தமிழ்மண்ணில் வித்யாஷ்ரமம்‍,வித்யாலயா‍‍?

Category :

முன்பு தனியார் பள்ளிகள் "இங்கிலிஷ் கான்வன்ட்" என்றும்
"மேல் நிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி,ஆரம்பப்பள்ளி" என்று
ஆர‌ம்பிப்பார்கள்.

ஆனால் தற்போது "இந்தி பெயர்களினால்" தமிழ் மக்களை கலப்படம்
செய்கிறார்கள்.இது வியாபாரம் என்றபோதிலும், இந்த அக்கிரமத்தை எதிர்த்து
குரல் கொடுப்பது நம் கடமை.

இந்த‌ வியாபார‌த்தை செய்வ‌து வேறுயாரும‌ல்ல‌...த‌மிழ‌ர்க‌ள் தான்.

குறிப்பாக கடலூர்/புதுச்சேரியில் இய‌ங்கும் ப‌ள்ளிக‌ளைப் பாருங்க‌ள்;

1.ஆச்சாரியா சிக்க்ஷா ம‌ந்திர்
2.ஆதித்யா வித்யாஷ்ர‌ம‌ம்
3.ச‌ர‌ஸ்வ‌தி வித்யால‌யா
4.ராமகிருஷ்னா வித்யாச‌லா
5.சார‌தா வித்யால‌யா
6.அர‌பிந்தோ வித்யால‌யா
7.அக்க்ஷ‌ர‌ வித்யாஷ்ர‌ம‌ம்

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்?

Category :

"சமச்சீர் கல்வி"யை தூக்கி வீசியுள்ளது புதிய அரசு.சமீபத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்துள்ளனர்.இதைப்பற்றி இனிமேல் தான் "சிறப்பு நிபுனர் குழு"அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


இதில் அரசியல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.கலைஞர் கொண்டுவந்தார்
என்பதற்காகக் தான் இது நிராகரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.புதிய அரசுக்கு கலைஞர் மேல் வெறி என்றால்,அதை அவர் பற்றிய பாடங்களை நீக்குங்கள்,அதற்காக அச்சடித்து விற்பனைக்கு வர உள்ள நிலையில் அனைத்தையும் பாழாக்குவது பாவச்செயல்.இதில் "பல நூறு"கோடி ரூபாய் மக்களின் வரிப்பணமும் வீணாக்கப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமச்சீர் பாடப்புத்தகங்களை எழுதியது சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழு...அதை தூக்கி வீசுவது அவர்களை "செருப்பால்"அடிப்பது போலானது.

கடைசி வெறி:
அதிமுக ஆட்சிக்காக தன் நாக்கை காணிக்கை அளித்த பெண்மணிக்கு "அரசு வேலை"கொடுத்து தன் எல்லையை மீண்டும் மீறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்
தமிழக முதல்வர்.

உதவி செய்யவேண்டுமெனில் தன் கட்சி அலுவலகத்தில் பணி கொடுத்து
பல ஆயிரம் ஊதியம் கொடுத்தால் பெருமைப் படலாம்.

படம் உதவி:அம்புலிமாமா

கலைஞரே போதும்?இன்னும் மவுனம் ஏன்??

Category :

போதும் கலைஞரே,போதும்....இனியும் தி.மு.க வை அழிக்காதீர்கள்.

தயவு செய்து கட்சிப் பணியிலிருந்து விலகி, அண்ணாவின் கட்சியை
காப்பாற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.
இனியும் உங்கள் "குடும்ப ஊழல்களுக்கு" கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.


இந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.
சுயமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.

கட்சியின் அடுத்த தலைவனை உடன்பிறப்பு தேர்ந்தெடுக்கட்டும்,
இதுதான் உண்மையான தி.மு.க தொண்டணின் விருப்பம்.அதனால்

தயவு செய்து அரசியலிலிருந்து விலகுங்கள்.

இனியும் "ஒருவர் சிறை சென்றுவிட்டதாலேயே குற்றவாளியாகிவிடமாட்டார்"
என நாக்கை சுழற்றாதீர்.

நாங்கள் பட்டது போதும்...கலைஞரே!!!!

கார்ட்டூன் உதவி: மதி
நன்றி:தினமணி

புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?

