நிலம் வீழ்ந்தால் என்ன?

Category :

தமிழீழ மண்
பகைவனிடம் வீழ்ந்த போது
பதறின பல இதயங்கள்....
விடியல் தொலைந்திடுமோ என,
பதறாதே தமிழா...,விடுதலை
என்ன விளையாட்டுப் போட்டியா?.

விதைக்கு "உரம்" போடுகிறான்,
வீரியமாய் வெடித்தெழ,
அவலத்தை வேடிக்கை பார்க்கும்
உலகின் "குருட்டு" கண்களை நாம்
பார்க்க வேண்டாம்.அவைகள்
மதத்தைத் தான் பார்க்கின்றன....

விடியல் பிறந்தே தீரும்,
அது தானே நம் மூச்சு.
மனத்தை ஆக்கிரமிக்காமல்,
நம் நிலத்தை அவன்
என்ன செய்வான்..?

பிறக்கும் ஈழம்...
அதை பெற்றெடுப்போம்,
விரைவில் "சிசேரியன்"
மூலமாகவாவது.

2 comments:

யூர்கன் க்ருகியர் said...

கொஞ்சம் ஆறுதல்!

Jackiesekar said...

பிறக்கும் ஈழம்...
அதை பெற்றெடுப்போம்,
விரைவில் "சிசேரியன்"
மூலமாகவாவது. its really good line. we pray for them.

Post a Comment

கருத்தைப் பகிர: