"டாஸ்மாக்" தமிழன்?

Category :


தமிழ் பேச்சு
எங்கள் மூச்சு,
தமிழ் பேசு
தங்க காசு.
தமிழன் பேச்சு
தெளிந்தால் போச்சு!


கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்:
Tamil Nadu State Marketing Corporation Limited(TASMAC)டாஸ்மாக்-க்கு ஒரு நல்ல தமிழ் பெயர்
வையுங்கள்.தமிழன் சாகட்டும்,
தமிழ் வாழட்டும்!

செம்மொழி மானாட,மயிலாட!

Category :




தமிழுக்கு செம்மொழி அலங்காரம் வந்தாலும்,இன்னும் தமிழ்நாட்டில் ஆட்சி
அதிகார மொழியாக பரவலாக்கப்படவில்லை.இன்னும் நீதிமன்றத்தில் தமிழ்
தடுமாறிக்கூட நுழைய முடியவில்லை.முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால்
தமிழுக்கும்,தமிழனுக்கும் செய்திருக்கலாம்.ஆனால் அவர் குடும்ப பிரச்சினையில் தடுமாறியதால், தமிழனை நடுத்தெருவில் விட்டுவிட்டார்.


தமிழுக்கு எந்த மொழியை விடவும், செம்மொழி தகுதி அதிகம் உண்டு,அதற்கு
நம் இலக்கியங்களும்,வரலாறுகளும் சாட்சி.ஆனால் தமிழ்நாட்டில் மொழியை
வைத்து அரசியல் நடப்பது புதிதன்று.

ஆனால் தற்போது தமிழ் பேசுபவன் நிலையைப் பாருங்கள்,ஒரு பேரழிவை
சந்தித்த ஈழத் தமிழினம் படும் அவலம் "நான் தமிழன்" என்று கூறவே
கேவலமாக உள்ள்து.

தமிழுக்கு மாநாடு நடத்தினால் தமிழனுக்கு பெருமையே.ஆனால் கோவையில்
என்ன நடக்கப்போகிறது என்று எழுதித் தெரிய வேண்டியதில்லை.அது கலைஞருக்கு ஒரு பாராட்டு விழாவாகத் தான் நடக்கப்போகிற‌து.

இந்த மாநாட்டினால் கோவை நகர், புது சாலைகளையும், தண்ணீர் வசதிகளையும் தற்காலிகமாக பெற்றுள்ளது.இதுதான் இந்த மாநாட்டினால்
பெற்ற பயனாக இருக்கும்.

"செம்மொழி கீதம்" எங்கும் எதிரொலிக்கின்றன.ஏதோ இரைச்சலுக்ககு நடுவே சில தமிழ் வார்த்தைகளை சேர்த்துள்ளனர்.கலைஞரின்
இந்த வரிகளுக்கு " நோபல் பரிசு" கொடுக்க சில "கைப்புள்ள உடன்பிற‌ப்புகள்"மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

வாழ்க தமிழ்மொழி! வெல்க தமிழினம்!!

குறிப்பு:

மாநாட்டில் "குஷ்பு" அக்கா",செம்மறித் தமிழர்கள் என்ற தலைப்பில்
பேசலாம்.ஏன் என்றால் "அவருக்கு கெமிஸ்ரி" நல்லா தெரியும்.

நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!

Category :




நாம் எந்த இனம்?தமிழனா,திராவிடனா,இந்தியனா!இந்த கேள்விக்கு விடையை யாராவது அறிஞர் பெருமக்கள் தந்தால் நல்லது.தற்போது "மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி"
ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

சூன் 2010 முதல், சூலை மாதம் 15ஆம் தேதிக்குள் கணக்கெடுப்பு
எடுக்கப்பட உள்ளது.ஆனால் அரசாங்கம் இது பற்றி தெளிவான
விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

ஆனால் தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில்
இனம்,இந்தியா என்றே அச்சடிக்கப்பட்டு உள்ளது.வேறு நாட்டவர் என்றால்
மட்டுமே, அடுத்த வரியில் எழுத வழி செய்துள்ளனர்.

ஆகையினால் நம் தேசிய இன அடையாளத்தை பதிவு செய்ய இயலாது
என்றே தோன்றுகிறது.

பெரியார் திராவிடர் கழகம் "திராவிடர்" என்று பதிய கேட்டுக்கொண்டுள்ளது.
நாம் தமிழர் இயக்கம் மற்றும் பழ.நெடுமாறன் "தமிழர்" என்று பதிய‌
கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் இது பற்றிய சட்ட முன் மாதிரியை, யாராவது விளக்கினால் நல்லது.

இந்தியன் என்று ஒரு இனம் இல்லை என்று மட்டும் உறுதியாக கூற முடிகிறது.
மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது கேட்கப்படும் கேள்விகள்;
1.Name of person
2. Relationship to head
3.Father's name
4. Mother's name
5. Spouse's name
6. Sex
7. Date of birth
8. Marital status
9. Place of birth
10. Nationality as declared
11. Present address of usual residence
12. Duration of stay at present address
13. Permanent residential address
14. Occupation/ Activity
15. Educational qualification


Please read the following text which is given in National population register(NPR);

Q.11: NATIONALITY AS DECLARED*
Indian-1, Others write name of Country
5.21.1 Nationality for each of the enumerated person has to be
asked from the respondent and recorded. You may come
across cases where the nationality of the persons in the
same household would be different. Therefore, you must
probe this question for each individual carefully to get the
correct information. Please record the nationality of the
respondent as declared by her/him for each of the persons
being enumerated. Do not get into any argument with the
respondent regarding this [Figure. 5.31 and 5.32].


Please inform the respondent to give correct Nationality of each person in the household.
She/he can be penalised for giving any incorrect/false information.


*Note : It may be noted that nationality declared by respondent does not confer
any right to Indian Citizenship

கொலைஞருக்கு மீண்டும் பாராட்டு விழா...கடித கவி?

Category :

கலைஞரை மகிழ்விக்க மீண்டும் ஒரு விழா நடைபெற இருப்பதாக‌
அறிய முடிகிறது.இந்திய அரசின் தபால் துறையே(அஞ்சல்) "கடித கவி"என்ற சிரிப்பு விருதை வழங்க இருக்கிறது.

இந்திய தபால் துறை நட்டத்தில் இயங்கும் இந்த காலகட்டத்தில்,தமிழக‌
முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடர்ந்து எழுதும் கடிதங்களினால் தான்
தாக்கு பிடிப்பதாக் கூறுகிறார்கள். கலைஞர் அனுப்பும் மனுக்கள்,கடிதங்களுக்கு
மத்திய அரசு கண்டு கொள்வதில்லை என்று தெரிந்தும்,விடாப்பிடியாக‌
எழுதுவது ஒரு கலையாகவே கொண்டுள்ளார்.

தமிழினம்,தமிழக உரிமை எனும் போது கடிதம் எழுதும் கலைஞர்,தன்
குடும்பத்துக்கு பதவி வாங்க சக்கர நாற்காலியில் டில்லிக்கு ப‌டையெடுப்ப‌து
அனைவ‌ரும் அறிந்த‌தே....!

ஆகவே அனைத்து தமிழர்களும் ஒரு கடுதாசி மூலம் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.முத‌லில் வ‌ரும் 100 க‌டித‌ங்க‌ளுக்கு "க‌லைஞ‌ரின் பெண் சிங்க‌ம்"காட்ட‌ப்ப‌டும்.