Category :

New Secretariat building for sale!

ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.


அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்
விற்பனைக்கு வர உள்ளது.

"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த
வாடகைக்கும் கிடைக்கும்.

கடைசி வெறி:
மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.

வைகோ நடைப்பயணம்?

Category :

வைகோ அவர்களே உங்களின் பணி இனிமேல்
தான் தமிழகத்துக்கு தேவை.


ஒரு அண்ணா கசாரே(Anna Hazare) தலைநகரை கலக்கி பொது
வாழ்வில் வெற்றி பெரும் போது,உங்களால் ஏன் முடியாது?

ஆரம்பியுங்கள் உங்களின் நடைப்பயணத்தை."சேது சமுத்திர திட்டம்"
நிறைவேற வாருங்கள் வீதிக்கு.

தமிழனுக்கு உங்களை விட்டால் வேறு "தலைவன்" இல்லை.மக்கள் காத்திருக்கிறோம்......வாருங்கள் வைகோ அவர்களே!
வாருங்கள்!!

படம் உதவி:சங்கொலி இதழ்

கிரிக்கெட் வியாதி- கடைசி நாள்!

Category :

அப்பாடா...கிரிக்கெட் என்ற பெரு வியாதி
இன்றுடன் முடியப்போகிறது அல்லது மடியப்போகிறது.

121 கோடி மக்களின் இந்தியாவும், 2கோடி மக்களைக்
கொண்ட (பல்லாயிரம் தமிழர்களை கொன்ற) இலங்கையும்
இறுதிப் போட்டியில் விளையாடப்போகின்றன.


உலகத்தின் பெரும்பாலான ஊடகங்களின் பிரதானச் செய்தி
இதுதான்.இந்திய ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
மூன்று நாளாய் இதே அளப்பரை தான்....தலைநகர் முதல்.....தள்ளாடும்
ஊராட்சி வரை.

கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு சிறப்புத் தகுதி ஏதேனும் உண்டா?
உண்டு, அது அடிமைகளுக்கு ஆங்கிலேயன் விட்டுச் சென்ற எச்ச, மிச்சம்.

இன்று கூட "இங்கிலாந்து" நாட்டில் மேட்டுக்குடி மக்களைத்தவிர
யாரும் ரசிப்பதில்லை.அனைவருக்கும் பிடித்தது, கால்பந்து விளையாட்டு தான்.

அதனால் தான் பெர்னார்ஷா கூறினார்.... 22 முட்டாள்கள் ஆடுவதைப் பார்க்கும்
22,000 முட்டாள்களின் விளையாட்டு" என்று.

இன்று இந்த விளையாட்டு வியாபாரிகளினால், வியாபாரத்திற்காகத்தான் விளையாடப்படுவதை அனைவரும் அறிவர்.ஆனால் இந்த மோகம் தான் இன்னும் குறையவில்லை.என்று மாறுமோ?

கருத்துப்படம்:நெட்டில் சுட்டது

நன்றி:யாரோ

போர்க்குற்றவாளி ராசபக்ச இந்தியா வருகை?

Category :

ஈழப்போரின் இறுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை
படுகொலை செய்த இலங்கை அதிபர் "கிரிக்கெட்" காண
வருகிறார்.

மானமுள்ள மும்பை தமிழின உணர்வாளர்களே,உங்கள் வரவேற்பை
சனிக்கிழமையன்று அவருக்கு காட்டுங்கள்.

நன்றி:கூகுள் படம்

தினத்தந்தி-யில் புரியாத (இந்தி) விளம்பரம்?

Category :

இன்றைய தினத்தந்தியில் ஒரு இந்தி மொழி விளம்பரம் வந்திருக்கிறது.
பொது மக்கள் நலன் கருதி வெளியிட்டது இந்திய தொடர்வண்டித் துறை
(ரயில்வேத் துறை) எனத் தோன்றுகிறது.

ஒவ்வொருவரும் ஒரு அடையாள அட்டையை தூக்கிப்பிடித்துக்
கொண்டு காட்சி தருகின்றனர்.இதில் கடவுச் சீட்டு,ஓட்டுனர் உரிமச்சீட்டு,
வாக்காளர் அடையாள அட்டை என அடங்குகிறது.

