் வரை தான்.

இதற்குத் தான் இந்த மக்கள் வங்கிகள்(பொதுத் துறை வங்கிகள்)நடுத்தர மக்களுக்கு ''நாணயம் தவறியவர்கள்'' என பட்டம் வழங்குகின்றன.குறிப்பாக இந்த வங்கிகள் கடன் கொடுக்கும் முன்பே,விசாரித்து தான்,கடன் கொடுக்கின்றன.நல்ல வருவாய்,நிரந்தர பணி போன்றவகளை வைத்துதான் அனுமதி வழங்குகின்றனர்.ஏதோ போதாதகாலம்,கடன் பெற்றவர் அசலை கட்ட தாமதமாகும் போதுதான் இந்த வங்கிகள் இந்த மாதிரி அநாகரீக விளம்பரங்களை வெளியிடுகின்றன.

கூர்மையாக கவனித்தால் ,கடன் பெற்றவர்கள் பெரும்பான்மையானோர்,வீடு கட்டத் தான் வாங்கி இருப்பர்.ஏன் இச் சிறு தொகைக்கு இவ்வளவு செலவு செய்து,விளம்பரம் செய்கின்றனர்?.வங்கிகள் விளம்பர செலவையும் கடனில் ,அசிங்கமாக சேர்த்துக் கொள்வர்.ஆனால் இதே வங்கிகள் தொழிலதிபர்களுக்கு 100கோடி,200கோடி கொடுத்துவிட்டு நாய்(இந்த வார்த்தைக்கு மன்னியுங்கள்) மாதிரி அவர்கள் பின்னால் திரிவர்.
அந்த ஏமாற்றிய தொழிலதிபர், நாமம் சாத்தினாலும்,இவர்கள் இந்தமாதிரி அருவருப்பான பொது விளம்பரம் செய்வதில்லை.மாறாக நீதித் துறை(கோர்ட்)மூலம் தான் மனு செய்கின்றனர்,சொத்துகளை ஏலம் இட.

இன்றும் எத்தனையோ ஏமாற்றிய தொழிலதிபர்கள்,அரசியல் வாதிகள் மரியாதையுடன் தான் வலம் வருகின்றனர்.அவர்களைப் பற்றி இதே வங்கிகள் ''நாணயம் தவறியவர்'' என விளம்பரம் வெளியிடும் தைரியம் இருக்கிறதா?.,

அப்படி தைரியமாக வெளியிட்டால்,தினசரி செய்திதாளில் செய்திபோட முடியாது,ஏமாற்றிய தொழிலதிபர்களின் விளம்பரமே ....தினசரி சீரியல் மாதிரி போகும்.வங்கி அதிகாரிகளே, தைரியம் இருந்தால்.......செய்யுங்கள் பார்ப்போம்.

கடைசி வரி:
அய்யா டிபிஆர் ஜோசப்,அய்யா மெலட்டூர் நடராஜன்,அய்யா ஞானவெட்டியான் அவர்களே நீங்களாவது பதில் சொல்லுங்கள்.

இந்தியர்களே நமக்கு என்ன ஆச்சு?

Category :

இது கிரிக்கெட் பற்றிய பதிவு அல்ல.ஏன் நம் மக்கள் அகம்பாவத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பதின் தாக்கம் தான் இது?.அமெரிக்க,பிரிட்டிஷ்காரன் மாதிரி ஏன் நாம் மார்த்ட்டிக்கொள்ள வேண்டும்.,ஆணவம் கொள்ள வேண்டும்.

இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோ?ஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை?

ஒத்துக் கொள்கிறேன்,இந்தியனை இணைக்கிறது.அதே சமயம் அடுத்தவனை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்.புரிந்து கொள்ளுங்கள் இது நம் மண்ணின் விளையாட்டல்ல மேலும் இது ஒரு வர்த்தக விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள எத்தனை காலம் ஆகப்போகிறதோ நமக்கு?

ஏதன்ஸ் 2004 ஒலிம்பிக்...மெடல் பட்டியலில்..இந்தியாவை பாருங்கள்,
0-தங்கம்,1-வெள்ளி,0-வெங்கலம்.ஆனால் ஒரு சிறிய நாடான க்யுபா-வை பாருங்கள் 9-தங்கம்,7-வெள்ளி,11-வெங்கலம்.

இந்தியர்களே ,கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு தான்,ஆனால் அதையும்விட மேன்மையான விளையாட்டுக்கள் உள்ளதை மறவாதீர்.
இந்தியா 2020 மகிழ்ச்சி தான்.....வலிமையான இந்தியா.....வளமையான இந்தியா....அதற்கு முன்பு அடுத்த பீஜிங் 2008-ஒலிம்பிக் போட்டி-யில்
2-தங்கமாவது வாங்க முயற்சி செய்வோம்(காசு கொடுத்து அல்ல)?.
அது கூட முடியவில்லை-யெனில் அர்த்தமே இல்லை.

இந்தியனே, விளையாட்டை விளையாட்டாய் பார்ப்போம்.அது தான் மனித நாகரீகத்தின் அடையாளம்.