வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்?

Category :

"சமச்சீர் கல்வி"யை தூக்கி வீசியுள்ளது புதிய அரசு.சமீபத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவை எடுத்துள்ளனர்.இதைப்பற்றி இனிமேல் தான் "சிறப்பு நிபுனர் குழு"அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.


இதில் அரசியல் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.கலைஞர் கொண்டுவந்தார்
என்பதற்காகக் தான் இது நிராகரிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.புதிய அரசுக்கு கலைஞர் மேல் வெறி என்றால்,அதை அவர் பற்றிய பாடங்களை நீக்குங்கள்,அதற்காக அச்சடித்து விற்பனைக்கு வர உள்ள நிலையில் அனைத்தையும் பாழாக்குவது பாவச்செயல்.இதில் "பல நூறு"கோடி ரூபாய் மக்களின் வரிப்பணமும் வீணாக்கப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமச்சீர் பாடப்புத்தகங்களை எழுதியது சிறப்பு வாய்ந்த ஆசிரியர் குழு...அதை தூக்கி வீசுவது அவர்களை "செருப்பால்"அடிப்பது போலானது.

கடைசி வெறி:
அதிமுக ஆட்சிக்காக தன் நாக்கை காணிக்கை அளித்த பெண்மணிக்கு "அரசு வேலை"கொடுத்து தன் எல்லையை மீண்டும் மீறி அதிர்ச்சி அளித்திருக்கிறார்
தமிழக முதல்வர்.

உதவி செய்யவேண்டுமெனில் தன் கட்சி அலுவலகத்தில் பணி கொடுத்து
பல ஆயிரம் ஊதியம் கொடுத்தால் பெருமைப் படலாம்.

படம் உதவி:அம்புலிமாமா

கலைஞரே போதும்?இன்னும் மவுனம் ஏன்??

Category :

போதும் கலைஞரே,போதும்....இனியும் தி.மு.க வை அழிக்காதீர்கள்.

தயவு செய்து கட்சிப் பணியிலிருந்து விலகி, அண்ணாவின் கட்சியை
காப்பாற்ற உதவுங்கள்.அது தான் தி.மு.க உடன் பிறப்பின் எதிர்பார்ப்பு.
இனியும் உங்கள் "குடும்ப ஊழல்களுக்கு" கட்சியை பலிகடா ஆக்காதீர்கள்.


இந்த மாபெரும் இயக்கத்திற்கு வந்த பழிச்சொல் உங்களுடன் களையட்டும்.
சுயமரியாதையை இழந்து இனியும் தமிழினத்தை அவமானப்படுத்தாதீர்.

கட்சியின் அடுத்த தலைவனை உடன்பிறப்பு தேர்ந்தெடுக்கட்டும்,
இதுதான் உண்மையான தி.மு.க தொண்டணின் விருப்பம்.அதனால்

தயவு செய்து அரசியலிலிருந்து விலகுங்கள்.

இனியும் "ஒருவர் சிறை சென்றுவிட்டதாலேயே குற்றவாளியாகிவிடமாட்டார்"
என நாக்கை சுழற்றாதீர்.

நாங்கள் பட்டது போதும்...கலைஞரே!!!!

கார்ட்டூன் உதவி: மதி
நன்றி:தினமணி

புதிய தலைமைச் செயலகம் விற்பனைக்கு?

Category :

New Secretariat building for sale!

ஆமாம்.புதிய சட்டசபை, பழைய கட்டிடமான புனித ஜார்ஜ் கோட்டைக்கே போக உள்ளது.மேலும் இந்த புதிய கட்டிடம் அதிமுக அம்மாவுக்கு
புதுச்சேரி போலிசுகாரரின் "தொப்பி"போலுள்ளதால் பிடிக்கவிலையாம்.


அதனால் அம்மா இந்த கட்டிடத்தில் நுழைவது என்பது கடினமே.ஆகையால்
விற்பனைக்கு வர உள்ளது.

"சர்க்கசு வியாபாரிகள்" யாராவது ஆசைப்பட்டால் குறைந்த
வாடகைக்கும் கிடைக்கும்.

கடைசி வெறி:
மக்களின் வரிப்பணம் எப்படி பாழாய்ப்போகிறது பாருங்கள்.