இறை"ஆண்மை" க்கு மருந்து?

Category :



இழந்த இறை ஆண்மையை மீண்டும் பெற:


விளம்பரம்:
150 வருட பாரம்பரிய குடும்ப மருத்துவர்களால் தயாரிக்கப்படும் இந்த மருந்தில் அரிய வகை மூலிகைகள் கலந்துள்ளதால் வீரியம் அதிகமாக இருக்கும்.இதற்கு பக்க விளைவும் கம்மி.


இது சிட்டு குருவி லேகியமோ,தங்க பஸ்மமோ கிடையாது...அதையும் தாண்டி புனிதமானது,....புனிதாமானது.!


இப்போது இந்த ஆண்மை மருந்திற்கு நல்ல கிராக்கி,பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது...குறிப்பாக அண்டை நாடுகளில்...

இந்த இறை "ஆண்மை" மருந்தின் பலன்கள்:


1.இது ராணுவ வீரர்களை "வெறியர்களாக்கும்".
2.துப்பாக்கி வீரியம் கொண்டு எழுந்து வெகு தூரம் பாயும்.
3.அப்பாவி பெண்களை, வல்லுறவு கொண்டு கொலை செய்யத் தூண்டும்.
4.இன அழிப்புக்கு மிகவும் ஏற்றது...குறிப்பாக பக்க விளைவு இல்லை.

எச்சரிக்கை:
1.இம் மருந்து போலி மருத்துவர்களாலும், போலி கலைஞர்களினாலும் விற்கப்படுவதால்......கவனம் தேவை.


2.இடைத்தரகர்களுக்கு தகுந்த "போபர்ஸ்" அளிக்கப்படும்.

கலைஞர்- ஒரு தமிழினக் கொலைஞர்!

Category :

கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி!
சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக் குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!
பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் -
உனை எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!
தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! -
எங்கள் முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான் சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்வெட்டிப் பழமொழிக்கு
சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன் சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களைஉன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா?
இல்லை கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!மடிந்தது உன் சூழ்ச்சி!
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!அடிவயிறு எரிகின்ற அன்னையரின்
வெப்பம் உனைஅப்படியே பொசுக்கட்டும்!

ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் -
இதுசத்தியம்! சத்தியம்! சத்தியம்!


-திவாகரன்,தம்பிரான் தோழர்-

கடைசி வரி:
இக் கவிதை தமிழொசை.காம் இணயத்தில் இருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.
நன்றி:திவாகரன்,தம்பிரான் தோழர் & www.tamiloosai.com

சில வரிகள், வலிக்கும் என்ன செய்ய...உண்மையை சொல்ல வேண்டியுள்ளதே?

மம்தாவிடம் மண்டியிட்ட காங்கிரசு!

Category :

காங்கிரசு ஒரு தேசிய கட்சி....ஆனால் மேற்குவங்கத்தில் ஒரு உதிரி கட்சியாகத் தான் மதிக்கப்படுகிறது.இல்லை, மிதிக்கப்படுகிறது...
தேர்தல் கூட்டணிக்கு திரிணாமுல் காங்கிரசுடன் பிச்சை எடுத்து 14 தொகுதிகளை பெற்றுள்ளது.

உத்திரபிரதேசத்தில் இன்னும் கேவலம்...6 தொகுதிக்கு மேல் உங்களுக்கு அருகதை இல்லை எனக் கூறிவிட்டனர் முலாயமின் சமாஜ்வாடி கட்சி.(மொத்த தொகுதிகள் 80)இதில் கொடுமை என்னவென்றால் ஒரு காலத்தில் காங்கிரசு செல்வாக்காக இருந்த மாநிலம்,இன்று செல்லாக் காசாக முன்னேறி உள்ளது.

காரணம் காந்தி,நேரு பேரை சொல்லி அரசியல் வியாபாரம் செய்ததினால்.

தமிழகத்தில் இவர்களுக்கு இருக்கும் "பெரும் ஆதரவு" அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் திமுக விடம் 20 தொகுதிக்கு பேரம் பேசுகின்றனராம்.இவர்களின் தகுதி இவர்களுக்கே தெரியாமல்....

உறவுகளே , காங்கிரசு கட்சிக்கு இது தான் கடைசி தேர்தலாக இருக்கட்டும்.இவர்களின் தமிழின விரோதத்துக்கு "வாக்குச்சீட்டால் வாய்க்கரிசி போட்டு" காங்கிரசை காணாமல் செய்வோம்.
அதுதான் தமிழனுக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது.

கற்பழிப்பு=பாலியல் வல்லுறவு?

Category :


ஈழத்தின் பாலியல் வல்லுறவும்,தமிழகத்தின் கற்பழிப்பும்!

கடந்த சில தினங்களுக்கு முன், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,நம்முடைய புலம் பெயர் சகோதரிகளின் பேச்சு ஆச்சரியமாக இருந்தது.


அவர்களின் "பாலியல் வல்லுறவு" பேச்சு கூட தெளிவாகவும்,ஆண்மைத்தனமாகவும் இருந்தது.இலங்கையில் நடைபெறும் இன அழிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்ற போதிலும் அவர்களின் அவலங்கள் இன்றும் வேடிக்கை தான் பார்க்கப்படுகின்றன,இந்த குருட்டு உலகத்தினால்.