இது யாருக்கான விளம்பரம் எனத் தெரியவில்லை.தமிழக மக்களின்
மொழி தமிழ்தான்; இந்தியில் வெளியிட்டால் யாருக்குப் புரியப் போகிறது.?
ஏன் இந்த பொது விளம்பரத்தை ஆங்கிலம்,தமிழ் போன்ற புரியக் கூடிய
மொழியில் வெளியிடப்படவில்லை?

காசுக்காக ஏன் தினத்தந்தி புரியாத மொழியில் வெளியிட வேண்டும்.இந்த
விளம்பரம் பற்றி தினத்தந்தி ஆசிரியர் குழுவுக்கு தெரியுமா?"தமிழ் வெல்க" என்ற அடைமொழியை வைத்து வியாபாரம் செய்யும் தினத்தந்திக்கு இது சரியா?

இந்திய ரயில்வே துறையின் இந்த எதேச்சிகாரத்திற்கு குரல் கொடுங்கள்
தமிழர்களே? இந்தியில் விளம்பரம் செய்யும் போது உடன் மக்களுக்குப்
புரியும் மொழியிலும் இடச் சொல்லுங்கள்.

இது இந்திய தேசம், "இந்திதேசம்" அல்ல!

புரட்சியாளனான ஒரு வலைப்பதிவர்?

Category :

இப்போது நடந்துவரும் எகிப்து மக்களின்
எழுச்சியின் ஒரு பங்கில், ஒரு வலைப்பதிவரும் உண்டு.


எதேச்சிகார அரசை வீழ்த்த வீறுகொண்ட ஒரு இளைஞன்
தான் கானிம்(Wael Ghoneim), கூகுள்(Google Inc, Dubai) நிறுவனத்தின்
துபாய்(Dubai) பகுதி மேலாளர்.போராட துபாயிலிருந்து, கெய்ரோ(Cairo) போனவன்.

வாங்கும் சம்பளத்தில் சொகுசு வாழ்க்கைக்கு மட்டும் ஆசைப்படாமல்
தன் மக்களின் எழுச்சிக்கும் பாடுபடத் துணிந்த ஒரு மாவீரன்.
ஒரு வாரம் எகிப்து சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமை இயக்க
போராளிகளினால் விடுவிக்கப்பட்டவர்.

கானிம் , நீ ஒரு உண்மைப் போராளிடா.உன்னைப் போற்றுகிறோம்,
ஒரு வலைப்பதிவனாய் பெருமிதம் கொள்கிறோம்.

நன்றி:அல்மசுரிஅல்யும்.காம்
தகவல் மூலம்:www.almasryalyoum.com

மறக்கக் கூடாதவர்கள்:பாவாணர்

Category :

மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தமிழின் சிறப்பையும், தொண்மையையும்,மேன்மையையும் சிறப்புற பரப்பியவர் தேவநேய பாவாணர் அவர்கள்.

அய்யா அவர்களின் அகர முதலி தொகுப்பு என்றுமே அவரின் பெயர்
சொல்லும் அரும் படைப்பாகும்.அவரைப் போற்றும் நிகழ்வாகத் தான் சென்னை
அண்ணா சாலையில் " தேவநேய பாவாணர் அரசு பொது நூலகம்" அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய இளைஞர் சமுதாயம், பாவாணரையும் அவர் தமிழுக்கு ஆற்றிய
பணிகளையும் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

மொழிஞாயிறு தேவநேயப்பாணர் பற்றி முழுமையான தகவல்களைக் கீழ்க்கண்ட
தளங்களில் காணலாம்;

http://www.devaneyam.org/
http://leaders.senthamil.org/devaneya_pavanar.htm
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D


படம் உதவி:
கூகுள் படம்

#tnfisherman- 6605 எதிர்ப்பு தானா? த்தூ...

Category :

மறுபடியும் சூடு ,சொரணையற்ற இனம் "தமிழினம்" என்பதை
நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் மீனவன் செத்தும் நமக்கு உணர்வு வரவில்லையெனில்
நாம் பிணம் தான்;நடமாடும் பிணம்.

வீதிக்குத் தான் வர முடியவில்லை; இணையத்தில் கூடவா நம்மால் கூட முடியாது.


