ஆஞ்ஜநேயர் பாழாக்கும் பால்..?

Category :

அதிர்ச்சி அடைய வேண்டாம் மக்களே...உண்மை.

ஒவ்வொரு மாதமும் புதுவை அருகில் உள்ள "பஞ்சவடி"ஆஞ்ஜநேயருக்கு 1000லிட்டர் பால் ஊற்றி அபிசேகம் என்ற பெயரில் அத்தியாவசிய பொருளை பாழக்குகின்றனர் இதன் நிர்வாகிக‌ள்.

இவர்களை பக்தர்கள் என்பதை விட அயோக்கியர்கள் என்றுதான் கூற வேண்டும்.ஊரில் எத்தனையோ குழந்தைகள் பாலுக்கு பரிதாபத்தில் தவிக்கும் போது....இவர்களின் செயலை வேறு எப்படி கூறுவது.
ஒரு லிட்டர் பால் 12ரூபாய்....ஆக ரூ.12,000/= பாலை அத்தியாவசிய பொருளை வீணாக்குவது குற்றம் தானே...

ரசிகர்கள் தான் தங்கள் கட்‍ அவுட் கதாநாயகனுக்கு பால்ஊற்றி அசிங்கம் செய்வதை பார்த்திறுக்கிறோம்.ஆனால் இந்த செயலை என்னவென்று சொல்வது....

ஒருசில தினசரிகள் இந்த பால் படத்தையும் பத்திரிகையில் போட்டு பக்தர்களை பாழாக்கி கொண்டுள்ளன.
கடைசி வெறி:
இதில் என்ன கூத்து என்றால், இந்த அபிசேகம் உலக‌ நன்மைக்காக நடத்தப் படுகிறதாம்.
Thanks: Dinamalar Photo