கடலூரின் 20,000 கோடி கனவு - நாகார்ஜுனா ஆயில் கார்ப்பரேசன்?

Category : ,

நாகார்ஜுனா நிறுவனத்திலிருந்து நான் விலகி, இரண்டு மாதம் ஆகிவிட்டது. நாகார்ஜுனா சுத்திகரிப்பு நிறுவனத்தால் (Nagarjuna Oil Corporation Limited) கடலூர் மாறப்போகிறது, கடலூர் மக்கள் பயன் பெறப்போகிறார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. ஒரு அருமையான திட்டம் காலதாமதத்தினால்  ஏராளமானோர் நொந்து போய் உள்ளனர்.


கட்டுமானப்பணி, நிறுவனப் பணிகள், பாதியிலேயே நிற்பதினால் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. இதில் பணிபுரியும் பொறியாளர், மற்றும் நிர்வாக பணியாளர்கள் வெளியேறிய வன்னம் உள்ளனர்.


கடந்த 14 வருடங்களாக இதோ, அதோ வந்துவிடும், இன்னும் சில மாதங்களில் வந்துவிடும் என்ற நம்பிக்கையில்  காலம் சென்று கொண்டிருக்கிறது.
இதன் சிறப்பம்சமே, இதன் அமைப்புத்தான், கடலோரத்தில் அனைத்து வசதிகளுடன் இருக்கும் ஒரு அருமையான நில வடிவமைப்பு.நெய்வேலிக்கு அடுத்தபடியாக அதிக
பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக இது உருவாகலாம்.


இங்கு சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெய் மூலம் டீசல், பெட்ரோல், சமையல் வாயு(LPG) சுற்றி உள்ள அனைத்து மக்களுக்கும் உடனடியாக கிடைக்க இயலும்.


இன்னும் காலம் கடந்தால் , நிறைய இழப்பு ஏற்படும்…..கடலூர் காத்துக் கொண்டிருக்கிறது.

படம் உதவி:கூகுள், www.nocl.co.in & www.hydrocarbons-technology.com