ஒரு வாரமாகியும் பெட்டிசன் ஆன்லைன் (www.petitiononline.com/TNfisher/petition.html மூலம் பதிவான எதிர்ப்பு வெறும் 6605 தான் ;#tnfisherman ட்வீட்டுகள்(Tweets) வெறும் 6000 சொச்சம் தான்.


தமிழகத்தில் சுமார் 20லட்சம் பேர் தினமும் இணையம் பயன்படுத்தியும் உணர்வு கொஞ்சம் கூட இல்லை.எகிப்தை பார்த்து பிரமிக்கிறோம்;ஒரு பெண் அனுப்பிய
செய்தி தான் அங்கு தீப்பொறியானது.

ஆனால் இங்கு சவத்தை அனுப்பியும், கோபம் வரவில்லையெனில் நாம் "மனிதர்களில்லை,மனிதர்களில்லை".


தரவு உதவி:
http://www.whatthetrend.com/, http://www.wthashtag.com/ ,
www.twitter.com/tnfishermen , http://www.petitiononline.com/

யார் தான் குற்றவாளி- தி.மு.க-வின் புதுமொழி?

Category :

கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
ஊழல் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்,

கொலை செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
திருட்டு செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

பொய் சொன்னதாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
வன்புணர்வு (கற்பழிப்பு) செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

விபச்சாரம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,
குற்றம் செய்ததாலேயே ஒருவர் குற்றவாளியாகி விடமாட்டார்,

அப்ப யார் தான் குற்றவாளி?
கேள்வி கேக்குற மக்கள் தான்?

படம் உதவி:டூன்பூல்.காம்,பதிவர் சதிசு,கூகுள் படம்

கடிதம் கலைஞருக்கு எழுதியது!

Category :

உங்கள் பொய்களைச்
சுமந்து செல்ல முடியவில்லை ;


கடிதம் போடுகிறீர்,போய்ச் சேருமிடமோ
புதுடில்லி குப்பைத் தொட்டி.

தயவுசெய்து அடுத்தக் கடிதத்தை
"சிங்களவனுக்கு" அனுப்புங்கள்,
பொய்யுடன் பொசுங்கிப் போகிறேன்?

பூக்கிறது புதிய நாடு-தென் சூடான்

Category :

உலகின் புதிய நாட்டை உருவாக்கி சாதனை படைத்த சூடானிய மக்கள் மிகுந்த
மகிழ்ச்சியில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.


கடந்த 09-01-2011 முதல் 15-01-2011வரை நடந்த வாக்குப்பதிவில் 98%பேர் தனிநாட்டுக்கான வாக்கை செலுத்திருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் சூடானுக்கு ஒரு கண்ணீர்க் கதை உண்டு.எப்படி ஈழத்தமிழன்
பிரிட்டிசு காலனி ஆதிக்கத்தினால் பாதிக்கப்பட்டானோ அவ்வாறு. ஆப்ரிக்காவின் பெரிய நாடு சூடான்.வடக்கில் முசுலிம் மதத்தினர் பெரும்பான்மையாகவும்
தெற்கில் கிருத்துவ மதத்தினரும் வாழ்கின்றனர்.


ஆங்கிலேயர் தன் வசதிக்காக தெற்கு, வடக்கு சூடானை இணைத்து ஆட்சி
புரிந்து விட்டு,போகும்போது வடக்கு சூடானிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து
விட்டு வெளியேறினர்.அப்போதே தென் சூடானிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும்
ஆளுமை இன்மையால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.ஏனெனில் இரு சூடானுக்கும் மொழி,பண்பாடு மற்றும் கலாச்சாரம் வேறுபட்டது.

அதன்பின் நடந்தது முப்பது வருட உள்நாட்டு யுத்தம்....லட்சக்கணக்கான மக்கள் பலிகடா ஆயினர்.

இங்கிலாந்து நாட்டின் காலனியாதிக்கத்தில் சூடான் இருந்தது சுமார் 57 ஆண்டுகள்.400 மொழிகளுக்கு மேல் பேசப்பட்டு வந்தாலும் பெரும்பான்மையானோர் பேசுவது அரபி மற்றும் ஆங்கிலம் மட்டுமே.சூடான் விடுதலை பெற்றது 01- சனவரி 1956.