இந்த அவலம்தான் " விடுதலைப் போராட்டத்தில்" அவர்களை போர்முனைக்கு இட்டுச் சென்றுள்ளது எனக் கூறலாம்.ஈழப் பெண்களின் வீரத் தியாகங்களும்,பங்களிப்பும் கண்டிப்பாய் வரலாற்றில் இடம்பெறும்.
புலம்பெயர் சகோதரிகளின் வார்த்தைகள் மிக்க நம்பிக்கை அளித்தன.அதுமாதிரி தமிழகப் பெண்களும் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.


இன்னும் கூட தமிழகத்தின் தினசரிகள் " கற்பழிப்பு" என்ற அசிங்கமான அர்த்தமற்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றன. எப்போது மாறுவோம் நாம்?

சிதம்பரம் வாங்கிய அவமானம்?

Category :

கடந்த ஒரு வாரமாக சட்டம், ஒழுங்கு மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் விசயமாக கர்நாடக முதல்வருடன் பேச்சுநடத்த முடியாமல் "மூக்குடைபட்டு" காத்துக் கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

மூன்று முறை தேதி குறித்தும், எனக்கு சொந்த தொகுதியில் மக்கள் பணி இருப்பதால் " நேரம்" இல்லை என்று சொல்லி சிதம்பரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.

சிதம்பரத்தின் "கை" கொஞ்சம் நீளம் தான்....மாநில முதல்வர்கள் இவரிடம் கையேந்தும் கூலிகள் என நினைத்து விட்டார் போலும்.
சட்டம்,ஒழுங்கு மாநில முதல்வரில் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால் சிதம்பரம் போன்றவர்கள் சோனியாவின் விசுவாசத்திற்காக எதையும் செய்வார்கள்.

அதுதான் மாநில முதல்வர்களுக்கு ஆலோசனை கூறி கடிதம் எழுதுவது.இது மாதிரி மாநில பிரச்சினையில் அதிகமாக மூக்கை நுழைப்பவர்களை மாநில முதல்வர்கள் கண்டிக்க வேண்டும்.அப்போது தான் சொரணை வரும்.

கடைசி வெறி:


படிக்கும் போது தமிழனை அவமானப்படுத்தி விட்டார்களே என எண்ண வேண்டாம்."காங்கிரசு காரன்" எப்போது தமிழனாக இருந்திருக்கிறான்?.

கைப்புள்ள கருணாநிதி!

Category :

வர, வர கலைஞருக்கு பதவி வெறியில்,காங்கிரசையும், அதன் தலைவியையும் பாராட்டு பாடுவதை பார்த்து காங்கிரசுகாரனே சிரிக்கிறான்.தன் குடும்பம்,தன் சுக போக நாற்காலி ஆசைக்காக, தன் தமிழினத்தையே காட்டிகொடுத்த துரோகி என்ற பட்டம் வரலாறு கண்டிப்பாய் கொடுக்கும்.பிரணாப் முகர்ஜி சொல்வதை கேட்டு புளகாங்கிதம் அடைந்து அறிக்கை விடுவது, ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்கு அழகல்ல.என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே, பிதற்றுவது கேவலம்.

இந்த பிரணாப் முகர்ஜி, பதவி சுகத்திற்காக "ராகுல் காந்தி"யை பிரதமர் என்று அறிவித்து, தன் அரிப்பை போக்கி கொண்டவர்.தன் விசுவாசத்தை காட்டிக் கொண்டவர்.

லாகூரில் (பாகிஸ்தான்)நடந்த தாக்குதலில்,சிறு காயம் பட்ட இலங்கை அணி வீரர்களுக்கும்,இலங்கைக்கும், இந்தியா....ஒப்பாரி வைக்கிறது.இலங்கைக்கு,இந்தியா என்ன தான் முட்டு கொடுத்தாலும்,அவர்கள் நம்மை ஆதரிக்க போவதில்லை.இது தான் வரலாறு.

இதே இந்தியா, நேற்று இலங்கை அரசின் தீவிரவாத தாக்குதலில் 57 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இவர்களில் பலர் குழந்தைகள்.இருந்தும் கண்டுக்கவில்லை, கண்டிக்கவில்லை.இதுதான் நியாயமா, தர்மமா......?
அரசு பயங்கரவாதத்தை, இந்தியா ஆதரிக்கிறதா?.....தமிழன் என்ன அவ்வளவு கேவலமானவனா??....இந்த பாவத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு.


இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட, தேர்தலில் எதிரிக்கு கூட ஓட்டு போடுவோம்.தமிழின துரோகிகள்"கைப்புள்ள" கருணாநிதி-க்கும்,காங்கிரசு காரனுக்கும் பாடம் புகட்டுவோம்.

கடைசி வெறி:
கலைஞர் கருணாநிதியின் தமிழின துரோகத்துக்கும்,அவரின் தேசிய ஒருமைப்பாட்டு இறையான்மைக்கும் அவருக்கு "கைப்புள்ள கருணாநிதி" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.இனி அனைத்து பதிவர்களும், கைப்புள்ள பட்டத்தை பயன்படுத்த வேண்டுகிறோம்.