மனிதம் மறைகிறதா?????!!!!!!

Category :

இப்போதெல்லாம் செய்திகள் ஆரவாரப்படுத்தப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.குறிப்பாக '' நொய்டா'' பிஞ்சுக் கொலைகள், கணவனைக் கொல்லும் கள்ள காதலிகள்,சகோதரனை கொலை செய்யும் உடன் பிறந்தோர் என அடுக்கிச்செல்லலாம்.

காரணம் ஆயிரம் சொல்லலாம்,.மனிதனின் மாறும் வாழ்வு முறை,மிகைப் படுத்தப்படும்தொலைக்காட்சி செய்திகள்,பணம் தான் வாழ்க்கையின் அளவுகோல் என திரிக்கும் பத்திரிகைகள்.

எல்லோருக்குமே ஆசை உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் என்று.,இதற்கு தடை எனும் போது மனிதன் மிருகத்தை விட கேவலமான செயல்களை செய்கிறான்.

ஊடகங்கள் எப்படி சொகுசாக வாழலாம்.,குறுக்கு வழி என்ன? போன்ற தகவல்களைத்தான் நம்காதில் ஊற்றுகின்றன.விட்டுக் கொடுக்கும் குணம் மழுங்கிக் கொண்டே போகிறது.நம்முடையதொலைக்காட்சி சீரியல்கள்,ஒழுக்கமான வாழ்க்கை முறையையே கேள்விக்குறியாக்குகின்றன.
பகுத்தறிவு கொஞ்சம் கூட பயன்படுத்தப்படுவதில்லை.,படித்தவர்கள் தான் ஜோதிடம்,பெயர் மாற்றம்என சொல்லி ஊரை ஏமாற்றி,பணத்தை சுருட்டுகின்றனர்.மருத்துவர்களோ .,மனிதாபிமானத்தைமறந்து விட்டு பணம் என்ற மாயை-யில்.

இந்தியா எங்கு செல்கிறது எனத் தெளிவாக கூறமுடியவில்லை?.ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி,மறுபுறம் அடித்தட்டு மக்களின், அடிப்படை தேவை கூட பூர்த்தியாகாமை....ஆங்கில புத்தாண்டைகூட அடித்துக் கொண்டு கொண்டாடும் அவலம்.,

கடலூர் அருகே டிசம்பர் 31ஆம் தேதி நடந்த நிகழ்வு., கொடூரமானது.,
நள்ளிரவு 12.00மணிக்கு ஒரு இளைஞர் கூட்டம்,ரோட்டில் போவோரையெல்லாம் நிறுத்தி இனிப்புகொடுக்கின்றனர்.,அப்போது சக அடித்தட்டு இளைஞர் இருவர், கேலி செய்ய இனிப்பு கொடுக்கிறீர்களா? என கேட்கப் போய் கொலையில் முடிந்த கொடூரமான நிகழ்வு அது.அதன் பின் ஒரு வாரத்திற்கு அங்கு அமைதி பாழானது.

புரிந்து கொள்ளல் கூட புதிராகிப் போனது தான் கொடுமை.

கடைசி வரி:
மனிதம் புரிந்து கொள்வோம்,மனித உறவுகளை வளர்ப்போம்.

சகோதரிகளே ஒரு மார்கழி எச்சரிக்கை???

Category :

இரு தினங்களுக்கு முன் பக்கத்து தெருவில் நடந்த நிகழ்விலிருந்து,எங்கள் வீட்டை அதிகாலையிலேயே அலங்கரித்த மார்கழி கலர்''கோலம்'' ,இப்போது அலங்கோலமாகிவிட்டது.

அதிகாலை சுமார் 5 மணிக்கு பக்கத்து தெருவில் இருக்கும் (எங்களுக்கு பழக்கமானவர்)கல்யாணமான பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ரோமியோசர்,புர் என்று மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளான்.சிறிது நேரம் கழித்து வண்டியில்வட்டமடித்தவன்,கோலத்தின் மேல் ஏற்றி,மிக அருகில் வந்து.,ஏதோ செய்ய முயன்றவனை,சுதாரித்து கொண்டு பக்கத்தி இருந்த தொடப்பத்தினால்(விளக்குமாரு) விளாசி இருக்கிறார்.,பயந்துபோனவன்.,உதையை தாங்கும் ஆண்மையின்றி ஓட்டம் பிடித்திருக்கிறான்.பின்பு சத்தம் கேட்டுஅனைவரும் போன போது இந்த கதையை விவரித்தார் அந்த வீர பெண்மணி.அவர் புதுச்சேரியில்(பாண்டிச்சேரி) ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.தைரியத்தை பாராட்டி விட்டு வந்தோம்.

ஆனால் அடுத்த நாள் அதிகாலையில் என் மனைவி,என்னையும் எழுப்பினார்.,அவ்வளவு தைரியம் என்மனைவிக்கு!!!,கோலம் போடும் வரை காவலுக்கு நான்.,,,மார்கழி....எப்போது கழியுமோ என??????

சகோதரிகளே,காவலுக்கு ஆள் இல்லையென்றால் நல்ல கழி அல்லது வாட்டமான கற்களை பக்கத்தில்வைத்துக் கொள்ளுங்கள்.மேலே கண்ட ஆயுதங்களை பயன்படுத்த தயக்கம் எனில்,எடுங்கள் மிளகாய் பொடி,கலர் கோல மாவு மாதிரி இருக்கும்.இதை வைத்து ஒரு படையையே சமாளிக்களாம்.

எவனாவது விளையாட வந்தால் அவன் விதியை மாற்றுங்கள்.

கடைசி வரி:
சென்னை பெண்களுக்கு இந்த ''டிப்ஸ்''பயன்படாது.,ஏனெனில் அவர்கள் அடுக்கு மாடிகுடியிருப்பில் இருந்து கொண்டு ''சீரியல் கோலங்கள்'' மட்டுமே பார்ப்பதால்.....!!!