கடைசியாக 2002 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான பேச்சுவார்தையின் முடிவாக
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த உடன்பாடு ஏற்பட்டது.ஐ.நா வின் சிறப்பு குழுவினரால் இந்த வாக்கெடுப்பு சனவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது கடைசி வெற்றி அறிவிப்புக்காக காத்திருகின்றனர்.

தென் சூடானின் சுதந்திர அறிவிப்பு வெளியிடும் நாள் 14-பிப்ரவரி- 2011. அன்று
உலகின் புதிய நாடாக உலா வரப்போகிறது தென் சூடான்.

வாழ்த்துகள் தென் சூடான்.

நன்றி:கீற்று.காம்,எழுத்து:எண்ணத்துப்பூச்சி
படம் உதவி:AFP

அடையாளம் இழக்கும் தமிழன்?

Category :

தமிழர் திருநாள் “பொங்கல் விழா” தொலைக்காட்சி விழாவாக மாறிவிடுமோ எனக் கவலை கொள்ள வைக்கிறது.
தமிழனுக்கு தொடர்பில்லாத “தீபாவளி”யை தூக்கிவைத்து கொண்டாடும் தமிழன், தன் விழாவான பொங்கலை மறந்தது ஏன் என்று புரியவில்லை? தமிழன் தன் வரலாற்றை மறந்ததும் வேதனையான நிகழ்வாகும்.

இந்தி”யத்தினால் தமிழன் அடையாளம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் ,அவர்களின் மொழி,பண்பாடு அழியாமல் காப்பதுதான் நாகரிக மனிதனின் செயல்.
தமிழன் வேறு இனத்திற்கும், மொழிக்கும் எதிரி அல்ல.ஆனால் தமிழன் சொரணை அற்றவன் என்று அடித்தளத்தினை அழிக்க முனைந்தால் அது இந்தியா போன்ற கூட்டாட்சி அரசுக்கு நல்லதல்ல.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கூட தன் உற்சாகத்தை இழந்து கொண்டுள்ளதை அனைவரும் அறிவர்.

இந்த வருடம் பொங்கல் வாழ்த்து அட்டை வாங்க கடலூர், புதுச்சேரி என அலைந்தும் ஒரு சில அட்டைகளை மட்டுமே வாங்க முடிந்தது. அதுவும் வாழ்த்து ஆங்கிலத்தில் தான் இருந்தது. பார்த்தவுடன் நொந்து போனேன்… தமிழன் தன் உறவுக்கு அனுப்பும் வாழ்த்தும் ஆங்கிலத்தில்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சாலையெங்கும் விற்ற வாழ்த்து அட்டைகள் இன்று மறைந்துவிட்டன. கணணி உலகத்தில் அனைத்தும் மின் வாழ்த்தாய் அமைந்துவிட்டது என்றாலும் , வாழ்த்து அட்டைக்கு எதுவும் ஈடாகாது,வீட்டினர் அனைவரும் பார்த்து மகிழ வாழ்த்து அட்டையால் மட்டுமே முடியும்.
இதில் கொடுமை என்னவென்றால் காதலர் தினத்துக்கு ஏராளமான கடைகளின் வாழ்த்து அட்டை விற்கப்படுகிறது.

தமிழன் இனியும் தூங்கிக்கொண்டும், தொலைக்காட்சிக்கும் அடிமையாக இருந்தால்…..வரலாறு சிரிக்கும் நம் இனத்தைப் பார்த்து.

நம் பக்கத்து (தண்ணீர் தராத ) மாநிலமான கேரளாவின் மலயாளத்தினர் எப்படி திரு”ஓணம்”பண்டிகையை கொண்டாடுகின்றனர் எனப் பார்த்து அங்கலாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

மதம்,சமயம் கடந்து தன் இனத்தின் விழாவாக மலயாளிகள் ஓனம் கொண்டாடும் போது நாம் ஏன் விமரிசையாக பொங்கலைக் கொண்டாட கூடாது?

அடுத்த ஆண்டாவது அனைத்து தமிழர்களும்(மதம் கடந்து) தமிழர் திருநாளைச் சிறப்பாக கொண்டாட முயற்சிப்போம்.

எழுத்து:எண்ணத்துப்பூச்சி
நன்றி:தமிழ்ச்சரம்.காம்